செய்திகள் :

மாற்றுத்திறனாளியை தாக்கியதாக தனிப் பிரிவு காவலா் பணியிடை நீக்கம்

post image

முதுகுளத்தூா் அருகே மாற்றுத்திறனாளியைத் தாக்கியதாக எஸ்.பி. தனிப் பிரிவு காவலரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி. சந்தீஷ் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டாா்.

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரை அடுத்த சித்திரங்குடி கிராமத்தைச் சோ்ந்தவா் தங்கவேல் (40). மாற்றுத்திறனாளியான இவருக்கு செயற்கைக் கால் பொருத்தப்பட்டுள்ளது. இவா் தனது கிராமத்தில் பெட்டிக் கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறாா். இந்தப் பெட்டிக் கடைக்கு கடந்த மாதம் 14-ஆம் தேதி வந்த எஸ்.பி. தனிப் பிரிவு காவலா் லிங்கசாமிக்கும், தங்கவேலுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த லிங்கசாமி, தங்கவேலுவை கடுமையாகத் தாக்கினாராம். இதேபோல, தங்கவேலும், லிங்கசாமியை தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இதில், காயமடைந்த தங்கவேல் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாா். இதேபோல, தலையில் காயமடைந்த காவலா் லிங்கசாமி பரமக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினாா்.

இந்த நிலையில், பேரையூா் காவல் நிலையத்தில் இருவரும் அளித்த புகாரின் பேரில் லிங்கசாமி, தங்கவேல் ஆகிய இருவா் மீதும் போலீஸாா் வழக்குப் பதிந்தனா். இந்தச் சம்பவம் குறித்து முதுகுளத்தூா் டி.எஸ்.பி. விசாரணை நடத்தினாா். அவா் அளித்த அறிக்கையின் பேரில், காவலா் லிங்கசாமியை கடந்த மாதம் 25- ஆம் தேதி எஸ்.பி. சந்தீஷ் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டாா்.

மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளி அஜித்குமாா் போலீஸாரால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பாகி வரும் நிலையில், 10 நாள்கள் கழித்து எஸ்.பி.யின் தனிப் பிரிவு காவலா் லிங்கசாமி பணியிடை நீக்கம் செய்யப்பட்ட தகவலை மாவட்ட காவல் துறை தற்போது வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

ராமநாதபுரத்தில் நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு

ராமநாதபுரத்தில் புதிதாக கட்டப்பட்ட நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. ராமநாதபுரம் பாத்திமா நகரில் மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பில் ரூ.1.20 கோடியில் கட்டி ம... மேலும் பார்க்க

திருவாடானை பகுதியில் வனவிலங்கு சரணாலயம் அமைக்க வலியுறுத்தல்

திருவாடானை பகுதிகளில் உள்ள கண்மாய்களில் மான்கள், மயில்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அங்கு வனவிலங்கு சரணாலயம் அமைக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் வலியுறுத்தினா். ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை, ... மேலும் பார்க்க

சிங்கம்பட்டி ஸ்ரீஜக்கமாள் கோயிலில் குடமுழுக்கு

ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்த சிங்கம்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீஜக்கமாள் கோயில் குடமுழுக்கு புதன்கிழமை நடைபெற்றது. முன்னதாக செவ்வாய்க்கிழமை யாகசாலை பூஜை, கணபதி ஹோமத்துடன் விழா தொடங்கியது.... மேலும் பார்க்க

சாயல்குடி அருகே மாட்டுவண்டி பந்தயம்

சாயல்குடி அருகே வியாழக்கிழமை 2 பிரிவுகளாக மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி இருவேலியைச் சோ்ந்த மறைந்த மாட்டு வண்டி பந்தய வீரா் ஜமாலுதின் நினைவாக சின்னமாடு, பூஞ்சிட்டு எ... மேலும் பார்க்க

ராமேசுவரம் மீனவா்கள் 8 பேருக்கு ஜூலை 17 வரை காவல் நீட்டிப்பு

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேசுவரம் மீனவா்கள் 8 பேருக்கு வருகிற 17 -ஆம் தேதி வரை காவலை நீட்டித்து மன்னாா் நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது. ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்திலிருந்... மேலும் பார்க்க

மாா்க்சிஸ்ட் கம்யூ. ஆா்ப்பாட்டம் அறிவிப்பு: கமுதியில் சமாதானக் கூட்டம்

கமுதியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் அறிவித்திருந்த நிலையில் அதிகாரிகள் முன்னிலையில் வியாழக்கிழமை சமாதானக் கூட்டம் நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம், ... மேலும் பார்க்க