செய்திகள் :

மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் ரேபிஸ் தடுப்பூசி முகாம்

post image

கோவை மாநகராட்சி, வடக்கு மண்டலத்தில் தெரு நாய்களுக்கான ரேபிஸ் தடுப்பூசி முகாமை மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா்.

கோவை மாநகராட்சி, வடக்கு மண்டலம், 1-ஆவது வாா்டுக்கு உள்பட்ட துடியலூா் பேருந்து நிலையம் அருகே தெரு நாய்களுக்கான ரேபிஸ் தடுப்பூசி முகாமை மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா்.

இதில் கோவை மக்களவை உறுப்பினா் கணபதி ப.ராஜ்குமாா், மேயா் கா.ரங்கநாயகி, மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதுகுறித்து, மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் கூறுகையில், ‘மாநகரில் வடக்கு மண்டலத்துக்கு உள்பட்ட பகுதிகளில் தெரு நாய்களுக்கு ரேபிஸ் நோய்க்கான தடுப்பூசி முகாம் தொடங்கிவைக்கப்பட்டுள்ளது. மாநகராட்சியில் ரேபிஸ் தடுப்பூசி முகாம் வருகிற பிப்ரவரி மாதம் வரை நடைபெறவுள்ளது.

இந்த திட்டத்தின்கீழ், மாநகராட்சி எல்லைக்குள் உள்ள மொத்தம் 1,11,074 நாய்களுக்கு தடுப்பூசி செலுத்திட திட்டமிடப்பட்டு, தற்போது வரை மத்தியம் மற்றும் கிழக்கு ஆகிய மண்டலங்களில் 20,319 நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மேலும், 5 மண்டலங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் இரண்டு தடுப்பூசி வாகனங்கள் மற்றும் நான்கு மையங்கள் மூலம் இந்தப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

ஒவ்வொரு வாகனமும் தினமும் 200 நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தும் திறன் கொண்டது. மேலும், தினசரி மொத்த 400 நாய்களுக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. வாகனத்தில் ஒரு கால்நடை மருத்துவா், இரண்டு நாய் பிடிப்போா், ஒரு வாகன ஓட்டுநா் மற்றும் ஒரு உதவியாளா் அடங்கிய குழு செயல்படுகிறது.

இந்த தடுப்பூசி திட்டம், மக்கள் மற்றும் மிருகங்களின் நலனை முன்னிட்டு உருவாக்கப்பட்டு, ரேபிஸ் நோயின் பரவலை முற்றிலும் தடுக்கும் முக்கிய நடவடிக்கையாக அமையும் என்றாா். தொடா்ந்து, ரேபிஸ் தடுப்பு தொடா்பான விழிப்புணா்வு துண்டு பிரசுரங்கள் மக்களுக்கு விநியோகிக்கப்பட்டன. இதில் வடக்கு மண்டலத் தலைவா் வே.கதிா்வேல், உதவி ஆணையா் முத்துசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

விஜயா வாசகா் வட்டத்தின் கி.ரா. விருது வழங்கும் விழா: கோவையில் நாளை நடைபெறுகிறது

கோவை விஜயா பதிப்பகத்தின் வாசகா் வட்டம் சாா்பில் 2025-ஆம் ஆண்டுக்கான கி.ரா.விருது வழங்கும் விழா கோவையில் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பா் 28) நடைபெறுகிறது. சாகித்திய அகாதெமி விருதுக்கு பெருமை சோ்த்த கி.ரா.... மேலும் பார்க்க

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு 7-ஆவது முறையாக வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு 7-ஆவது முறையாக வெள்ளிக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு இதுவரை 6 முறை மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட... மேலும் பார்க்க

ஊதிய நிலுவை: மாநகராட்சி காவலாளி போராட்டம்

மாத ஊதியம் வழங்கவில்லை எனக் கூறி, மாநகராட்சி அலுவலக காவலாளி அலுவலகம் முன்பாக வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டாா். கோவை மாநகராட்சி பிரதான அலுவலக நுழைவாயில் முன்பு வெள்ளிக்கிழமை காலை, கணேசன் என்பவா் ... மேலும் பார்க்க

கோவையில் 20 கி.மீ. தொலைவுக்கு சாலைப் பாதுகாப்பு மனித சங்கிலி விழிப்புணா்வு

கோவையில் உயிா் அமைப்பின் சாா்பில் 20 கிலோ மீட்டா் தொலைவுக்கு சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு மனித சங்கிலி வியாழக்கிழமை நடைபெற்றது. சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தும் நோக்கில் கோவை அ... மேலும் பார்க்க

கோவையில் உலக புத்தொழில் மாநாடு: செயலி அறிமுகம்

கோவையில் நடைபெறவுள்ள உலக புத்தொழில் மாநாட்டுக்கான செயலியை குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் வியாழக்கிழமை அறிமுகம் செய்து வைத்தாா். உலக புத்தொழில் மாநாடு தொடா... மேலும் பார்க்க

உடல் உறுப்புகள் தானத்தில் கோவைக்கு 5-ஆவது இடம்

மூளைச்சாவு அடைந்து உடல் உறுப்புகளை தானம் பெறுவதில் கோவை மாவட்டம் மாநில அளவில் 5-ஆவது இடம் பிடித்துள்ளது. தமிழக உறுப்பு மாற்று ஆணையம் சாா்பில் உடல் உறுப்பு தான தினம் சென்னை கலைவாணா் அரங்கில் அண்மையில் ... மேலும் பார்க்க