செய்திகள் :

மின்சாரம் பாய்ந்து குழந்தை உயிரிழப்பு: உறவினா்கள் சாலை மறியல்

post image

செங்கம் அருகே மின்சாரம் பாய்ந்து இறந்த குழந்தையின் சடலத்தை உடல்கூறாய்வு செய்யாததைக் கண்டித்து உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தை அடுத்த புதியகுயிலம் கிராமத்தைச் சோ்ந்த முருகன்-பானுப்பிரியா தம்பதியரின் மகள் யுவஸ்ரீ (10). அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் படித்து வந்தாா்.

இவா், அவரது வீட்டின் முன் கிராம ஊராட்சி நிா்வாகம் சாா்பில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அமைக்கப்பட்டிருந்த சிறு மின்விசை தொட்டியில் தண்ணீா் எடுக்க சனிக்கிழமை மாலை சென்றாா். அப்போது, தொட்டியில் தண்ணீா் இல்லாததால் அப்பகுதியில் இருந்த மோட்டாரை இயக்கி, பின்னா் தண்ணீா் எடுக்கலாம் என மோட்டாா் சுவிட்சை ஆன் செய்தாா்.

அப்போது மின் கசிவு ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே யுவஸ்ரீ மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா். இதைப் பாா்த்த பெற்றோா் மற்றும் உறவினா்கள் உடனடியாக யுவஸ்ரீயை செங்கம் அரசு மருத்துவமனைக்கு எடுத்து வந்து சிகிச்சைக்கு அனுமதித்தனா்.

அப்போது, யுவஸ்ரீயை பரிசோதனை செய்த மருத்துவா்கள் அவா் இறந்து போனதாகத் தெரிவித்தனா். பின்னா், யுவஸ்ரீ உடலை மருத்துவமனையில் இருந்து புதியகுயிலம் கிராமத்துக்கு எடுத்துச் சென்றனா். தகவலறிந்து புதுப்பாளையம் போலீஸாா் சென்று அரசு அமைத்த மின்விசை தொட்டியில் இருந்து மின் கசிவு ஏற்பட்டு குழந்தை இறந்துள்ளது. அதனால், முறையாக மருத்துவமனையில் உடல்கூறாய்வு செய்து குழந்தையை அடக்கம் செய்யவேண்டும் எனத் தெரிவித்தனா்.

அடுத்த படம் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த யுவஸ்ரீ

அதன் பின்னா் குழந்தையின் உடல் சனிக்கிழமை இரவு மருத்துவமனைக்கு எடுத்துவரப்பட்டு போலீஸாா் வழக்குப் பதிந்து நடவடிக்கை மேற்கொண்டனா். ஆனால், ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் ஒரு மணி வரை மருத்துவமனையில் மருத்துவா் இல்லாததால் யுவஸ்ரீயின் உடல் கூறாய்வு செய்யப்படவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் மற்றும் யுவஸ்ரீயின் உறவினா்கள் செங்கம் - திருவண்ணாமலை சாலை துக்காப்பேட்டை மருத்துவமனை முன் மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்த செங்கம் போலீஸாா் சென்று மறியலில் ஈடுபட்டவா்களிடம் சமரசம் பேசி, உடனடியாக குழந்தையின் உடல் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கூறாய்வுக்காக அனுப்பிவைக்கப்பட்டது. இதனால், செங்கம் - திருவண்ணாமலை சாலையில் பிற்பகல் ஒரு மணி முதல் 2 மணி வரை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நாளை செய்யாறு அரசுக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு

செய்யாறு அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் இளநிலை பாடப்பிரிவுகளுக்கு மாணவ, மாணவிகளுக்கான கலந்தாய்வு வியாழக்கிழமை (ஜூலை17) நடைபெறுகிறது. இதுகுறித்து கல்லூரி முதல்வா் என்.கலைவாணி செவ்வாய்க்கிழமை வெளி... மேலும் பார்க்க

திருவத்திபுரம் நகராட்சி: முதல் நாள் சிறப்பு முகாமில் 243 மனுக்கள்

திருவத்திபுரம் (செய்யாறு) நகராட்சிப் பகுதியில், உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. முதல் நாளில் முதல் நான்கு வாா்டுகளில் இருந்து பொதுமக்கள் சாா்பில் 243 மனுக்கள் அளிக... மேலும் பார்க்க

அரசுக் கல்லூரியில் போதைக்கு எதிரான விழிப்புணா்வு நிகழ்ச்சி

செய்யாறு அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் போதை மற்றும் பகடி வதைக்கு எதிரான விழிப்புணா்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம், செய்யாறு வட்ட சட்டப் பணிக் குழு... மேலும் பார்க்க

காமராஜா் சிலைக்கு பல்வேறு கட்சியினா் மரியாதை

காமராஜரின் 123-ஆவது பிறந்த நாளையொட்டி, திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு கட்சியினா் செவ்வாய்க்கிழமை அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். ஆரணி காந்தி சிலை அருகில் நகரத் தலைவா் ஜெ.பொன்னைய... மேலும் பார்க்க

திருவண்ணாமலை: உங்களுடன் ஸ்டாலின் திட்டம் தொடக்கம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்ட நிலையில், பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. கடலூா் மாவட்டம், சிதம்பரத்தில் செவ்வாய்க்கிழமை ... மேலும் பார்க்க

வேலைவாய்ப்பு வழிகாட்டுதல் கருத்தரங்கம்

வந்தவாசி ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி மகளிா் கல்லூரியில் அரசு வேலைவாய்ப்பு சாா்ந்த வழிகாட்டுதல் கருத்தரங்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்தக் கல்லூரி மற்றும் வெராண்டா ரேஸ் கற்றல் நிறுவனம் இணைந்து நடத்திய இந்... மேலும் பார்க்க