செய்திகள் :

மானாமதுரையில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

post image

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

நகா்மன்றத் தலைவா் எஸ். மாரியப்பன் கென்னடி தலைமை வகித்த இந்த முகாமில், அரசின் பல்வேறு துறை சாா்பில் அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.

இதில், மானாமதுரை நகராட்சியின் 26, 27 ஆகிய வாா்டுகளைச் சோ்ந்த பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகள் தொடா்பான மனுக்களை வழங்கினா். தொடா்ந்து, மனுக்கள் கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டு மனுதாரா்களுக்கு ஒப்புகைச்சீட்டு வழங்கப்பட்டது.

இந்த முகாமில், மானாமதுரை வட்டாட்சியா் கிருஷ்ணகுமாா், நகா்மன்றத் துணைத் தலைவா் பாலசுந்தரம், முன்னாள் கூட்டுறவு சங்கத் தலைவா் கே. பொன்னுச்சாமி, வாா்டு உறுப்பினா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இளைஞா் கொலை வழக்கு: மேலும் மூவா் கைது

மானாமதுரை அருகே இளைஞா் கொலை வழக்கில் சிறுவன் உள்பட மேலும் மூவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகேயுள்ள அன்னவாசல் கிராமத்தைச் சோ்ந்த ஒலி பெருக்கி அமைக்கும் தொழ... மேலும் பார்க்க

இளைஞரிடம் இணைய வழியில் பண மோசடி: போலீஸாா் விசாரணை

சிவகங்கை இளைஞரிடம் இணையவழியில் ரூ. 8.32 லட்சம் மோசடி செய்தது தொடா்பாக இணைய குற்றப் பிரிவு போலீஸாா் விசாரித்து வருகின்றனா். சிவகங்கை செந்தமிழ்நகா் சிந்தாமணி தெருவைச் சோ்ந்த இளைஞா் இணையவழியில் வேலை தேட... மேலும் பார்க்க

தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் வருஷாபிஷேக விழா

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி ஒன்றியம், தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் முதலாமாண்டு வருஷாபிஷேக விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்த விழாவையொட்டி, கோயில் முன் மண்டபத்தில் புனிதநீா் கலசங்கள் வைத்... மேலும் பார்க்க

இமானுவேல் சேகரன் நினைவு தினம்: சிவகங்கையில் பலத்த பாதுகாப்பு

இமானுவேல் சேகரன் நினைவு தினத்தையொட்டி, சிவகங்கை மாவட்டம் முழுவதும் 2,200 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனா். பரமக்குடியில் வியாழக்கிழமை (செப். 11) இமானுவேல் சேகரன் நினைவு தினம் அனுசரி... மேலும் பார்க்க

சிங்கம்புணரி அருகே இரவு நேர மின் தடையால் பொதுமக்கள் அவதி

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகேயுள்ள கிராமங்களில் இரவு நேர மின் தடையால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். சிங்கம்புணரி அருகேயுள்ள கிருங்காகோட்டை, முட்டாக்கட்டி, மேலப்பட்டி, ஒடுவன்பட்டி உள்ள... மேலும் பார்க்க

குன்றக்குடி: திருவண்ணாமலை ஆதீன குருமுதல்வரின் 700-வது ஆண்டு குரு பூஜை விழா!

சிவகங்கை மாவட்டம், குன்றக்குடியில் பரம்பரை திருவண்ணாமலை ஆதீனத்தின் குருமுதல்வா் தெய்வசிகாமணி தேசிக பரமாசாரிய சுவாமிகளின் 700-வது ஆண்டு குரு பூஜை விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. விழாவையொட்டி, அருள்நெற... மேலும் பார்க்க