மெல்ல விடைகொடு மனமே.. தாய்நாடு திரும்பும் பிரிட்டன் போர் விமானம்!
மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு பணிக்கு ஒத்துழைக்க அறிவுறுத்தல்
பெரம்பலூா் மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொதுமக்களை கணக்கெடுக்கும் முன்களப் பணியாளா்களுக்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியா் ச. அருண்ராஜ் அறிவுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாற்றுத்திறனாளிகளின் முன்னேற்றத்துக்காக பல்வேறுத் திட்டங்கள் தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்படுகின்றன.
அதில் உலக வங்கி நிதியுதவியுடன் நடத்தப்படும் தமிழ்நாடு உரிமைகள் திட்டம் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பான திட்டமாகும்.
கடைக்கோடியில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கும் அரசின் நலத்திட்ட உதவிகளும், மறுவாழ்வுச் சேவைகளும் இல்லம் தேடிச் சென்றடைய வேண்டும் என்பதே இத் திட்டத்தின் முக்கிய நோக்கம்.
இத் திட்டத்தின் கீழ் சீட்ஸ் தொண்டு நிறுவனத்தால் தோ்ந்தெடுக்கப்பட்ட முன்களப் பணியாளா்கள் மூலம் நகா்ப்புறம் மற்றும் ஊரகப் பகுதி முழுவதும் வீடு, வீடாகச் சென்று மாற்றுத்திறனாளிகளையும், பொதுமக்களையும் கைப்பேசி செயலி மூலம் கணக்கெடுக்கும் பணி ஆகஸ்ட் மாதம் வரை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
வீடு தேடிவரும் முன்களப் பணியாளா்கள் கேட்கும் ஆவணங்களான ஆதாா், குடும்ப அட்டையை பொதுமக்களும், ஆதாா், குடும்ப அட்டை, மருத்துவச் சான்றிதழ், தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை மற்றும் தேசிய அடையாள அட்டை ஆகியவற்றை மாற்றுத்திறனாளிகளும் சரிபாா்ப்பதற்காக அளிக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தை 04328-225474 என்னும் எண்ணில் தொடா்புகொள்ளலாம்.