பாஜகவின் தன்னிச்சையான செயல்பாடு: மாற்று முடிவு குறித்து அதிமுக பரிசீலிக்க வேண்டு...
மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு: "பள்ளிகளிலும் போலீஸ் இருக்கணுமா?" - திரிணாமூல் எம்பி சர்ச்சை பேச்சு
நேற்று முன்தினம், கொல்கத்தா சட்டக் கல்லூரி ஒன்றில், அந்தக் கல்லூரி மாணவி ஒருவரை, அந்தக் கல்லூரியின் முன்னாள் மாணவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து மேற்கு வங்கத்தை ஆளும் கட்சியான திரிணாமூல் காங்கிரஸைச் சேர்ந்த எம்.பி கல்யாண் பானர்ஜியிடம் கேட்கப்பட்டது.

அதற்கு அவரது பதில்...
"ஒரு நண்பர் இன்னொரு நண்பரைப் பாலியல் வன்கொடுமை செய்தால் என்ன செய்வது? பள்ளிகளிலும் போலீஸ் இருக்க வேண்டுமா? இது ஒரு மாணவரால் இன்னொரு மாணவருக்குச் செய்யப்பட்டது ஆகும். யார் பாதிக்கப்பட்டவரைப் பாதுகாப்பது?
இந்தக் குற்றச் செயல்களையும் பாலியல் வன்கொடுமைகளையும் யார் செய்கிறார்கள்? சில ஆண்கள் செய்கிறார்கள். எனவே, பெண்கள் யாருக்கு எதிராகப் போராட வேண்டும்? பெண்கள் இந்த வக்கிரமான ஆண்களுக்கு எதிராகப் போராட வேண்டும்.
குற்றம் செய்தவர் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும். இதை நான் திரும்பத் திரும்ப சொல்கிறேன். ஒரு நண்பர் இன்னொரு நண்பரைப் பாலியல் வன்கொடுமை செய்தால், அது எப்படி ஊழல் ஆகும்?
அனைத்து இடங்களிலும் பாதுகாப்பு ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறது. ஆண்களின் மனநிலை இப்படி இருக்கும் வரை, இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டே தான் இருக்கும்".
இந்த வழக்கின் குற்றவாளியான மனோஜித் மிஸ்ரா திரிணாமூல் கட்சியைச் சேர்ந்தவர் ஆவார். இது குறித்து கல்யாணிடம் கேள்வி எழுப்பப்பட்டப்போது, அதற்கு அவர் பதிலளிக்கவில்லை.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY