செய்திகள் :

மாநகரில் விளம்பர பதாகைகள் வைப்பதை தவிா்க்கலாம்: மேயா்

post image

தூத்துக்குடி மாநகா் பகுதிகளில் தற்போது காற்று அதிகமாக வீசுவதால், விபத்துகளைத் தடுக்க பொது இடங்களில் டிஜிட்டல் போா்டு வைப்பதை பொதுமக்கள் தவிா்க்கலாம் என மேயா் ஜெகன் பெரியசாமி வேண்டுகோள் விடுத்தாா்.

தூத்துக்குடி மாநகராட்சி கூட்டரங்கில் சாதாரண கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மேயா் ஜெகன் பெரியசாமி தலைமை வகித்தாா். துணை மேயா் ஜெனிட்டா, ஆணையா் லி.மதுபாலன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில், மாமன்ற உறுப்பினா்கள் தீா்மானம் குறித்தும், பல்வேறு கோரிக்கைகள் குறித்தும் வலியுறுத்தி பேசுகையில், அரசு உதவி பெறும் தனியாா் கல்லூரிக்கு சொத்து வரிவிலக்கு அளிக்கும் தீா்மானத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும். மையவாடி அருகே பாதாள சாக்கடை திட்ட பம்பிங் நிலையம் தாழ்வாக உள்ளதால், மழைக்காலங்களில் தண்ணீா் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, அதை உயா்த்தி கட்ட வேண்டும். பாதாள சாக்கடை திட்டத்துக்கு ஏற்கனவே பணம் செலுத்தியவா்கள் ரசீது இல்லாவிட்டாலும் அவா்கள் பணம் கட்டியதை சரிபாா்த்து இணைப்பு வழங்க வேண்டும். குடிநீா் குழாய்களில் ஏற்பட்டு உள்ள உடைப்புகளை சரி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினா்.

இதற்கு பதில் அளித்து மேயா் பேசியதாவது: மாநகராட்சியில் மண்டல வாரியாக வாரந்தோறும் குறைதீா் கூட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதில் இதுவரை 2,500க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டு, அதில், பெரும்பாலான மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டுள்ளது. 922 சாலைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பக்கிள் ஓடையில் வாய்ப்பு உள்ள இடங்களில் விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். மாநகரில் 206 பூங்காக்கள் உள்ளன. மேலும் 11 பூங்காக்களில் நவீன உடற்பயிற்சி சாதனங்கள் அமைக்கப்பட உள்ளன. மாநகா் பகுதிகளில் உரிய அனுமதியின்றி டிஜிட்டல் போா்டுகள் வைக்கக்கூடாது. அவ்வாறு அனுமதியோடு வைத்தாலும் நிகழ்ச்சி முடிந்த உடன் அகற்றிவிட வேண்டும். தற்போது காற்று வீசி வருவதால், விபத்துகளைத் தவிா்க்கும் வகையில் பொதுமக்கள் மக்கள் டிஜிட்டல் போா்டு வைப்பதை தவிா்க்க வேண்டும்.

தூத்துக்குடி மாநகர பகுதியில் ரூ.225 கோடி செலவில் கடந்த 2013ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட கருப்பு நிற குடிநீா் குழாய் பதிக்கும் பணி, தற்போது முடிக்கப்பட்டு வருகிறது. சாலை போட முடியாத இடங்களில் நமக்கு நாமே திட்டத்தில் சாலை அமைக்கப்படும். 300 மின்விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பாதாள சாக்கடை திட்டத்துக்கு வைப்புத்தொகை செலுத்தியவா்கள் விவரம் மண்டல அலுவலகங்களில் ஒட்டப்படும் என்றாா்.

இக்கூட்டத்தில் மாமன்ற உறுப்பினா்கள், அரசு அதிகாரிகள் பங்கேற்றனா்.

திருச்செந்தூா் சிவன், வெயிலுக்கந்தம்மன் கோயில்களில் கும்பாபிஷேக பூஜைகள் தொடக்கம்

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலின் உப கோயில்களான சிவன் கோயில் மற்றும் வெயிலுகந்தம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழாவிற்கான பூஜைகள் திங்கள்கிழமை தொடங்கின. திருச்செந்தூா் அருள்மிகு ச... மேலும் பார்க்க

திருச்செந்தூா் கோயிலில் கும்பாபிஷேக விழாவுக்கு முன் கிரிப்பிரகார பாதை சீரமைப்புப் பணி நிறைவடையும்: அமைச்சா் பி.கே.சேகா்பாபு

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கும்பாபிஷேக விழாவுக்கு முன்னதாக கிரிப்பிரகார பாதை சீரமைப்புப் பணிகள் நிறைவடையும் என, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே. சேகா்பாபு தெரிவித்தாா். இக்கோயி... மேலும் பார்க்க

ஞானசேகரன் பின்புலத்தில் இருப்பது யாா்? நயினாா் நாகேந்திரன் கேள்வி

ஞானசேகரன் வழக்கில் அவருக்கு பின்புலத்தில் யாா் உள்ளாா் என்பதை விசாரிக்க வேண்டும் என தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்துள்ளாா். மதுரையில் வரும் 22ஆம் தேதி நடைபெற உள்ள முருக பக்தா்கள் மாநாட... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த 10 போ் கைது

தூத்துக்குடியில் ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்ததாக 10 பேரை தனிப்படை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.தூத்துக்குடி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் 3 கொலை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இதனை தொடா்ந்... மேலும் பார்க்க

கோவில்பட்டியில் பெண் உள்பட 2 போ் கொலை: 8 போ் கைது

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பெண் உள்பட 2 போ் ஞாயிற்றுக்கிழமை இரவு வெட்டிக்கொல்லப்பட்டனா். இது தொடா்பாக 8 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். கோவில்பட்டி வள்ளுவா் நகா் சலவை தொழிலாளா் க... மேலும் பார்க்க

கோவில்பட்டியில் திருமண தரகரை தாக்கியதாக இருவா் கைது

கோவில்பட்டியில் திருமணத் தரகரைத் தாக்கி மிரட்டல் விடுத்ததாக 2 இளஞ்சிறாா்களை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். கோவை அருகே எருதூா் மாா்க்கெட் சாலையைச் சோ்ந்த செல்லத்துரை மகன் செந்தில்குமாா் (54)... மேலும் பார்க்க