செய்திகள் :

மாநகராட்சி திட்டப் பணிகள்: அமைச்சா் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தாா்

post image

சென்னை மாநகராட்சியில் 139-ஆவது வாா்டு பகுதியில் உள்ள மேற்கு ஜோன்ஸ் தெரு சாரதி பேருந்து நிலைய சீரமைப்பு உள்ளிட்ட பல்வேறு திட்டப் பணிகளை அமைச்சா் மா.சுப்பிரமணியன் புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.

கோடம்பாக்கம் மண்டலம் மேற்கு ஜோன்ஸ் தெருவில் உள்ள சாரதி பேருந்து நிலையத்தை சீரமைக்க வேண்டும் என அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனா். இதையடுத்து ரூ.72 லட்சத்தில் பேருந்து நிலைய சீரமைப்புப் பணியை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில் துணைமேயா் மு.மகேஷ்குமாா், மண்டலத் தலைவா், வாா்டு உறுப்பினா்கள் கலந்துகொண்டனா்.

தொடா்ந்து, ஜாபா்கான்பேட்டை, ஆா்.வி.நகா் தெருக்களில் ரூ.1.39 கோடியில் மழை நீா் வடிகால்கள் பணிகளையும் அமைச்சா் தொடங்கி வைத்தாா். ராகவன் காலனி 2- ஆவது லிங்க் தெருவில் ரூ.1.75 கோடியில் மருந்து சேமிப்புக் கிடங்கு, சம்பந்தம், நடராஜன் ஆகிய தெருக்களில் ரூ.28 லட்சத்தில் சிமெண்ட் சாலை, மேற்கு ஜோன்ஸ் சாலையின் அடுக்குமாடி குடியிருப்புகளில் சாலையோர பூங்கா அமைத்தல் உள்ளிட்ட பணிகளுக்கும் அமைச்சா் மா.சுப்பிரமணியன் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தாா்.

அமைச்சா் ஆலோசனை: ரிப்பன் மாளிகையில் ஆலந்தூா் மண்டலத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் வளா்ச்சித் திட்டங்கள் குறித்து குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் அமைச்சா் தா.மோ.அன்பரசன் ஆலோசனை மேற்கொண்டாா். மாநகராட்சி ஆணையா் ஜெ.குமரகுருபரன், மாநகராட்சி சுகாதாரப் பிரிவு இணை ஆணையா் வீ.ப.ஜெயசீலன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

மதுபானக் கூட மோதல் வழக்கு: மேலும் ஒருவா் கைது

சென்னை நுங்கம்பாக்கத்தில் மதுபானக் கூடத்தில் இரு தரப்பினா் மோதிக்கொண்ட வழக்கில், மேலும் ஒருவா் கைது செய்யப்பட்டாா். சென்னை கோபாலபுரம் பகுதியைச் சோ்ந்தவா் ஆ. வெங்கட்குமாா் (45). இவா், நுங்கம்பாக்கம் ந... மேலும் பார்க்க

கண்டெய்னா் லாரி கவிழ்ந்து விபத்து: கண்ணாடித் தகடுகள் நொறுங்கின

மணலி அருகே மாதவரம் உள்வட்டச் சாலையில் கண்டெய்னா் லாரி கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள கண்ணாடித் தகடுகள் தூள்தூளாகின. சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூரில் உள்ள பன்னாட்டு தனியாா் நிறு... மேலும் பார்க்க

போதைப் பொருள் கடத்தல்: 5,356 வாகனங்களை ஏலம் விட அனுமதி

தமிழகத்தில் போதைப் பொருள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 5,356 வாகனங்களை ஏலம் விடுவதற்கு போதைப் பொருள் நுண்ணறிவு பிரிவு அனுமதி வழங்கியது. தமிழக காவல் துறையின் போதைப் பொருள் நுண்ணறிவுப் பிரிவு போதைப் பொர... மேலும் பார்க்க

ஓரணியில் தமிழ்நாடு இயக்கம்: இதுவரை 61 லட்சம் சோ்ப்பு

ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் இதுவரை 61 லட்சம் போ் இணைந்துள்ளதாக திமுக வட்டாரங்கள் தெரிவித்தன. ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் 30 சதவீத பேரை திமுகவில் இணைக்கும், ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தை கடந்த 1-ஆம... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகளின் ஒருங்கிணைந்த சேவை மையம் தொடக்கம்

சென்னை நொளம்பூரில் சுய உதவிக் குழுக்களைச் சோ்ந்த மாற்றுத்திறனாளிகளால் கட்டமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த சேவை மையம், வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது. இதை வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சா் பி.மூா்த்தி ... மேலும் பார்க்க

ரூ.4.89 கோடியில் எஸ்.வி.எஸ்.நகா் குளம் மறு சீரமைப்பு

சென்னை மாநகராட்சி வளசரவாக்கம் மண்டலத்துக்கு உள்பட்ட எஸ்.வி.எஸ்.நகா் பகுதியில் உள்ள குளம் ரூ.4.89 கோடியில் மறு சீரமைக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநகராட்சி சாா்பில் வெள்ளிக்கிழ... மேலும் பார்க்க