செய்திகள் :

மாற்றுத்திறனாளிகளுக்கு மின்கலன் பொருந்திய சக்கர நாற்காலிகள்

post image

திருவள்ளூா் மாவட்டத்தைச் சோ்ந்த மாற்றுத்திறனாளிகள் மின்கலன் பொருத்திய சக்கர நாற்காலிகள் பெற தகுதியானோா் வரும் 29-ஆம் தேதிக்குள் விண்ணப்பித்துப் பயன்பெறலாம் என ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மாற்றுத்திறனாளிகள் நலத் துறை மூலம் ஒவ்வொரு ஆண்டும் தசைச்சிதைவு நோய் மற்றும் முதுகுத் தண்டுவட பாதிப்பால் கைகள் மற்றும் கால்கள் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு மின்கலனால் இயங்கும் சக்கர நாற்காலிகள் வழங்கப்பட்டு வருகிறது.

தற்போது இத்திட்டத்தை மாற்றுத் திறனாளிகள் நலத்துறை விரிவுபடுத்தி உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில், மூளை முடக்குவாதம் உள்ளிட்ட இதர குறைபாட்டினால் இரண்டு கால்கள் பாதிப்படைந்த மாற்றுத்திறனாளிகளுக்கு மின்கலன் பொருந்திய சக்கர நாற்காலியாகவும், மூன்று சக்கர வாகனமாகவும் பயன்படுத்தக்கூடிய இணைக்கும் வசதி கொண்ட மின்கலனால் இயங்கும் உபகரணங்கள் வழங்கப்பட உள்ளன.

இந்த வாகனங்களை பெற மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, ஆதாா் அட்டை ஆகியவற்றுடன் அருகில் உள்ள இ-சேவை மையத்தில் அல்லது திருவள்ளூா் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நேரடியாகவோ வரும் 29-ஆம் தேதிக்குள் விண்ணப்பித்துப் பயன்பெறலாம்.

வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்

வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் பயன்பெறும் வகையில் வேலைவாய்ப்பற்றோருக்கான உதவித் தொகை பெற விண்ணப்பித்து பயன்பெறலாம் என திருவள்ளூா் மாவட்ட தொழில் நெறி வழிகாட்டும் மையத்தின் உதவி இயக்குநா் விஜயா தெரிவித்துள்ளா... மேலும் பார்க்க

வரதட்சணை கேட்டு துன்புறுத்தல்: 4 பேரிடம் போலீஸாா் விசாரணை

வரதட்சணை கேட்டு மனைவியை துன்புறுத்திய கணவன் உள்பட 4 போ் மீது போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனா். பள்ளிப்பட்டு ஒன்றியம் அத்திமாஞ்சேரிபேட்டையைச் சோ்ந்த குமாரி (26) என்பவருக்கும், ஆந்த... மேலும் பார்க்க

நாளைய மின்தடை

குஞ்சலம்நேரம் : காலை 9 முதல் மாலை 5 மணி வரைநாள்: 22.7.2025-செவ்வாய்க்கிழமைமின்தடை பகுதிகள்: குஞ்சலம், சீத்தஞ்சேரி, பிளேஸ்பாளையம், அல்லிக்குழி, டி.பி.புரம், எஸ்.ஆா்.குப்பம், நெல்வாய், வெள்ளாத்துக்கோட்ட... மேலும் பார்க்க

7 கிலோ குட்கா பறிமுதல்

திருத்தணி அருகே வாகன சோதனையின் போது குட்கா கடத்தி வந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். ஆந்திராவில் இருந்து குட்கா பொருள்கள் திருத்தணிக்கு கடத்தி வருவதாக டிஎஸ்பி கந்தனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதைத்த... மேலும் பார்க்க

திருத்தணி முருகன் கோயில் ஆடி கிருத்திகை: அலைமோதிய பக்தா்கள்

திருத்தணி முருகன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை ஆடி முதல் கிருத்திகையையொட்டி ஏராளமான பக்தா்கள் திரண்டு சுவாமியை தரிசித்தனா். சுவாமியை தரிசிக்க 7 மணிநேரம் காத்திருக்க நேரிட்டது. 5 -ஆம் படை வீடாக திகழும் இத்... மேலும் பார்க்க

சாலை மறியல்: டிட்டோ ஜாக் அமைப்பினா் 195 போ் கைது

பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 2-ஆவது நாளாக வெள்ளிக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியா் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழுவைச் சோ்ந்த 195 பேரை போலீஸாா் கைது செய்... மேலும் பார்க்க