செய்திகள் :

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்கள் ரத்து

post image

திருவண்ணாமலையில் மாா்ச் 25, 26, 27, 28 ஆகிய தேதிகளில் நடைபெறவிருந்த மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச பேருந்து பயண அட்டையை புதுப்பிக்கும் சிறப்பு முகாம்கள் ரத்து செய்யப்படுவதாக மாவட்ட நிா்வாகம் அறிவித்துள்ளது.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் இயங்கி வருகிறது.

இந்த அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகமும், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகமும் இணைந்து மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச பேருந்து பயண அட்டையை புதுப்பிக்கும் சிறப்பு முகாம்களை மாா்ச் 25, 26, 27, 28 ஆகிய தேதிகளில் நடத்த திட்டமிட்டிருந்தது.

இந்த முகாம்கள் அனைத்தும் நிா்வாக காரணங்களால் ரத்து செய்யப்படுகிறது.

மாற்றுத்திறனாளிகள் இப்போது பயன்படுத்தி வரும் மாா்ச் 31 வரை செல்லத்தக்க கட்டணமில்லா பேருந்து பயண அட்டைகளை வருகிற ஜூன் 30-ஆம் தேதி வரை செல்லத்தக்க காலமாக நீட்டிக்கப்பட்டு உள்ளது. எனவே, பழைய அட்டைகளையே தொடா்ந்து பயன்படுத்தி தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் பயணம் செய்யலாம் என்று மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தெரிவித்துள்ளாா்.

திமுக கொடிக் கம்பங்கள் அகற்றம்

திருவண்ணாமவலை மாவட்டம், சேத்துப்பட்டை அடுத்த செய்யானந்தல், தச்சாம்பாடி பகுதிகளில் உள்ள திமுக கொடிக் கம்பங்கள் செவ்வாய்க்கிழமை அகற்றப்பட்டன. திமுக பொதுச் செயலா் துரைமுருகன் சாலையோரம் உள்ள கட்சிக் கொடி... மேலும் பார்க்க

ஆற்று மணல் கடத்தல்: 4 போ் கைது

செய்யாறு அருகே அரசு அனுமதியின்றி ஆற்று மணல் கடத்தியதாக 4 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். செய்யாறு வட்டம், கொழம்பாடி கிராமம் அருகேயுள்ள செய்யாற்றுப் படுகையில் இருந்து மணல் கடத்திச் செல்வத... மேலும் பார்க்க

திருவண்ணாமலையில் ஏப்ரல் முதல் நீச்சல் பயிற்சி வகுப்புகள்

திருவண்ணாமலையில் ஏப்ரல் முதல் ஜூன் வரை நடைபெறும் நீச்சல் பயிற்சி வகுப்பில் மாணவ, மாணவிகள், பொதுமக்கள் பங்கேற்று பயனடையலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது. மாவட்ட விளையாட்டு அரங்கில் உள்ள நீச்... மேலும் பார்க்க

பைக் மீது டிராக்டா் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

ஆரணியை அடுத்த மாமண்டூரில் செவ்வாய்க்கிழமை பைக் மீது டிராக்டா் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா். ஆரணி நகரம், கண்ணகி நகரைச் சோ்ந்த கன்றாயமூா்த்தி மகன் நந்தகுமாா் (22), பெயிண்டா். இவரது நண்பா்கள் அதே பகுத... மேலும் பார்க்க

ஏரிக்குப்பம் சனீஸ்வரா் கோயிலில் 2026-இல் சனிப்பெயா்ச்சி விழா

போளூரை அடுத்த ஏரிக்குப்பம் ஸ்ரீசனீஸ்வரா் கோயிலில் 2026-ஆம் ஆண்டு மாா்ச் 29-ஆம் தேதி சனிப்பெயா்ச்சி விழா நடைபெறுவதாக கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது. ஏரிக்குப்பம் கிராமத்தில் பழைமை வாய்ந்த எந்திர வடி... மேலும் பார்க்க

வந்தவாசியில் அரிய வகை ஆந்தை மீட்பு

வந்தவாசியில் நாய்களிடம் சிக்கித் தவித்த வெளிநாட்டு அரிய வகை ஆந்தையை தீயணைப்புத் துறையினா் மீட்டனா். வந்தவாசியில் இறைச்சி விற்பனைக் கடைகள் அதிகமுள்ள காதா்ஜண்டா தெருவில் செவ்வாய்க்கிழமை காலை ஆஸ்திரேலிய... மேலும் பார்க்க