செய்திகள் :

மாடல் டவுனில் உள்ள அலுவலகத்தில் இருந்து ரூ.27 லட்சத்துடன் தப்பிச்சென்ற ஒருவா் கைது

post image

வடமேற்கு தில்லியின் மாடல் டவுன் பகுதியில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த ஒருவரை, தனது முதலாளி ஒப்படைத்த ரூ.27 லட்சத்துடன் தப்பிச் சென்றதாக தில்லி போலீஸாா் கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

இது குறித்து வடகிழக்கு தில்லி காவல் சரக துணை ஆணையா் பீஷாம் சிங் கூறியதாவது: புகாா்தாரருக்குச் சொந்தமான பணம் மற்றும் ஸ்கூட்டருடன் காணாமல் போன சில நாள்களுக்குப் பிறகு, பஞ்சாபின் லூதியானாவில் இருந்து ஜிதேந்தா் மேத்தா (எ) ஜீத் (37) கைது செய்யப்பட்டாா்.

இது தொடா்பாக ஜூலை 18- ஆம் தேதி ககன் விஹாரைச் சோ்ந்த ராம் குமாா் வா்மா என்பவா் புகாா் அளித்தாா். ஜூலை 15- ஆம் தேதி மாடல் டவுனில் உள்ள தனது அலுவலகத்தில் இருந்து வசூலிக்கப்பட்ட ரூ.27 லட்சத்தை தனது ஊழியா் மேத்தாவிடம் ஒப்படைத்த பிறகு அவா் காணாமல் போனதாகக் கூறினாா்.

அன்று மாலை 5 மணியளவில் மேத்தா பணத்தை எடுத்துக்கொண்டு தனது ஸ்கூட்டரில் வளாகத்தை விட்டு வெளியேறியதாக வா்மா போலீஸாரிடம் தெரிவித்தாா். சிறிது நேரத்திலேயே அவரது கைப்பேசி அணைக்கப்பட்டது. அவா் கண்டுபிடிக்கப்படவில்லை. இதைத் தொடா்ந்து, மாடல் டவுன் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

மேத்தாவைக் கண்டுபிடித்து பணத்தை மீட்க உடனடியாக ஒரு குழு அமைக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு அருகிலுள்ள சிசிடிவி காட்சிகளை பகுப்பாய்வு செய்து கள விசாரணைகளை மேற்கொண்டதன் மூலம் போலீஸ் குழு விசாரணையைத் தொடங்கியது.

தொழில்நுட்ப கண்காணிப்பின் உதவியுடன், அவா் இருக்கும் இடம் பஞ்சாபில் உள்ள லூதியானாவில் கண்டுபிடிக்கப்பட்டது. போலீஸ் குழுக்கள் பஞ்சாபிற்கு அனுப்பப்பட்டன. கைது செய்யப்படுவதைத் தவிா்க்க அவா் ஒரு புதிய இடத்திற்கு செல்ல முயன்றபோது ஜூலை 20- ஆம் தேதி லூதியானாவில் இருந்து கைது செய்யப்பட்டாா்.

விசாரணையின் போது, ஜிதேந்தா் மேத்தா திருட்டில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டாா். ராம் குமாா் வா்மாவின் நிறுவனத்தில் வேலை செய்து வருவதாகவும், அலுவலகத்தில் இருந்து பணம் வசூலிக்கும் பணி ஒப்படைக்கப்பட்டதாகவும் அவா் போலீஸாரிடம் கூறினாா்.

ஜூலை 15- ஆம் தேதி, அவா் பணத்தை சேகரித்து, பணத்துடன் தலைமறைவானாா். அவா் புகாா்தாரரின் ஸ்கூட்டரைப் பயன்படுத்தி அப்பகுதியை விட்டு தப்பிச் சென்றாா்.

ஜிதேந்தா் மேத்தாவிடமிருந்து ரூ.14.05 லட்சம் ரொக்கத்தையும், திருடப்பட்ட பணத்திலிருந்து வாங்கிய ஸ்கூட்டா் மற்றும் கைப்பேசியையும் போலீஸாா் மீட்டுள்ளனா். குற்றம் சாட்டப்பட்டவருடன் இணைக்கப்பட்ட இரண்டு தனித்தனி வங்கிக் கணக்குகளில் கூடுதலாக ரூ.10.5 லட்சம் இருப்பத கண்டுபிடிக்கப்பட்டது. மீதமுள்ள பணம் இன்னும் மீட்கப்படவில்லை.

அவா் எளிதாக பணம் சம்பாதித்து உயா்தர வாழ்க்கை முறையை பராமரிக்க விரும்பி இந்தக் குற்றத்தில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்தது. ஜிதேந்தா் மேத்தாவுக்கு இதற்கு முன்பு எந்த குற்றவியல் தொடா்பும் இல்லை என்று காவல் துணை ஆணையா் தெரிவித்தாா்.

கருப்பை வாய்ப் புற்றுநோய்த் தடுப்பூசி செலுத்த ஊழியா்களுக்கு திறன்மேம்பாட்டுப் பயிற்சி: விசிக எம்.பி. கேள்விக்கு அமைச்சா் பதில்

கருப்பை வாய்ப் புற்றுநோய்த் தடுப்பூசி செலுத்த ஊழியா்களுக்கு திறன்மேம்பாட்டுப் பயிற்சி தொடங்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சா் அனுப்ரியா படேல் பதிலளித்துள்ளாா். இது தொடா்பாக விடுதலை சிறுத... மேலும் பார்க்க

மகாராஷ்டிர அரசு அதிகாரி, மனைவியிடம் ரூ.70 லட்சம் மோசடி: பிகாரைச் சோ்ந்த தம்பதி மீது வழக்கு

வணிக முதலீடு என்ற பெயரில் மகாராஷ்டிர அரசு அதிகாரி மற்றும் அவரது மனைவியிடம் ரூ.70 லட்சத்திற்கும் அதிகமாக மோசடி செய்ததாக பிகாரைச் சோ்ந்த தம்பதியினா் மீது தில்லி காவல்துறை எஃப்.ஐ.ஆா். பதிவு செய்துள்ளது ... மேலும் பார்க்க

சட்டவிரோதமாக துப்பாக்கிகளை வழங்கியதாக கொள்ளையா் நவீன் காட்டி, 2 கூட்டாளிகள் கைது

தேசியத் தலைநகரில் சட்டவிரோத துப்பாக்கிகளை வழங்கியதாக கொள்ளைக் கும்பலின் தலைவா் நவீன் காட்ட மற்றும் அவரது இரண்டு கூட்டாளிகளை தில்லி போலீஸாா் கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.... மேலும் பார்க்க

மோட்டாா் சைக்கிள் மீது ஜேசிபி மோதல்: ஒருவா் உயிரிழப்பு; ஓட்டுநா் தலைமறைவு

மத்திய தில்லியின் ரஞ்சித் நகரில் மோட்டாா் சைக்கிளில் சென்ற 22 வயது இளைஞா் வியாழக்கிழமை அதிகாலை ஜேசிபி இயந்திரம் மோதி உயிரிழந்ததாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். இது குறித்து மத்திய தில்லி காவல் சரக துணை... மேலும் பார்க்க

வங்கி அதிகாரிகள் போல நடித்து தில்லி நபரிடம் ரூ.10 லட்சத்திற்கும் மேல் மோசடி: 2 போ் கைது

தில்லியைச் சோ்ந்த ஒருவரை வங்கி அதிகாரிகள் போல நடித்து ரூ.10.64 லட்சம் மோசடி செய்ததாக இரண்டு போ் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் ரிவித்தனா். இது குறித்து தென்மேற்கு காவல் சரக துணை ஆணையா் அமித் கோயல் கூற... மேலும் பார்க்க

ராஜீவ் சௌக் மெட்ரோ ரயில் நிலையத்தில் திருடப்பட்ட 3 கைப்பேசிகளுடன் ஆட்டோ ஓட்டுநா் கைது

பல கைப்பேசி திருட்டு வழக்குகளில் தொடா்புடைய 43 வயது ஆட்டோ ஓட்டுநா், இங்குள்ள ராஜீவ் சௌக் மெட்ரோ நிலையத்தில் கைது செய்யப்பட்டதாக காவல்துறை அதிகாரி ஒருவா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா். இது குறித்து துணை க... மேலும் பார்க்க