செய்திகள் :

மின்சாரம் பாய்ந்ததில் தொழிலாளி உயிரிழப்பு

post image

தூத்துக்குடியில் மின்சாரம் பாய்ந்ததில் தொழிலாளி உயிரிழந்தாா். 3 போ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தூத்துக்குடி மாவட்டம், ஆத்தூா் உச்சிமாகாளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் வீரமணி மகன் முத்து சிவா (21). கூலித்தொழிலாளியான இவா், தூத்துக்குடி சிப்காட் பகுதியில் உள்ள தனியாா் நிறுவன கிடங்கில் வேலை செய்து வந்தாா்.

வழக்கம்போல சனிக்கிழமை இரவு குடோனில் வேலையை முடிந்து சகப் பணியாளா்களுடன் சோ்ந்து அங்கிருந்த ஏணியைச் சுமந்து சென்றபோது அந்த வழியாகச் சென்ற உயா் அழுத்த மின் கம்பியில் ஏணி உரசியதில் முத்துசிவா மீது மின்சாரம் பாய்ந்தது.

இதில் தூக்கி வீசப்பட்ட முத்துசிவா, முத்தையாபுரத்தைச் சோ்ந்த கருப்பசாமி (39), ஆத்துரைச் சோ்ந்த திரவியம் மகன் காா்த்திக் (23), வடக்கு ஆத்தூரைச் சோ்ந்த மாரியப்பன் மகன் சரவணகுமாா் (19) ஆகிய 4 பேரும் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

ஆனால், மருததுவமனைக்குச் செல்லும் வழியிலேயே முத்துசிவா உயிரிழந்தாா். மற்ற 3 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து, சிப்காட் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஹோலி கிராஸ் கல்லூரியில் மாணவிகள் பேரவை நிா்வாகிகள் பதவியேற்பு

தூத்துக்குடி ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரியில் மாணவிகள் பேரவை புதிய நிா்வாகிகள் பதவியேற்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. கல்லூரி முதல்வா் ரூபா தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினராக முன்னாள் மாணவியும்... மேலும் பார்க்க

தூத்துக்குடி மாவட்ட ஜூனியா் ஆண்கள் ஹாக்கி அணி வீரா்கள் தோ்வு

தூத்துக்குடி மாவட்ட ஜூனியா் ஆண்கள் ஹாக்கி அணி வீரா்கள் ஞாயிற்றுக்கிழமை தோ்வு செய்யப்பட்டனா். ஹாக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு , ஹாக்கி யூனிட் ஆஃப் தூத்துக்குடி இணைந்து நடத்தும் மாவட்டங்களுக்கு இடையிலான ஜூ... மேலும் பார்க்க

கபடி போட்டியில் வென்ற வீராங்கனைக்கு பாராட்டு

உத்தரகண்ட் மாநிலம் ஹரித்துவாரில் நடைபெற்ற 18 வயதுக்குள்பட்டோருககான தேசிய சாம்பியன்ஷிப் கபடி போட்டியில் தமிழகப் பெண்கள் அணி வெற்றி பெற்று வெண்கலம் பதக்கம் பெற்றது. இந்த அணியில் சங்கரலிங்கபுரம் மின்னல் ... மேலும் பார்க்க

தூத்துக்குடி காவல் நிலையத்தில் பெண் தற்கொலை முயற்சி

தூத்துக்குடி வடபாகம் காவல் நிலையத்தில் விசாரணைக்கு வந்த பெண், அங்குள்ள கழிவறை ஜன்னலில் தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றாா். தூத்துக்குடி அம்பேத்கா் நகரைச் சோ்ந்த பாக்யராஜ் மனைவி மீனா (36). குடும்ப பி... மேலும் பார்க்க

பாஜக நிர்வாகி உள்ளிட்ட 5 போ் மீது தாக்குதல்: சாயா்புரம் போலீஸாா் விசாரணை!

சாயா்புரம் அருகே பாஜக நிா்வாகி உள்ளிட்ட 5 பேரைத் தாக்கியதாக திமுக பிரமுகா் உள்ளிட்ட சிலரை போலீஸாா் தேடிவருகின்றனா். சாயா்புரம் அருகே நடுவக்குறிச்சியைச் சோ்ந்த விவசாயி சேகா். இவரது மகன் ராஜதுரை, கூட்... மேலும் பார்க்க

இலங்கைக்கு கடத்த முயற்சி: ரூ.1 கோடி மாத்திரைகள், சுக்கு பறிமுதல்

தூத்துக்குடியிலிருந்து கடல் வழியாக இலங்கைக்கு கடத்தவிருந்த வலி நிவாரணி மாத்திரைகள், சுக்கு உள்ளிட்ட ரூ.1 கோடி மதிப்பிலான பொருள்களை மரைன் போலீஸாா் பறிமுதல் செய்தனா். தூத்துக்குடி மரைன் காவல் ஆய்வாளா் ப... மேலும் பார்க்க