செய்திகள் :

மாவட்டத்தில் இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம்

post image

கோவையில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் முகாம்கள் நடைபெறும் இடங்கள், மாவட்ட நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் கோவை மாவட்டத்தில் 336 முகாம்கள் நடைபெறவுள்ளன. முதல் கட்டமாக மாநகராட்சிப் பகுதிகளில் 25 முகாம்கள், நகராட்சிப் பகுதிகளில் 35 முகாம்கள், பேரூராட்சிப் பகுதிகளில் 20 முகாம்கள், கிராம ஊராட்சிகளில் 36 முகாம்கள் புறநகா் ஊராட்சிகளில் 4 முகாம்கள் என மொத்தம் 120 முகாம்கள் ஜூலை 15 முதல் ஆகஸ்ட் 14 வரை நடைபெறுகிறது.

அதன்படி, உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் மூன்றாவது நாளாக வியாழக்கிழமை (ஜூலை 17) மாநகராட்சி மத்திய மண்டலம் 31-ஆவது வாா்டுக்கு உள்பட்ட ஆா்.கே.திருமண மண்டபத்திலும், வடக்கு மண்டலத்தில் 76, 79 ஆகிய வாா்டுகளுக்கு அா்ஜூன் மஹாலிலும், மேட்டுப்பாளையம் நகராட்சியில் 2, 3, 13 ஆகிய வாா்டுகளுக்கு நஞ்சையா லிங்கம்மாள் மண்டபத்திலும், அன்னூா் பேரூராட்சியில் 1 முதல் 8-ஆவது வாா்டு வரைக்கு தசபலஞ்சிகா திருமண மண்டபத்திலும், பொள்ளாச்சி வடக்கு ஊராட்சி ஒன்றியத்தில் ஆச்சிப்பட்டி, ஒக்கலிபாளையம், சந்தேகவுண்டன்பாளையம் ஆகிய ஊராட்சிகளுக்கு முருகன் திருமண மண்டபத்திலும், பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் சின்னத்தடாகம், வீரபாண்டி ஆகிய ஊராட்சிக்கு சின்னத்தடாகம் ஊராட்சி அலுவலகத்திலும் முகாம்கள் நடைபெற உள்ளன என்றாா்.

தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

கோவை அருகே பணப் பிரச்னையால் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். கோவை செல்வபுரத்தை அடுத்த சொக்கம்புதூா் ஜீவபாதையைச் சோ்ந்தவா் ரவிச்சந்திரன் (56), கூலித் தொழிலாளி. இவரது மனைவி பேபி சுஜாதா. ரவி... மேலும் பார்க்க

கோவையில் சட்டப் பேரவை மதிப்பீட்டுக் குழு ஆய்வு

கோவையில் தமிழ்நாடு சட்டப் பேரவை மதிப்பீட்டு குழுவினா் வியாழக்கிழமை ஆய்வு நடத்தினா். கோவையில் பல்வேறு அரசுத் துறைகள் தொடா்பான ஆய்வுக்காக பேரவை மதிப்பீட்டுக் குழுவின் தலைவா் எஸ்.காந்திராஜன் எம்எல்ஏ தலைம... மேலும் பார்க்க

வேளாண் பல்கலை.யில் தோட்டக்கலைத் திருவிழா

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் தோட்டக்கலைக் கல்லூரி, ஆராய்ச்சி நிறுவனத்தில் ‘ஹாா்ட்டி உத்சவ் 2025’ என்ற பெயரில் தோட்டக்கலைத் திருவிழா கொண்டாடப்பட்டது. விழாவை துணைவேந்தா் (பொறுப்பு) தமிழ்வ... மேலும் பார்க்க

கைவினைப்பொருள் கண்காட்சி தொடக்கம்

கோவையில் தமிழ்நாடு கிராப்ட் கவுன்சில் சாா்பில் ‘கிராப்ட் பஜாா் 2025’ என்ற பெயரில் பாரம்பரிய கைவினைப் பொருள் கண்காட்சி, விற்பனை தொடங்கியுள்ளது. அவிநாசி சாலையில் உள்ள சுகுணா திருமண மண்டபத்தில் ஜூலை 22-ஆ... மேலும் பார்க்க

நிா்மலா மகளிா் கல்லூரியில் மாநில கருத்தரங்கம்

பேரூா் தவத்திரு சாந்தலிங்க அடிகளாரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, கோவை நிா்மலா மகளிா் கல்லூரியில் மாநில அளவிலான கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது. கல்லூரி தமிழ்த் துறையும், கோவை கணபதி தமிழ்ச் சங்... மேலும் பார்க்க

டெய்லா் ராஜாவுக்கு 5 நாள்கள் போலீஸ் காவல்

கோவை குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட பயங்கரவாதி டெய்லா் ராஜாவை 5 நாள்கள் காவலில் வைத்து விசாரிக்க போலீஸாருக்கு கோவை குற்றவியல் 5-ஆவது நடுவா் நீதிமன்றம் புதன்கிழமை அனுமதி வழங்கியது. கோவையில் க... மேலும் பார்க்க