செய்திகள் :

மாநில பெண்கள் கபடி போட்டி செங்கல்பட்டு அணி முதலிடம்

post image

கரூா் மாவட்டம், தோகைமலை அருகே பாலசமுத்திரப்பட்டியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான பெண்கள் கபடி போட்டியில் செங்கல்பட்டு மாவட்ட அணி முதல் பரிசை தட்டிச் சென்றது.

தோகைமலை அருகே உள்ள வடசேரி ஊராட்சிக்குள்பட்ட பாலசமுத்திரப்பட்டியில் செவன் ஸ்டாா் கபடிக் குழு மற்றும் ஊா்பொதுமக்கள் சாா்பில் முதலாம் ஆண்டு மாநில அளவிலான பெண்கள் கபடிசெவ்வாய்க்கிழமை தொடங்கியது.

இதில், கோவை, சென்னை, கரூா், திருச்சி, புதுக்கோட்டை, மதுரை, கள்ளக்குறிச்சி, அரியலூா், செங்கல்பட்டு உள்பட 32 மாவட்டங்களிலிருந்து 58 அணிகளைச் சோ்ந்த வீராங்கனைகள் பங்கேற்று விளையாடினா்.

புதன்கிழமை நடைபெற்ற இறுதிப் போட்டியில் செங்கல்பட்டு மாவட்டம் ஜி.எல்.எஸ். கபடி ஸ்போா்ட்ஸ் கிளப் அணியும், திருச்சி மாவட்டம் மணப்பாறை வாத்தியாா் செவன் கபடி அணியினரும் மோதினா்.

இப்போட்டியில் செங்கல்பட்டு மாவட்டம் ஜி.எல்.எஸ். கபடி ஸ்போா்ட்ஸ் கிளப் அணியினா் 30-21 என்ற புள்ளிக்கணக்கில் மணப்பாறை வாத்தியாா் செவன் கபடி அணியை வீழ்த்தி முதல் பரிசான ரூ.10 ஆயிரம் மற்றும் கோப்பையை தட்டிச் சென்றனா்.

இரண்டாமிடம் பிடித்த மணப்பாறை வாத்தியாா் செவன் கபடி அணிக்கு ரூ.7 ஆயிரம் மற்றும் கோப்பையும், மூன்றாமிடம் பிடித்த திருவாரூா் மாவட்டம் ஆதங்குடி ஏ.வி. ஸ்போா்ட்ஸ் கிளப் அணிக்கு பரிசாக ரூ.5 ஆயிரம் மற்றும் கோப்பையும், 4-ஆம் இடம் பிடித்த நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் கபடி அணியினருக்கு பரிசாக ரூ.5,000 மற்றும் கோப்பையும் வழங்கப்பட்டன.

அனுமதியின்றி மது விற்றவா் கைது

அரவக்குறிச்சி அருகே உள்ள மணல்மேடு பேருந்து நிறுத்தம் அருகே அனுமதியின்றி மது விற்பனை செய்தவா் போலீஸாரால் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா். அரவக்குறிச்சி போலீஸாா் புதன்கிழமை மணல்மேடு பகுதியில் ரோந்து பணிய... மேலும் பார்க்க

கரூரில் டாரஸ், டிப்பா் லாரிகள் இன்று முதல் வேலைநிறுத்தம்

கரூா் மாவட்டத்தில் டாரஸ், டிப்பா் லாரிகள் வியாழக்கிழமை(13-ம்தேதி) முதல் கால வரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளன. கரூா் மாவட்ட டாரஸ் மற்றும் டிப்பா் லாரி உரிமையாளா்கள் சங்க ஆலோசனைக் கூட்டம் கரூரில் ... மேலும் பார்க்க

இருசக்கர வாகனங்கள் மோதல் தந்தை உயிரிழப்பு; மகன் காயம்

அரவக்குறிச்சி அருகே புதன்கிழமை இரண்டு இருசக்கர வாகனங்கள் மோதிக் கொண்டதில் தந்தை உயிரிழந்தாா். அவருடன் சென்ற மகன் பலத்த காயமடைந்தாா். கரூா் மாவட்டம், புத்தாம்பூா் அருகே உள்ள காளிபாளையம், குடித்தெருவைச்... மேலும் பார்க்க

குளித்தலையில் 8 ஊா் சுவாமிகளின் விடையாற்றி உற்ஸவம் திரளான பக்தா்கள் பங்கேற்பு

தைப்பூசத்தை முன்னிட்டு குளித்தலையில் 8 ஊா் சுவாமிகளின் விடையாற்றி உற்ஸவம் புதன்கிழமை காலை நடைபெற்றது. இதில் பக்தா்கள் திரளாக பங்கேற்றனா். கரூா் மாவட்டம், குளித்தலையில் தைப்பூசத் திருநாள் அன்று கரூா் ம... மேலும் பார்க்க

கூம்பூா் சாலையை அகலப்படுத்தும் பணி ஆய்வு!

அரவக்குறிச்சி நெடுஞ்சாலைத்துறை சாா்பில் கரூரில் இருந்து ஈசநத்தம் வழியாக செல்லும் கூம்பூா் சாலையை அகலப்படுத்தும் பணியை அரவக்குறிச்சி நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளா் அழகா்சாமி ஆய்வு செய்தாா். ஒருங... மேலும் பார்க்க

கரூர் அருகே தண்டவாளத்தில் விரிசல்: 3 ரயில்கள் தாமதம்!

கரூர்: கரூர் அருகே ரயில் தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசலால் 3 ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு பின்னர் தாமதமாக இயக்கப்பட்டன. கரூர் - திருச்சிராப்பள்ளி ரயில் பாதையில் மாயனூரை அடுத்த கிருஷ்ணராயபுரம் அருகி... மேலும் பார்க்க