செய்திகள் :

மாநிலங்களவை உறுப்பினராகும் கமல்ஹாசன்?

post image

திமுக சார்பில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மக்களவைத் தேர்தலின் போது இந்தியா கூட்டணிக்கு கமல்ஹாசன் ஆதரவு அளித்து பிரசாரம் செய்தார். மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிட கோவை தொகுதி கேட்கப்பட்டதாகவும், இறுதியில் மாநிலங்களவை பதவி கொடுக்க திமுக சம்மதம் தெரிவித்ததாக அப்போது தகவல்கள் வெளியாகின.

இதையும் படிக்க : தேமுதிகவுக்கு மாநிலங்களவை பதவி உறுதி: விரைவில் பெயர் அறிவிப்பு!

இந்த நிலையில், வருகின்ற ஜூன் மாதத்துடன் தமிழகத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினர்களாக உள்ள மதிமுக வைகோ, திமுக திருச்சி சிவா, அதிமுக தம்பி துரை, பாமக அன்புமணி ராமதாஸ் ஆகியோரின் பதவிக் காலம் நிறைவடைகின்றன.

இதில், திமுக சார்பில் கமல்ஹாசனை மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுப்பதற்கு அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இதனிடையே, சென்னையில் உள்ள மநீம அலுவலகத்தில் கமல்ஹாசனை நேரில் சந்தித்து அமைச்சர் சேகர் பாபு புதன்கிழமை பேசியுள்ளார்.

இவர்களின் திடீர் சந்திப்பு தமிழக அரசியல் பேசுபொருளாகியுள்ள நிலையில், மரியாதை நிமித்தமாக சந்தித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த சந்திப்பின்போது 2026 சட்டப்பேரவைத் தேர்தல் கூட்டணி குறித்தும் இருவரும் பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாங்கள் என்ன ஒன்பதா? தவெகவுக்கு எதிராக கொதித்தெழுந்த திருநர்கள்

நடிகர் விஜய் தொடங்கிய தவெக அரசியல் கட்சிப் பணிகள் படு ஜோராக நடைபெற்று வரும் நிலையில், முதல்கட்டமாக கட்சிக்குள் என்னென்ன அணிகள் உருவாக்கப்பட வேண்டும் என்பது தொடர்பான அறிவிப்பு நேற்று வெளியானது. மேலும் பார்க்க

பள்ளிகளில் பாலியல் தொல்லையா? தமிழக அரசின் புகார் எண்!

பள்ளிகளில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டால் புகார் தெரிவிக்க இலவச தொலைபேசி எண்ணை தமிழக பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ளது.தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் சம்பவங்க... மேலும் பார்க்க

வங்கிகள் செய்திருக்கும் மிகப்பெரிய மாற்றங்கள்! தெரியாவிட்டால் பாக்கெட் காலி!!

இந்த பிப்ரவரி மாதம் மத்திய நிதிநிலை அறிக்கை தாக்கல், தனிநபர் வருமான வரி விலக்கு உச்சத் தொகை அதிகரிப்பு, ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்பட்டது என நிதித்துறை சார்ந்த தகவல்கள் வந்துகொண்டேயிருக்கின்றன. மேலும் பார்க்க

காட்சிப்படுத்தப்பட்ட ஏசி புறநகர் ரயில்! பயன்பாட்டுக்கு வருவது எப்போது?

சென்னை: சென்னை ஐசிஎஃப் ரயில்வே தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட ஏசி புறநகர் ரயில் இன்று மக்கள் பார்வைக்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.பெரம்பூரில் உள்ள ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலையில் (ஐசிஎஃப்) அற... மேலும் பார்க்க

மார்ச் 15-க்குள் மீண்டும் சாலைப் பாதுகாப்பு தணிக்கைச் செய்யப்பட வேண்டும்: அமைச்சர் எ.வ.வேலு

சென்னை: மார்ச் 15 ஆம் தேதிக்குள் மீண்டும் சாலைப் பாதுகாப்பு தணிக்கைச் செய்யப்பட வேண்டும் என்றும், இந்த ஆண்டு பொறியாளர்களுக்குச் சாலைப் பாதுகாப்பு தணிக்கைப் பயிற்சி அளிக்கப்பட வேண்டும் என்று பொதுப்பணிக... மேலும் பார்க்க

சாலைகளில் தேவையில்லாத வேகத்தடை அமைக்க வேண்டாம் : அமைச்சர் எ.வ. வேலு

சாலைகளில் தேவையில்லாத இடங்களில் வேகத்தடை அமைக்க வேண்டாம், அவ்வாறு தேவைப்படின், அதற்கான அறிவிப்புப் பலகைகளுடன் அமைக்கப்பட வேண்டும் என்று அமைச்சர் எ.வ. வேலு அறிவுறுத்தியுள்ளார்.நெடுஞ்சாலைகளில் மேற்கொள்ள... மேலும் பார்க்க