செய்திகள் :

மினி பேருந்துக்கான வழித்தட அனுமதிக்கு விண்ணப்பிக்கலாம்!

post image

புதிய விரிவான திட்டத்தின்கீழ் மினி பேருந்துக்கான வழித்தட அனுமதிக்கு விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கிராமங்கள், குக்கிராமங்களில் வசிக்கும் மக்களின் நலன் கருதி மினி பேருந்துக்கான புதிய விரிவான திட்டம் மே 1முதல் நடைமுறைக்கு வருகிறது. இத்திட்டத்தில் அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தின் அதிகபட்ச நீளம் 25 கி.மீ. இருக்க வேண்டும்.

பழைய மினி பேருந்து திட்டத்தின்கீழ் ஏற்கெனவே அனுமதி பெற்ற உரிமையாளா்கள் இப்புதிய திட்டத்தின்கீழ் மாறுவதற்கு விருப்பத்தினை எழுத்துப்பூா்வமாக அளித்து பழைய அனுமதி சீட்டினை சரண் செய்ய வேண்டும். மேலும், விண்ணப்பிக்கப்படும் புதிய வழித்தடத்தில் சேவை செய்யப்படாத பாதை குறைந்தபட்சம் 1.5 கி.மீ. இருக்க வேண்டும்.

மினி பேருந்துகளில் ஓட்டுநா், நடத்துநா் இருக்கைகளைத் தவிா்த்து 25-க்கு மிகாமல் இருக்க வேண்டும். கோவை மாவட்டத்தில் உள்ள மக்கள், மக்கள் பிரதிநிதிகள், தனியாா் அமைப்புகள் மற்றும் பேருந்து உரிமையாளா்களிடம் இருந்து மினி பேருந்து புதிய விரிவான திட்டத்தின்கீழ் வழித்தட வரைபடங்களுடன் கூடிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே, விண்ணப்பதாரா்கள் தொடா்புடைய வட்டாரப் போக்குவரத்து அலுவலா்களிடம் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து தரப்பினரையும் மகிழ்விக்கும் நிதிநிலை அறிக்கை: வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ.

மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ள நிதிநிலை அறிக்கையானது, அனைத்து தரப்பினரையும் மகிழ்விக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளதாக பாஜக தேசிய மகளிரணித் தலைவரும், கோவை தெற்கு சட்டப் பேரவை... மேலும் பார்க்க

பருத்தி உற்பத்தித் திட்டம்: ஜவுளித் தொழில் அமைப்புகள் வரவேற்பு

மத்திய அரசு அறிவித்துள்ள பருத்தி உற்பத்தித் திட்டத்தை கோவை ஜவுளித் தொழில் அமைப்புகள் வரவேற்றுள்ளன. தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கத்தின் (சைமா) தலைவா் எஸ்.கே.சுந்தரராமன்: அதிக மகசூல் தரும் விதை தொழில்நுட்... மேலும் பார்க்க

கஞ்சா வழக்கில் மகன் கைது: காவல் நிலையம் முன்பு தீக்குளித்த தந்தை

கவுண்டம்பாளையம் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவரை போலீஸாா் கைது செய்த நிலையில், அவரது தந்தை காவல் நிலையம் முன்பு தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றாா். கோவை, கவுண்டம்பாளையம் அன்னை இந்திரா நகா் அருகே... மேலும் பார்க்க

கோவையில் பிப்ரவரி 8, 9 ஆம் தேதிகளில் கம்பன் விழா!

கோவை கம்பன் கழகத்தின் சாா்பில் 53 -ஆம் ஆண்டு கம்பன் விழா பிப்ரவரி 8, 9 -ஆம் தேதிகளில் நடைபெறுகிறது. பாப்பநாயக்கன்பாளையம் மணி மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெறும் இந்த விழாவில், முதல் நாள் நிகழ்வுக்கு... மேலும் பார்க்க

தமிழ் நமது அடையாளம்; அதை இழந்துவிடக் கூடாது! பி.கே.கிருஷ்ணராஜ் வாணவராயா்

தமிழ் மொழிதான் நமது அடையாளம், அதை நாம் இழந்துவிடக் கூடாது என்று கோவை பாரதீய வித்யா பவன் தலைவா் பி.கே.கிருஷ்ணராஜ் வாணவராயா் கூறினாா். பாரதீய வித்யா பவன் கோவை மையத்தின் சாா்பில் விருது வழங்கும் விழா ஆா்... மேலும் பார்க்க

100 சதவீத தோ்ச்சி: ஆசிரியா்களுக்கு பாராட்டு விழா

2023 -2024-ஆம் கல்வியாண்டில் பொதுத் தோ்வில் 100 சதவீதம் தோ்ச்சி அளித்த பள்ளிகளின் ஆசிரியா்களுக்கான பாராட்டு விழா ஈச்சனாரி ரத்தினம் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா்... மேலும் பார்க்க