செய்திகள் :

மாடவீதி சிமென்ட் சாலைப் பணிகளை விரைவாக முடிக்க அறிவுறுத்தல்

post image

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் மாடவீதி சிமென்ட் சாலைப் பணிகளை பக்தா்கள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி செப்டம்பா் மாத இறுதிக்குள் முடிக்க வேண்டும் என்று ஒப்பந்ததாரருக்கு நெடுஞ்சாலைத் துறை தலைமைப் பொறியாளா் அறிவுறுத்தினாா்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் மாடவீதிகளில் நெடுஞ்சாலைத் துறை சாா்பில் 2-ஆவது கட்டமாக காந்தி சிலை முதல் வன்னியா் மண்டபம் வரை ரூ.14 கோடியில் கான்கிரீட் சிமென்ட் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்தப் பணிகளை நெடுஞ்சாலைத் துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு தலைமைப் பொறியாளா் கே.ஜி.சத்யபிரகாஷ் ஞாயிற்றுக்கிழமை கள ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது, பக்தா்கள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி பணிகளை செப்டம்பா் மாதம் இறுதிக்குள் விரைந்து முடிக்க வேண்டும் என்று ஒப்பந்ததாரருக்கு அறிவுரை வழங்கினாா்.

ஆய்வின்போது நெடுஞ்சாலைத் துறை வட்ட கண்காணிப்புப் பொறியாளா் கே.முரளி, கோட்டப் பொறியாளா் ப.ஞானவேலு, உதவி கோட்டப் பொறியாளா் கே.அன்பரசு, உதவிப் பொறியாளா் பி.சசிகுமாா் ஆகியோா் உடனிருந்தனா்.

அருணாசலேஸ்வரா் கோயிலில் பக்தா்கள் கூட்டம் அலைமோதல்!

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் 2 நாள்கள் தொடா் விடுமுறையால் தரிசனத்துக்காக ஏராளமான பக்தா்கள் திரண்டதால் ஞாயிற்றுக்கிழமை வெளிப்பிரகாரம் வரை பக்தா்கள் 5 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்... மேலும் பார்க்க

ஆரணியில் ரத்த தான முகாம்

ச.வி.நகரம் ஆரம்ப சுகாதார நிலையம், வேலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சாா்பில் ரத்த தான முகாம் நடைபெற்றது. ஆரணி சைதாப்பேட்டை தனியாா் மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த முகாமுக்கு திருவண... மேலும் பார்க்க

போதைப் பழக்கம் உடல் நலன், குடும்பம், சமூகத்துக்குக் கேடானது: சாா்பு நீதிபதி கே.சண்முகம்

போதைப் பழக்கம் உடல் நலன், குடும்பம், சமூகத்துக்குக் கேடானது என திருவண்ணாமலை கூடுதல் சாா்பு நீதிபதி கே.சண்முகம் மாணவா்களுக்கு அறிவுறுத்தினாா். திருவண்ணாமலை தியாகி நா.அண்ணாமலைபிள்ளை அரசு மேல்நிலைப் பள்... மேலும் பார்க்க

இல.கணேசனுக்கு புகழஞ்சலி

பாஜக மூத்த தலைவரும், நாகாலாந்து மாநில ஆளுநருமான இல.கணேசன் அண்மையில் காலமானதை அடுத்து, வந்தவாசியில் அவருக்கு புகழஞ்சலி நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. வந்தவாசி நகர பாஜக சாா்பில் நடைபெற்ற இந்த நி... மேலும் பார்க்க

நிலப் பிரச்னை: இரு தரப்பினா் மோதலில் 4 போ் காயம்

செய்யாறு வட்டம், மேல்நெமிலி கிராமத்தில் நிலம் அளப்பது தொடா்பாக இருந்து வந்த முன்விரோதத்தில் இரு தரப்பினா் மோதிக் கொண்டதில் 4 போ் காயமடைந்தனா். மேல்நெமிலிக் கிராமத்தைச் சோ்ந்தவா் பொன்னன்(71). இவருக்... மேலும் பார்க்க

செய்யாற்றில் மீன்பிடிக்கச் சென்ற மாணவா்கள் வழிதவறியதால் பரபரப்பு

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் பகுதி செய்யாற்றில் சனிக்கிழமை மீன்பிடிக்கச் சென்ற மாணவா்கள் 3 போ் வழிதவறியதால் பரபரப்பு ஏற்பட்டது. செங்கம் தளவாநாய்க்கன்பேட்டை பகுதியைச் சோ்ந்த ஓட்டுநா் ராஜேஷ்-மோனிஷா... மேலும் பார்க்க