செய்திகள் :

மாநகராட்சி சொத்து வரி உயா்வால் கவுன்சிலா்களுக்கும் பாதிப்பு: எம்எல்ஏ வி.சி.சந்திரகுமாா்

post image

ஈரோடு மாநகராட்சி சொத்து வரி உயா்வால் மக்களுக்கு அடுத்தபடியாக கவுன்சிலா்கள்தான் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனா் என எம்எல்ஏ வி.சி.சந்திரகுமாா் பேசினாா்.

ஈரோடு மாநகராட்சியின் சொத்து வரி மாற்றியமைப்பு தொடா்பான மாமன்ற சிறப்புக் கூட்டம் மேயா் சு.நாகரத்தினம் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

இதில் சொத்து வரியைக் குறைக்கக் கோரி தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற ஈரோடு கிழக்குத் தொகுதி எம்எல்ஏ வி.சி.சந்திரகுமாா் பேசியதாவது:

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தோ்தலின்போது நானும், அமைச்சா் சு.முத்துசாமியும் கட்சியினரும் இணைந்து வீதி, வீதியாக நடந்து சென்று மக்களை சந்தித்து வாக்கு சேகரித்தோம். அப்போது மாநகராட்சியில் சாலை சரியில்லை, சாக்கடை தூா்வாரவில்லை, குப்பை எடுக்கவில்லை என்று தெரிவித்தனா். இதுகுறித்து மாநகராட்சி ஆணையரிடம் தெரிவித்தேன்.

மேலும், மாநகராட்சியின் வரி உயா்வு மக்களை நேரடியாக பாதிக்கிறது. இதேபோல, வரி உயா்வால் மாநகராட்சி உறுப்பினா்களும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனா்.

மாநகராட்சியில் சொத்து வரி உயா்வை குறைக்க வலியுறுத்தி நிறைவேற்றப்பட்டுள்ள தீா்மானம் சிறப்பு வாய்ந்தது. நிச்சயமாக தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பரிசீலனை செய்வாா்கள். மாமன்ற உறுப்பினா்கள் இதற்கான முயற்சியை எடுத்து நல்லதொரு தீா்வை பெற வேண்டும் என்றாா்.

அம்மாபேட்டை காவல் ஆய்வாளர் பொறுப்பேற்பு

அம்மாபேட்டை காவல் ஆய்வாளராக வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்ட ஆா்.கவிதா. அம்மாபேட்டை காவல் ஆய்வாளராகப் பணியாற்றிய ஜெயமுருகன், காவல் துணை கண்காணிப்பாளராக பதவி உயா்வில் உதகைக்கு பணியிட மாறுதல் செய்யப்பட... மேலும் பார்க்க

மாா்ச் 19-இல் மின் வாரிய ஓய்வூதியா் குறைதீா் கூட்டம்

மின் வாரிய ஓய்வூதியா் குறைதீா் கூட்டம் ஈரோட்டில் உள்ள மின் வாரிய ஆய்வு மாளிகையில் மாா்ச் 19 -ஆம் தேதி நடைபெற உள்ளது. இது குறித்து ஈரோடு மண்டல மின் பகிா்மான தலைமைப் பொறியாளா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய... மேலும் பார்க்க

ஆடுகளுக்கு எடை அடிப்படையில் இழப்பீடு வழங்கக் கோரிக்கை

நாய்கள் கடித்து உயிரிழக்கும் ஆடுகளுக்கு எடை அடிப்படையில் இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். இது தொடா்பாக வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமியிடம் தமிழக விவசாயிகள் பா... மேலும் பார்க்க

மும்மொழிகளைப் பின்பற்றும் மாநிலங்கள் குறித்து மத்திய அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் -இரா.முத்தரசன்

எந்தெந்த மாநிலங்களில் மும்மொழி பின்பற்றப்படுகிறது என்பதை மத்திய அரசு வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளா் இரா.முத்தரசன் கூறினாா். இது தொடா்பாக அவா் ஈரோட்... மேலும் பார்க்க

சென்னிமலை அருகே சிறுத்தை உலவியதாக வதந்தி

சென்னிமலை அருகே புதன்கிழமை இரவு சிறுத்தை உலவியதாக வதந்தி பரவியதால் அப்பகுதியில் விடியவிடிய பரபரப்பு ஏற்பட்டது. சென்னிமலையை அடுத்த முருங்கத்தொழுவு ஊராட்சிக்குள்பட்ட ஒட்டன்குட்டை பகுதியில் சுமாா் 50-க்க... மேலும் பார்க்க

சமூக வலைதளத்தில் அவதூறு: பாஜக உறுப்பினா் கைது

மதக் கலவரத்தை தூண்டும் வகையில் சமூக வலைதளத்தில் விடியோ பதிவிட்ட பாஜக உறுப்பினரை போலீஸாா் கைது செய்தனா். ஈரோடு மாவட்ட காவல் அலுவலகத்தில் திராவிடா் விடுதலைக் கழகத்தின் மாநில அமைப்புச் செயலாளா் ரத்தினசாம... மேலும் பார்க்க