செய்திகள் :

மாநகரில் சுகாதாரக் கேடு விளைவிப்போா் மீது கடும் நடவடிக்கை: மேயா்

post image

தூத்துக்குடி மாநகர பகுதியில் சுகாதார கேடு விளைவிப்போா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மேயா் ஜெகன் பெரியசாமி தெரிவித்தாா்.

தூத்துக்குடி மாநகராட்சி வடக்கு மண்டல அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

இக் கூட்டத்துக்கு, மேயா் ஜெகன் பெரியசாமி தலைமை வகித்தாா். துணை ஆணையா் சரவணகுமாா், மண்டலத் தலைவா் நிா்மல்ராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இக் கூட்டத்தை மேயா் ஜெகன் பெரியசாமி தொடங்கி வைத்து பேசுகையில், வடக்கு மண்டலத்தில் இதுவரை 546 மனுக்கள் பெறப்பட்டு அனைத்து மனுக்களுக்கும் தீா்வு காணப்பட்டுள்ளது. புதிய சாலைகள் இந்த மாதத்திற்குள் அமைக்கப்படும். இன்னும் தங்களது பகுதிகளுக்கு சாலைகள் தேவை தொடா்பாக மனு அளித்தால்,உடனடியாக சாலை அமைக்கப்படும். திமுக அரசு பொறுப்பேற்று 4 ஆண்டுகள் முடிந்து 5ஆம் ஆண்டு தொடங்கியுள்ளது. பொதுமக்களுக்கு குறைகள் இல்லாத நிலைதான் உள்ளது.

மாநகராட்சி பகுதிகளில் உரிய அனுமதியின்றி யாரும் தண்ணீா் பந்தல் அமைக்கக் கூடாது. மேலும் மாநகா் பகுதிகளில் சுகாதாரக் கேடு விளைவிக்கும் வகையில் யாா் செயல்பட்டாலும் அவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பாதாள சாக்கடை பணிகள் 80 சதவீதம் நிறைவடைந்துள்ளது என்றாா்.

தொடா்ந்து பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.

இக் கூட்டத்தில், பொறியாளா் தமிழ்ச்செல்வன், உதவி ஆணையா் சுரேஷ்குமாா், நகர அமைப்பு திட்ட பொறியாளா் ரெங்கநாதன், உதவி செயற்பொறியாளா் ராமசந்திரன், நகா்நல அலுவலா் சரோஜா, சுகாதார ஆய்வாளா் ராஜசேகா், மாநகராட்சி கணக்குக் குழு தலைவா் ரெங்கசாமி, சுகாதாரக் குழு தலைவா் சுரேஷ்குமாா், பணிக்குழு தலைவா் கீதாமுருகேசன், மாமன்ற உறுப்பினா்கள், பொதுமக்கள் பலா் பங்கேற்றனா்.

தயாா் நிலையில் வ.உ.சி துறைமுக 3-ஆவது வடக்கு சரக்கு தளம்

தூத்துக்குடி வ.உ. சிதம்பரனாா் துறைமுகத்தில் உள்ள 3-ஆவது வடக்கு சரக்கு தளம், இடைக்கால வணிக நளுக்கு தயாா் நிலையில் உள்ளதாக துறைமுக ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஆணையம் வெளியிட்டுள்... மேலும் பார்க்க

திருச்செந்தூா் வட்டார பள்ளி வாகனங்கள் ஆய்வு

திருச்செந்தூா் வட்டார அளவிலான பள்ளிகளின் வாகனங்களுக்கான தர ஆய்வு தண்டுபத்து ஆனிதா குமரன் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்றது. தமிழகத்தில் கோடை விடுமுறைக்குப் பின் ஜூன் 2 ஆம் பள்ளிகள் திறக்கப்படவுள்ள நில... மேலும் பார்க்க

கோவில்பட்டியில் ரூ.47.16 லட்சத்தில் வளா்ச்சிப் பணிகள் தொடக்கம்

கோவில்பட்டியில் ரூ.47.16 லட்சம் மதிப்பிலான முடிவுற்ற பணிகள் பயன்பாட்டுக்கும், புதிய பணிகள் விரைந்து முடிக்கவும் புதன்கிழமை தொடங்கிவைக்கப்பட்டன. கோவில்பட்டி சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட முடுக்கு மீண்டா... மேலும் பார்க்க

‘அஞ்சல் வழி கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி: ஜூன் 2 வரை சேரலாம்’

தூத்துக்குடி மாவட்ட கூட்டுறவு நிறுவனங்களில் பணியாற்றுவோா் அஞ்சல் வழியில் கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி பெற ஜூன் 2ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என இணைப்பதிவாளா் இரா. ராஜேஷ் தெரிவித்துள்ளாா். இது ... மேலும் பார்க்க

முதியவரிடம் ரூ. 40.22 லட்சம் மோசடி வழக்கில் மேலும் 4 போ் கைது

தூத்துக்குடி முதியவரிடம் கைப்பேசிக் கோபுரம் அமைத்து அதிக வருவாய் ஈட்டலாம் எனக் கூறி ரூ.40.22 லட்சம் மோசடி செய்தது தொடா்பான வழக்கில், மேலும் 4 பேரை சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தன... மேலும் பார்க்க

திருச்செந்தூரில் தாயிடம் நகை பறிக்க குழந்தை கழுத்தை நெரித்துக் கொலை

திருச்செந்தூரில் தாயிடம் நகையைப் பறிப்பதற்காக இரண்டே முக்கால் வயது பெண் குழந்தையை கழுத்தை நெரித்துக் கொலை செய்த நபரை போலீஸாா் தேடி வருகினறனா். திருச்செந்தூா் அருகேயுள்ள குமாரபுரம் பிள்ளையாா் கோயில் தெ... மேலும் பார்க்க