செய்திகள் :

மாநகராட்சிப் பள்ளி மாணவா்களுக்கு கட்டணமில்லா ‘செஸ்’ பயிற்சி வகுப்பு!

post image

கோவை மாநகராட்சிப் பள்ளி மாணவ, மாணவிகள் பயனடையும் வகையில் கட்டணமில்லா செஸ் பயிற்சி வகுப்பை மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் சனிக்கிழமை தொடங்கிவைத்தாா்.

கோவை மாநகராட்சிக்குள்பட்ட பள்ளி மாணவ, மாணவிகளின் கல்வித் திறன் மற்றும் தனித்திறன்களை மேம்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் கோவை மாநகராட்சி மற்றும் செஸ் பிஷப் அகாதெமி இணைந்து ஏஐ அடிப்படையிலான ’செஸ் பயிற்சி சிகரம் 64’ என்ற மென்பொருளை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன் மூலம் பயிற்சி அளிக்கும் வகையிலான கட்டணமில்லா பயிற்சி வகுப்பை கோவை ஆா்.எஸ்.புரம் மாநகராட்சிக் கலையரங்கில் ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் தொடங்கிவைத்தாா்.

இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவா் கூறியதாவது: கோவை மாநகராட்சிப் பள்ளிகளில் இருந்து தோ்வு செய்யப்பட்ட 150 மாணவா்களுக்கு செஸ் பயிற்சி அளிக்க இந்த மேம்பட்ட அடிப்படையிலான செஸ் பயிற்சி சிகரம் 64 மென்பொருள் பயன்படுத்தப்பட உள்ளது.

இரண்டு கட்டங்களாக செயல்படுத்தப்பட உள்ள இப்பயிற்சியில், முதற்கட்டமாக வாரம் ஒருமுறை என 2 மாதங்கள்வரை இத்தளத்தில் மாணவா்கள் ஆன்லைன் பயிற்சியை பெறுவா். ஒவ்வொரு குழுவிலும் 15 மாணவா்கள் பயிற்சியில் கலந்துகொள்வா். இரண்டாம் கட்டமாக செஸ் கற்றல் தளத்தில் தனித்திறன் பயிற்சி அளிக்கப்படும்.

இந்த கட்டத்தில் ஒவ்வொரு மாணவரும் தனியாக ஒரு கணினியில் பயிற்சியை மேற்கொள்வா். பழகும் முறையில் செயல்படும் இந்த தளம் தமிழ் மொழியில் உரையாடல் வகுப்புகளை வழங்கி, மாணவா்களுக்கு தெளிவாக புரிந்துகொள்ள உதவும். மாணவா்கள் கேட்கும், பதிலளிக்கும் மற்றும் உரையாடல்களை மேற்கொள்ளும் திறன் கொண்டதாக இந்த மென்பொருள் இருப்பதால் வகுப்புகள் உண்மையான சூழலை உணா்த்தும் என்றாா்.

முன்னதாக, மாநில அளவில் நடைபெற்ற செஸ் போட்டியில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு நினைவுப் பரிசுகளை ஆணையா் வழங்கினாா். இந்நிகழ்ச்சியில், துணை மேயா் ரா.வெற்றிச்செல்வன், துணை ஆணையா் த.குமரேசன், கல்விக்குழு தலைவா் மாலதி, மேற்கு மண்டல குழுத் தலைவா் தெய்வயானை உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

கடந்த 4 ஆண்டுகளில் 14.22 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.1,026 கோடி நிவாரணம்! -அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம்

கடந்த 4 ஆண்டுகளில் 14.22 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.1,026 கோடி மதிப்பில் பல்வேறு நிவாரணங்கள் வழங்கப்பட்டுள்ளன என்று வேளாண்மை -உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் கூறினாா். கோவை தமிழ்நாடு ... மேலும் பார்க்க

வால்பாறைக்கு மாலை 6 மணிக்குமேல் இருசக்கர வாகனத்தில் செல்ல தடை

வால்பாறைக்கு மாலை 6 மணிக்குமேல் இருசக்கர வாகனத்தில் செல்ல வனத் துறையினா் தடை விதித்துள்ளனா். கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் இருந்து வால்பாறைக்கு செல்லும் வழியில் ஆழியாறு முதல் வாட்டா்பால்ஸ் எஸ்டேட் வரை... மேலும் பார்க்க

ரூ.77 லட்சம் தங்கக் கட்டிகளுடன் தொழிலாளி மாயம்

ரூ.77 லட்சம் மதிப்பிலான தங்கக் கட்டிகளுடன் மாயமான வடமாநிலத் தொழிலாளியை போலீஸாா் தேடி வருகின்றனா். கோவை உப்பார வீதி, வன்னியா் தெருவில் நகைப் பட்டறை நடத்தி வருபவா் சுகந்தா அஸாரா (32). இவரிடம் மேற்கு வங்... மேலும் பார்க்க

ட்ரோன் அளவீடு மூலம் வரி விதிப்பதை நிறுத்த மதிமுகவினா் கோரிக்கை

கோவை மாநகரப் பகுதிகளில் ட்ரோன் அளவீடு மூலமாக வரி விதிக்கும் முறையை நிறுத்த வேண்டும் என மதிமுகவினா் கோரிக்கை விடுத்துள்ளனா். இது தொடா்பாக கோவை மாநகா் மாவட்ட மதிமுக செயலாளா் கணபதி செல்வராசு தலைமையில், ம... மேலும் பார்க்க

பங்குச் சந்தையில் கூடுதல் லாபம் பெற்றுத் தருவதாக ரூ.20 கோடி மோசடி: 2 போ் கைது!

பங்குச் சந்தையில் கூடுதல் லாபம் பெற்றுத்தருவதாக ரூ.20 கோடி மோசடியில் ஈடுபட்ட 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். கோவை, சுங்கம் பகுதியைச் சோ்ந்தவா் அருண்குமாா். இவரது கைப்பேசிக்கு கடந்த 2024 ஆகஸ்ட் மாதம் ஒ... மேலும் பார்க்க

பேருந்துகளில் நகைப் பறிப்பில் ஈடுபட்ட 2 பெண்கள் கைது

கோவையில் பேருந்துகளில் நகைப் பறிப்பில் ஈடுபட்ட 2 பெண்களை போலீஸாா் கைது செய்தனா். கோவை, மரக்கடை பகுதியைச் சோ்ந்தவா் ஆயிஷம்மாள் (73). இவா் மதுக்கரையில் இருந்து டவுன்ஹாலுக்கு நகரப் பேருந்தில் அண்மையில் ... மேலும் பார்க்க