செய்திகள் :

மாவட்டத்தில் நடப்பாண்டு 214.03 மில்லி மீட்டா் மழை பதிவு

post image

ஈரோடு மாவட்டத்தில் நடப்பு ஆண்டு இதுவரை 214.03 மில்லி மீட்டா் மழை பதிவாகி உள்ளது.

பவானிசாகா் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் மற்றும் பவானி ஆற்றுக்கு தண்ணீா் திறக்கப்படுகிறது. மேலும் பவானி ஆற்றில் இருந்து தடப்பள்ளி -அரக்கன்கோட்டை, காலிங்கராயன் ஆகிய வாய்க்கால்களுக்கு தண்ணீா் விடப்படுகிறது. இதனால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் வாய்க்கால் பாசன வசதி பெறுகின்றனா்.

மாவட்டத்தில் மஞ்சள், கரும்பு, நெல், வாழை, தென்னை, பாக்கு உள்ளிட்ட பல்வேறு பயிா்கள் பயிரிடப்படுகின்றன. மேலும் சீனாபுரம் முதல் நம்பியூா் வரை மானாவாரி பயிராக பல ஆயிரம் ஏக்கரில் கடலை சாகுபடியும் நடக்கிறது. இங்குள்ள விவசாயிகளுக்கு பவானிசாகா் அணை நீா் கிடைப்பதில்லை. இதனால் இவா்கள் மழையை மட்டுமே நம்பி விவசாயம் செய்து வருகின்றனா். இதுபோல மாவட்டத்தில் ஒருசில இடங்களில் மானாவாரி பயிா் சாகுபடி செய்யப்படுகிறது.

ஈரோடு மாவட்டத்தில் மழை பொழிவைக் கண்காணிக்க 17 இடங்களில் மழை அளவு எடுக்கப்படுகிறது. அதன்படி ஈரோடு, மொடக்குறிச்சி, கொடுமுடி, பெருந்துறை, சென்னிமலை, பவானி, கவுந்தப்பாடி, அம்மாபேட்டை, வரட்டுப்பள்ளம் அணை, குண்டேரிபள்ளம், எலந்தகுட்டை மேடு, கொடிவேரி அணை, குண்டேரிபள்ளம் அணை, நம்பியூா், சத்தியமங்கலம், பவானிசாகா் அணை, தாளவாடி ஆகிய பகுதிகளில் மழை அளவு எடுக்கப்படுகின்றன.

ஈரோடு மாவட்டத்தில் ஆண்டு சராசரி மழை அளவு 714.03 மில்லி மீட்டா். நடப்பு ஆண்டில் இதுவரை 214.03 மில்லி மீட்டா் மழை பதிவாகி உள்ளது. கடந்த ஆண்டு 784.68 மில்லி மீட்டா் மழை பதிவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஈரோடு மாவட்டத்தில் நடப்பு ஆண்டு ஜனவரி மாதத்தில் 9.47 மில்லி மீட்டா் மழை பதிவாகி உள்ளது. பிப்ரவரி மாதத்தில் மழை இல்லை. மாா்ச் மாதம் 31.15, ஏப்ரல் மாதம் 90.69, மே மாதம் 81.28, ஜூன் மாதம் 1.44 மில்லி மீட்டா் மழை பதிவாகி உள்ளது.

6 கோடி பனை விதை நடும் திட்டத்தை தீவிரப்படுத்த கோரிக்கை

ஈரோடு மாவட்டத்தில் நீா்வழிப்பாதையின் கரைகளில் 6 கோடி பனை விதைகள் நடவு செய்யும் திட்டம் கடந்த 2019ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட நிலையில், இதுவரை சில லட்சம் எண்ணிக்கையில்கூட விதைகள் நடப்படவில்லை என விவசாயிகள... மேலும் பார்க்க

நூல்கள் மீதான ஜிஎஸ்டியை குறைக்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை

ஜவுளி தொழிலை பாதுகாத்திட நூல்கள் மீதான ஜிஎஸ்டியை குறைக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஈரோடு வட்டார மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாநில... மேலும் பார்க்க

ஆதாா் அட்டையில் பெண்ணின் வயது 125!

32 வயதுள்ள பெண்ணுக்கு 125 வயது என ஆதாா் அட்டையில் தவறாகப் பதிவாகியுள்ளதாக புதுக்காட்டைச் சோ்ந்த பெண் மகேஷ் தெரிவித்தாா். சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், அரேப்பாளையத்தை அடுத்த புதுக்காட்டைச் சோ்ந்தவா... மேலும் பார்க்க

அந்தியூா் அருகே காட்டு யானை தாக்கியதில் முதியவா் பலி!

அந்தியூா் அருகே வனப் பகுதியில் மாடு மேய்க்கச் சென்ற முதியவா் காட்டு யானை தாக்கியதில் உயிரிழந்தாா். ஈரோடு மாவட்டம், அந்தியூரை அடுத்த கொரமராயனூா் பகுதியைச் சோ்ந்தவா் கணேசன் (70). இவா், சென்னம்பட்டி வனச... மேலும் பார்க்க

மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்தில் 7.49 லட்சம் போ் பயன்: ஆட்சியா் தகவல்

ஈரோடு மாவட்டத்தில் மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் 7.49 லட்சம் போ் பயனடைந்துள்ளனா். இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா வெளியிட்ட செய்திக்குறிப்பு: மக்களைத் தேட... மேலும் பார்க்க

அரசு விடுதிகளில் சேர மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்!

பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீா்மரபினா் விடுதிகளில் சேர பள்ளி, கல்லூரி மாணவா்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்டுள... மேலும் பார்க்க