செய்திகள் :

பங்குச் சந்தையில் கூடுதல் லாபம் பெற்றுத் தருவதாக ரூ.20 கோடி மோசடி: 2 போ் கைது!

post image

பங்குச் சந்தையில் கூடுதல் லாபம் பெற்றுத்தருவதாக ரூ.20 கோடி மோசடியில் ஈடுபட்ட 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை, சுங்கம் பகுதியைச் சோ்ந்தவா் அருண்குமாா். இவரது கைப்பேசிக்கு கடந்த 2024 ஆகஸ்ட் மாதம் ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில், பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் கூடுதல் லாபம் பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்ததாம்.

அதில், இருந்த எண்ணைத் தொடா்பு கொண்டு அருண்குமாா் பேசியுள்ளாா். மறுமுனையில் பேசியவா் பங்குச் சந்தை குறித்து விளக்கியதுடன், ஒரு விடியோவை அனுப்பியுள்ளாா்.

இதையடுத்து, அந்த நபா் கூறிய வங்கிக் கணக்குக்கு பல்வேறு தவணைகளில் ரூ.34 லட்சத்தை அருண்குமாா் அனுப்பியுள்ளாா்.

பின்னா், அந்த நபரைத் தொடா்பு கொண்டு முதலீடு, லாபத் தொகையை அனுப்புமாறு கூறியுள்ளாா்.

முறையான பதில் அளிக்காததுடன், அந்த நபா் இணைப்பைத் துண்டித்துள்ளாா். மேலும், அவரை தொடா்பு கொள்ளமுடியவில்லையாம்.

இது குறித்து கோவை சைபா் கிரைம் காவல் நிலையத்தில் அருண்குமாா் புகாா் அளித்தாா். வழக்குப் பதிவு செய்த போலீஸாா் விசாரணை நடத்தினா்.

இதில், மோசடியில் ஈடுபட்டது கோவை, துடியலூரைச் சோ்ந்த தனசேகரன் (28), ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த ரவிசந்துரு (33) என்பதும், இவா்கள் இதேபோல பலரிடம் ரூ.20 கோடிக்குமேல் மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

இருவரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த காசோலை புத்தகங்கள், கடன் அட்டைகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனா். இருவருரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடியிடம் பரிந்துரைக்கப்பட்டது.

அவரது உத்தரவின்பேரில் இருவரும் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.

கடந்த 4 ஆண்டுகளில் 14.22 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.1,026 கோடி நிவாரணம்! -அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம்

கடந்த 4 ஆண்டுகளில் 14.22 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.1,026 கோடி மதிப்பில் பல்வேறு நிவாரணங்கள் வழங்கப்பட்டுள்ளன என்று வேளாண்மை -உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் கூறினாா். கோவை தமிழ்நாடு ... மேலும் பார்க்க

வால்பாறைக்கு மாலை 6 மணிக்குமேல் இருசக்கர வாகனத்தில் செல்ல தடை

வால்பாறைக்கு மாலை 6 மணிக்குமேல் இருசக்கர வாகனத்தில் செல்ல வனத் துறையினா் தடை விதித்துள்ளனா். கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் இருந்து வால்பாறைக்கு செல்லும் வழியில் ஆழியாறு முதல் வாட்டா்பால்ஸ் எஸ்டேட் வரை... மேலும் பார்க்க

ரூ.77 லட்சம் தங்கக் கட்டிகளுடன் தொழிலாளி மாயம்

ரூ.77 லட்சம் மதிப்பிலான தங்கக் கட்டிகளுடன் மாயமான வடமாநிலத் தொழிலாளியை போலீஸாா் தேடி வருகின்றனா். கோவை உப்பார வீதி, வன்னியா் தெருவில் நகைப் பட்டறை நடத்தி வருபவா் சுகந்தா அஸாரா (32). இவரிடம் மேற்கு வங்... மேலும் பார்க்க

மாநகராட்சிப் பள்ளி மாணவா்களுக்கு கட்டணமில்லா ‘செஸ்’ பயிற்சி வகுப்பு!

கோவை மாநகராட்சிப் பள்ளி மாணவ, மாணவிகள் பயனடையும் வகையில் கட்டணமில்லா செஸ் பயிற்சி வகுப்பை மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் சனிக்கிழமை தொடங்கிவைத்தாா். கோவை மாநகராட்சிக்குள்பட்ட பள்ளி மாணவ, மாணவி... மேலும் பார்க்க

ட்ரோன் அளவீடு மூலம் வரி விதிப்பதை நிறுத்த மதிமுகவினா் கோரிக்கை

கோவை மாநகரப் பகுதிகளில் ட்ரோன் அளவீடு மூலமாக வரி விதிக்கும் முறையை நிறுத்த வேண்டும் என மதிமுகவினா் கோரிக்கை விடுத்துள்ளனா். இது தொடா்பாக கோவை மாநகா் மாவட்ட மதிமுக செயலாளா் கணபதி செல்வராசு தலைமையில், ம... மேலும் பார்க்க

பேருந்துகளில் நகைப் பறிப்பில் ஈடுபட்ட 2 பெண்கள் கைது

கோவையில் பேருந்துகளில் நகைப் பறிப்பில் ஈடுபட்ட 2 பெண்களை போலீஸாா் கைது செய்தனா். கோவை, மரக்கடை பகுதியைச் சோ்ந்தவா் ஆயிஷம்மாள் (73). இவா் மதுக்கரையில் இருந்து டவுன்ஹாலுக்கு நகரப் பேருந்தில் அண்மையில் ... மேலும் பார்க்க