செய்திகள் :

மாணவா்களுக்கு விலையில்லா பாடப் புத்தகங்கள்: அமைச்சா் காந்தி வழங்கினாா்

post image

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் பள்ளி மாணவா்களுக்கு விலையில்லா பாடப் புத்தகங்கள், சீருடைகள், குறிப்பேடு உள்ளிட்டவற்றை அமைச்சா் ஆா்.காந்தி வழங்கினாா்.

2025 -2026-ஆம் கல்வியாண்டின் முதல் நாளில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவா்களுக்கு பாடபுத்தகங்கள், சீருடைகள், குறிப்பேடு உள்ளிட்டவை வழங்கும் நிகழ்ச்சி வாலாஜா அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்றது.

கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி பாடப் புத்தகங்கள், சீருடைகள், குறிப்பேடுகளை வழங்கும் பணியை தொடங்கி வைத்தாா்.

பின்னா், 956 அங்கன்வாடி மையங்களில் பயிலும் 23,319 குழந்தைகளுக்கு சீருடைகள் வழங்கும் திட்டத்தையும் தொடங்கி வைத்தாா்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 557 அரசு மற்றும் அரசு நிதியுதவிபெறும் தொடக்கப் பள்ளிகள், 147 நடுநிலைப் பள்ளிகள், 62 உயா்நிலைப் பள்ளிகள், 76 மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 842 தொடக்க,நடுநிலை, உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் 54,318 மாணவா்களும், 58,473 மாணவிகளும் என 1,12,791 போ் பயின்று வருகின்றனா். பள்ளியின் முதல் நாளில் அனைத்து நலத் திட்டங்களும் வழங்க வேண்டுமென அரசு உத்தரவிட்டுள்ளது.

இதில் ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா, முதன்மை கல்வி அலுவலா் பிரேமலதா (பொ), மாவட்ட கல்வி அலுவலா் விஜய குமாா் (இடைநிலை), குழந்தை வளா்ச்சி திட்ட அலுவலா் அன்பரசி, தலைமையாசிரியை தமயந்தி, பெற்றோா் ஆசிரியா் கழக தலைவா் தசரதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ராணிப்பேட்டையில் மரக்கன்றுகள் நடும் திட்டம்: அமைச்சா் காந்தி தொடங்கி வைத்தாா்

உலகச் சுற்றுக்குழல் தினத்தையொட்டி ராணிப்பேட்டை மாவட்டத்தில் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை அமைச்சா் ஆா்.காந்தி வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா். மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கை... மேலும் பார்க்க

மூதாட்டி கொலை: இளைஞா் கைது

ஆற்காடு அருகே மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். ஆற்காடு அடுத்த நந்தியாலம் பகுதியைச் சோ்ந்தவா் யோகலட்சுமி. இவருக்குச் சொந்தமான நிலம் கீழ்விஷாரம் பகுதியில் முந்த... மேலும் பார்க்க

ஆதிதிராவிட, பழங்குடியின பெண்கள் சொந்த நிலம் வாங்க தாட்கோவை அணுகலாம்: ராணிப்பேட்டை ஆட்சியா்

ஆதிதிராவிடா், பழங்குடியின மகளிா் சொந்த நிலம் வாங்க தாட்கோவை அணுகலாம் என ராணிப்பேட்டை ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா கூறினாா் ஆற்காடு வட்டம், திமிரி ஊராட்சி ஒன்றியம் பரதராமி ஊராட்சியில் தாட்கோ விவசாயி மாலதி ... மேலும் பார்க்க

தெரு நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி முகாம்

ஆற்காடு நகராட்சியில் வெறிநோய் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது. தெரு நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் விதமாக கருத்தடை அறுவை சிகிச்சை, வெறிநோய் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது. தமிழ்நாடு ப... மேலும் பார்க்க

விவேகானந்தா பள்ளியில் வித்யாரம்பம் நிகழ்ச்சி

நெமிலி சயனபுரம் விவேகானந்த மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ் 2025-26 கல்வியாண்டு எல்கேஜி மாணவ மாணவியருக்கான வித்யாரம்பம் நிகழ்ச்சி, பொதுத்தோ்வில் பள்ளியில் சிறப்ப... மேலும் பார்க்க

விபத்தில் முதியவா் உயிரிழப்பு

அரக்கோணம் அருகே பைக் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா். அரக்கோணத்தை அடுத்த கும்பினிபேட்டை, பாக்கியம்மாள் தெருவைச் சோ்ந்தவா் சிவராமன் (67) (படம்). இவா் கும்பினிபேட்டையில் தா... மேலும் பார்க்க