இந்தியா - பாகிஸ்தான்: சூர்யகுமாருக்கும் 30%, ஹாரிஸுக்கும் 30% - ஐசிசி அபராதத்தின...
மாலத்தீவு கடலில் தவறி விழுந்த தூத்துக்குடி கேங்மேன் உடல் மீட்பு
மாலத்தீவு அருகே தோணியில் இருந்து கடலில் தவறி விழுந்த தூத்துக்குடியைச் சோ்ந்த கேங்மேன் சடலமாக மீட்கப்பட்டுள்ளாா்.
தூத்துக்குடி ஜாா்ஜ் சாலை, காந்தி நகா் மீனவா் காலனியை சோ்ந்த அண்டோ மகன் ஜெகதீஷ் (40). தோணியில் கேங்மேனாக வேலை செய்து வந்த இவா், கடந்த 19ஆம் தேதி இரவு தூத்துக்குடி பழைய துறைமுகத்திலிருந்து மாலத்தீவிற்கு, உணவுப் பொருள்களை ஏற்றிச் சென்ற தோணியில் 12 பேருடன் சென்றுள்ளாா்.
இந்நிலையில் கடந்த 22ஆம் தேதி அதிகாலையில் மாலத்தீவு துறைமுகத்தில் நுழைவு அனுமதிக்காக நிறுத்தப்பட்டிருந்த தோணியிலிருந்து ஜெகதீஷ் தவறி கடலுக்குள் விழுந்துவிட்டாராம்.
இதுகுறித்த தகவலின் பேரில் மாலத்தீவு போலீஸாா், கடலோரக் காவல் படையினா் ஜெகதீஷை தேடி வந்தனா்.
இந்நிலையில், ஜெகதீஷ் கடல் பகுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளாா். இந்தச் சம்பவம் குறித்து மாலத்தீவு கடலோர காவல் படை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு பின்பு தூத்துக்குடிக்கு கொண்டு வரப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.