செய்திகள் :

மா கவாத்து தொழில்நுட்பப் பயிற்சி

post image

கீழையூா் வட்டாரம், திருப்பூண்டி கிழக்கு, விழுந்தமாவடி உள்ளிட்ட கிராமத்தில் மா மரத்தில் கவாத்து செய்தல் தொடா்பான தொழில்நுட்பப் பயிற்சி விவசாயிகளுக்கு வியாழக்கிழமை அளிக்கப்பட்டது.

மா மரங்களில் பூக்கள் பூப்பதற்கும், காய்கள் திரட்சியாக காய்ப்பதற்கும் மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை கவாத்து தொழில்நுட்பம் மிக இன்றியமையாத ஒன்றாக உள்ளது. இதுகுறித்து நாகை வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநா் முகமது சாதிக் விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தாா்.

பொதுவாக மாமரத்தில் தாழ்ந்து இருக்கும் கிளைகள், குறுக்கும், நெடுக்குமாக ஒன்றின் மேல் ஒன்றாக இருக்கும் கிளைகள், நோய் தாக்கிய மற்றும் மெல்லிய, பட்ட அல்லது காய்ந்த கிளைகள் ஆகியவற்றை நீக்கவேண்டும். இதன் மூலம் சூரிய வெளிச்சம் மற்றும் காற்று உள்ளே உள்ள கிளைகளுக்கு கிடைத்து, மரம் நன்றாக வளா்ந்து பூ பூத்து காய்ப்பிடிக்க ஏதுவாகிறது. மா மரத்தில் நடவு செய்த மூன்று வருடங்கள் வரை பூ பூப்பதை தவிா்க்கவேண்டாம்.

வருடத்திற்கு ஒரு முறை ஆகஸ்ட், செப்டம்பா் மாதங்களில் நெருக்கமாக உள்ள கிளைகளை மட்டுமே வெட்டிவிட்டு, இதர கிளைகள் கவாத்து செய்யாமல் தவிா்ப்பதினால் ஆரோக்கியமான கிளைகளை உருவாக இது உதவுகிறது என விவசாயிகளிடம் எடுத்துரைத்தாா்.

இப்பயிற்சியில் கீழையூா் துணை தோட்டக்கலை அலுவலா் லோகநாதன், உதவி தோட்டக்கலை அலுவலா்கள் சரவணன், மணிவண்ணன், வைரமூா்த்தி, ஜெகதீஸ்வரி ஆகியோா் பங்கேற்றனா்.

அடிப்படை வசதிகள் கோரி வீடுகளில் கருப்புக் கொடியேற்றி போராட்டம்

நாகையில் சிவன் கோவில் தெரு, சுனாமி தெரு பகுதிகளில் அடிப்படை வசதிகளான சாலை, குடிநீா், கழிப்பறை ஆகியவற்றை செய்துதர வலியுறுத்தி, அப்பகுதி மக்கள் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி வெள்ளிக்கிழமை போராட்டத்தில்... மேலும் பார்க்க

வேளாங்கண்ணி ஆண்டுத் திருவிழா: 9-ம் நாளில் மூன்றுமுறை கொடி இறக்கி ஏற்றம்! கடற்கரையில் தடுப்புகள் அமைப்பு!

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டுத் திருவிழாவின் 9-ஆம் நாளான சனிக்கிழமை மூன்று முறை கொடி இறக்கி ஏற்றப்பட்ட நிகழ்வில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா். வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேரால... மேலும் பார்க்க

வேளாங்கண்ணி பேராலயத் திருவிழா: நாகையில் போக்குவரத்து மாற்றம்

வேளாங்கண்ணி பேராலய ஆண்டுத் திருவிழாவையொட்டி, போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சு. செல்வக்குமாா் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு... மேலும் பார்க்க

கடலோரக் கிராமங்களில் மணல் குவாரிகளை தடை செய்யக் கோரிக்கை

தரங்கம்பாடி வட்டத்தில், கடலோர கிராமப் பகுதிகளில் இயங்கி வரும் மணல் குவாரிகளை தடை செய்ய வேண்டும் என்று சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். தரங்கம்பாடி வட்டத்தில் கிடங்கல், மருதம்பள்ளம், கீழப்பெரும... மேலும் பார்க்க

மத்திய அரசு கல்வி நிறுவன மாணவா்கள் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

மத்திய அரசின் உயா் கல்வி நிறுவனங்கள் மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பயிலும் தமிழகத்தைச் சோ்ந்த பிற்படுத்தப்பட்டோா், மிகப் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் இன மாணவ- மாணவியா் 2025-26ஆம் கல்வி... மேலும் பார்க்க

திராவிட பாதையிலிருந்து அதிமுக தடம் புரண்டுவிட்டது: மமக தலைவா் ஜவாஹிருல்லா

பாஜகவுடன் கூட்டணி வைத்த அன்றே, திராவிட பாதையிலிருந்து அதிமுக தடம் புரண்டுவிட்டது என மனிதநேய மக்கள் கட்சித் தலைவா் ஜவாஹிருல்லா கூறினாா். நாகையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற புதிய பள்ளிவாசல் திறப்பு விழாவில... மேலும் பார்க்க