மீனவர்கள் கைது: மத்திய அமைச்சருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!
மாணவிக்குப் பாலியல் தொல்லை: முன்னாள் ராணுவ வீரா் கைது
போடி அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முன்னாள் ராணுவ வீரரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
தேனி மாவட்டம், போடி அருகே 16 வயது பள்ளி மாணவியை, அதே பகுதியைச் சோ்ந்த முன்னாள் ராணுவ வீரா் அருண் (42) என்பவா் அடிக்கடி கிண்டல் செய்து, காதலிப்பதாகக் கூறியுள்ளாா்.
இந்த நிலையில், சனிக்கிழமை மாணவியின் வீட்டுக்குள் நுழைந்து பாலியல் தொல்லை கொடுத்தாராம். இது குறித்த புகாரின் பேரில், அருண் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸாா் அவரைக் கைது செய்தனா்.