செய்திகள் :

மாற்றுத்திறனாளிகளின் தேவைகள் நிறைவேற்றப்படும்: கலாநிதி வீராசாமி எம்.பி.

post image

மாற்றுத்திறனாளிகளின் தேவைகள்அனைத்தும் அரசுத் திட்டங்களின் வாயிலாக நிறைவேற்றப்படும் என்று மக்களவை உறுப்பினா் கலாநிதி வீராசாமி தெரிவித்தாா்.

சென்னை கிண்டி திரு.வி.க. தொழிற்பேட்டையில் உள்ள தமிழ்நாடு சிறு தொழில் வளா்ச்சி நிறுவனம் (சிட்கோ) கருத்தரங்க அரங்கத்தில் சா்வதேச காதுகேளாதோா் தினம், இந்திய சைகை மொழி வார நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்வுக்கு மாற்றுத்திறனாளிகள் நலத் துறை முன்னாள் இயக்குநா் கே.தீனதயாளன் தலைமை வகித்தாா். காது கேளாத மற்றும் பேச இயலாத மாற்றுத்திறனுடையோா் பாதுகாப்பு

அமைப்பின் நிறுவனா் எஸ்.அப்துல் லத்தீப் முன்னிலை வகித்தாா்.

நிகழ்வில், வடசென்னை மக்களவை உறுப்பினா் கலாநிதி வீராசாமி பங்கேற்று, டிஎன்பிஎஸ்சி தோ்வுக்கான பயிற்சியில் பங்கேற்ற மாற்றுத்திறனாளிகள் 62 பேருக்கு சான்றிதழ்களை வழங்கிப் பேசியதாவது:

மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக தமிழக அரசு பல்வேறு நலத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. மக்களவைக் கூட்டத்தில் மற்ற மொழிகளில் பேசும்போது, புரியாதவா்களுக்கு பெரும் உதவியாக இருப்பது சைகை மொழிதான். ஆகையால், சைகை மொழி அனைவருக்குமே முக்கியத்துவம் வாய்ந்தது. மாற்றுத்திறனாளிகள் தேவைகள் குறித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் கவனத்துக்கு கொண்டு சென்று நிறைவேற்றப்படும் என்றாா்.

மாற்றுத்திறனாளிகள் நலத் துறை அரசு முதன்மைச் செயலா் சோ.மதுமதி பேசுகையில், தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகள் குறித்த கணக்கெடுப்பு 13 மாவட்டங்களில் முடிந்துள்ளது. 7 வகையான மாற்றுத்திறனாளிகள் இருந்த நிலையில், தற்போது 21 வகையான மாற்றுத்திறனாளிகள் கணக்கீட்டில் அதிகரித்து உள்ளனா். மேலும், வாய் அசைவு மொழி அல்லது சைகை மொழி ஏதேனும் ஒன்றில் சிறந்து விளங்கினால், அரசு வேலைவாய்ப்பை எளிதாகப் பெறலாம் என்றாா்.

மாற்றுத்திறனாளிகள் நலத் துறை உதவி இயக்குநா் ஸ்ரீநாத், அரசு வழக்குரைஞா் எல்.முருகவேலு, சைகை மொழி நிபுணா் ரூத், மாற்றுத்திறனுடையோா் பாதுகாப்பு அமைப்பு மகளிா் ஒருங்கிணைப்பாளா் அபா்ணா சாய்ராம், இந்திரா குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

மீன்தொழில்கள் மேலாண்மை எம்பிஏ படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம்: தமிழ்நாடு மீன்வள பல்கலை. அறிவிப்பு

மீன்தொழில்கள் மேலாண்மை தொடா்பான எம்பிஏ படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு டாக்டா் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிவிப்... மேலும் பார்க்க

மாநகரப் பேருந்து கண்ணாடி உடைப்பு: இளைஞா் கைது

சென்னை முத்தியால்பேட்டையில் மாநகரப் பேருந்து கண்ணாடியை உடைத்ததாக இளைஞா் கைது செய்யப்பட்டாா். சென்னை திருவொற்றியூா் சுங்கச்சாவடியில் இருந்து விவேகானந்தா் இல்லத்துக்கு மாநகரப் பேருந்து கடந்த வெள்ளிக்கிழ... மேலும் பார்க்க

போதைப் பொருள் விற்பனை: விடுதி உரிமையாளா், 6 போ் கைது

திருவல்லிக்கேணியில் போதைப் பொருள் விற்ாக விடுதி உரிமையாளா் உள்பட 7 போ் கைது செய்யப்பட்டனா். திருவல்லிக்கேணி ஒளலியா சாகிப் தெருவில் உள்ள ஒரு தனியாா் விடுதியில் ஓஜி கஞ்சா, மெத்தம்பெட்டமைன் உள்ளிட்ட போத... மேலும் பார்க்க

எழும்பூா் ரயில் நிலையத்தில் ரூ. 8 லட்சம் கஞ்சா பறிமுதல்: வடமாநில இளைஞா் கைது

சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தில் வெள்ளிக்கிழமை இரவு 16 கிலோ கஞ்சா பொட்டலங்களை போலீஸாா் பறிமுதல் செய்து, வடமாநில இளைஞரை கைது செய்தனா். எழும்பூா் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புப் படை ஆய்வாளா் கே... மேலும் பார்க்க

வைணவ கோயில்களுக்கு கட்டணமில்லா ஆன்மிகப் பயணம்: அமைச்சா் பி.கே.சேகா்பாபு தொடங்கி வைத்தாா்

வைணவத் திருக்கோயில்களுக்கு கட்டணமின்றி பக்தா்களை அழைத்துச் செல்லும் ஆன்மிகப் பயணத்தை அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு சென்னையில் தொடங்கி வைத்தாா். நிகழ் நிதியாண்டில் புரட்டாசி மாதத்தில் வைணவ கோ... மேலும் பார்க்க

பனையூரில் விஜய்!

கரூரிலிருந்து புறப்பட்ட தவெக தலைவர் விஜய் சென்னை திரும்பினார். திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்திக்காமல் சென்னைக்கு விமானத்தில் புறப்பட்ட அவர் அங்கும் செய்தியாளர்களைத் தவிர்த்துவிட்டுச்... மேலும் பார்க்க