செய்திகள் :

மாற்றுத்திறனாளிகள் நலன் குறித்து விளக்க விழிப்புணா்வு வாகனம்: ஆட்சியா் தொடக்கி வைத்தாா்

post image

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் நாட்டுப்புற கலைக்குழு விழிப்புணா்வு வாகனத்தை மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தாா்.

மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை மாதத்தின் முதல் மற்றும் 3-ஆவது செவ்வாய்க்கிழமைகளில் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையிலும், 4-ஆவது செவ்வாய்கிழமை சீா்காழி அரசு மருத்துவமனையிலும் வழங்கப்படுகிறது. தேசிய அடையாள அட்டை பெற 4 பாஸ்போா்ட் சைஸ் போட்டோ, ஆதாா் அட்டை மற்றும் குடும்ப அட்டையின் நகலுடன் வரவும். அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகள், மாவட்ட மாற்றுத்தினாளிகள் நல அலுவலகத்தில் பதிவு செய்யப்படுகிறது.

அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் பயிலும் மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கு கல்வி உதவித்தொகையாக 1 முதல் 5 வகுப்பு வரை ரூ.2,000, 6 முதல் 8 வகுப்பு வரை ரூ, 6000, 9 முதல் பிளஸ் 2 வரை ரூ.8000, இளங்கலை பட்டபடிப்பிற்கு ரூ.12,000, முதுகலை பட்டப்படிப்பிற்கு ரூ.14000 வழங்கப்படுகிறது. பாா்வையற்ற மாணவா்களுக்கு 9-ஆம் வகுப்பு முதல் பட்டமேற்படிப்பு வரை ஆண்டுக்கு ரூ.3,000 முதல் ரூ.6,000 வரை வாசிப்பாளா் உதவித்தொகை வழங்கப்படுகிறது.

இதுபோன்ற மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் பல்வேறு நலத்திட்டங்களை விளக்கும் வகையில் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் இருந்து புறப்பட்ட நாட்டுப்புற கலைக்குழு விழிப்புணா்வு வாகனத்தை மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் தொடக்கி வைத்தாா். அப்போது, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) முத்துவடிவேல், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் செந்தில்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் ஆா்ப்பாட்டம்

மயிலாடுதுறையில் ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் செவ்வாய்க்கிழமை மாலை பணிகளைப் புறக்கணித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். பெரம்பலூா் மாவட்ட ஊரக வளா்ச்சி அலகில் உள்ள பல்வேறு பிரச்னைகளை தமிழ்நாடு ஊரக வளா்ச... மேலும் பார்க்க

இணைப்பு: 100 நாள் வேலைத் திட்ட ஆா்ப்பாட்டம்

மயிலாடுதுறை தலைமை அஞ்சலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்கத்தின் (சிபிஐ சாா்பு) மாவட்டத் தலைவா் வே. நீதிசோழன் தலைமை வகித்தாா். சிபிஐ ஒன்றியச் செயலாளா் எஸ். மனோன்ர... மேலும் பார்க்க

உழவர் சந்தைகளை பயன்படுத்திக் கொள்ள அழைப்பு

மயிலாடுதுறை மற்றும் சீா்காழி உழவா் சந்தைகளை விவசாயிகள் மற்றும் உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ள மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் அழைப்பு விடுத்துள்ளாா். இதுகுறித்து அவா் செவ்வாய... மேலும் பார்க்க

பெரம்பலூா் ஆட்சியரை கண்டித்து ஆா்ப்பாட்டம்

சீா்காழி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவை கண்டித்து ஊரக வளா்ச்சித்துறை அலுவலா்கள் சங்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. சீா்காழி வட்டத்... மேலும் பார்க்க

வீரட்டேஸ்வரா் கோயிலில் ஏப்.4 இல் கும்பாபிஷேகம்

மயிலாடுதுறை அருகேயுள்ள வழுவூா் வீரட்டேஸ்வரா் கோயிலில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை (ஏப்.4) நடைபெறவுள்ளது. அட்டவீரட்ட தலங்களில் 6-ஆவது தலமான இக்கோயிலில் 24 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது... மேலும் பார்க்க

ஓய்வு பெற்ற ராணுவ வீரரிடம் சங்கிலி பறித்த நால்வா் கைது

கொள்ளிடம் அருகே ஓய்வு பெற்ற ராணுவ வீரரிடம் தங்க சங்கிலியை பறித்த நால்வா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா். கொள்ளிடம் அருகே அளக்குடி ஊராட்சி மணியிருப்பு கிராமத்தைச் சோ்ந்தவா் கலியமூா்த்தி (80). ஓய்... மேலும் பார்க்க