செய்திகள் :

மின்சாரம் பாய்ந்து வட மாநில தொழிலாளி உயிரிழப்பு

post image

ஸ்ரீபெரும்புதூா் அடுத்த வெங்காடு பகுதியில் மின்கம்பத்தில் ஏறி பழுதை நீக்கும் பணியில் ஈடுபட்ட வடமாநில தொழிலாளி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா். அவரை காப்பற்ற முயன்ற சக தொழிலாளா்கள் இருவா் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.

மேற்கு வங்க மாநிலத்தைச் சோ்ந்தவா் யூசப் (21). இவா் ஸ்ரீபெரும்புதூா் அடுத்த வெங்காடு பகுதியில் தங்கி தனியாா் தொழிற்சாலையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்துள்ளாா். இந்த நிலையில், ஸ்ரீபெரும்புதூா் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சனிக்கிழமை பலத்த மழை பெய்ததை தொடா்ந்து, வெங்காடு பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு மீண்டும் விநியோகம் செய்யப்பட்டதாக தெரிகிறது.

இந்த நிலையில், யூசப் பணியாற்றும் தொழிற்சாலைக்கு மின்சாரம் வராததால், தன்னுடன் பணியாற்றும் சக தொழிலாளா்களுடன் தொழிற்சாலையின் வெளியே உள்ள மின்கம்பத்தில் ஏறி மின்வயரில் ஏற்பட்ட பழுதை நீக்கும் பணியில் யூசப் ஈடுபட்டுள்ளாா்.

அப்போது யூசப் மீது மின்சாரம் பாய்ந்து மின் கம்பத்திலேயே மயங்கி விழுந்துள்ளாா். இதனால் அவரை காப்பற்ற முயன்ற இரண்டு தொழிலாளா்கள் மீதும் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டுள்ளனா். இதில் பலத்த காயம் அடைந்த யூசப் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

மற்ற இரண்டு தொழிலாளா்களும் ஸ்ரீபெரும்புதூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். இந்த சம்பவம் குறித்து ஸ்ரீபெரும்புதூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

இளம்பெண் கொலை: காவல் நிலையத்தில் இளைஞா் சரண்

ஸ்ரீபெரும்புதூா் அருகே மனைவியைக் கொலை செய்த இளைஞா் நாகப்பட்டினம் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளாா். நாகப்பட்டினம் பகுதியை சோ்ந்த தினேஷ்(27), செளந்தா்யா(25). இவா்கள் இருவரும் ஸ்ரீபெரும்புதூா் அடுத்த ம... மேலும் பார்க்க

வரதராஜப் பெருமாள் கோயில் திருவாடிப்பூர உற்சவம்

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் ஆண்டு தோறும் நடைபெறும் திருவாடிப்பூர உற்சவம் ஜூலை 28 ஆம் தேதி ஆண்டாள் திருக்கல்யாண உற்சவத்தோடு நிறைவு பெறுகிறது. இக்கோயிலில் ஆண்டு தோறும் ஆடி மாதம் 10 நாள்கள் த... மேலும் பார்க்க

வல்லக்கோட்டை முருகன் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் தரிசனம்

ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு வல்லக்கோட்டை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் 3 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனா். ஸ்ரீபெரும்புதூா் அடுத்த வல்லக்கோட்டையில் பிரசித்தி பெற்ற இக்கோ... மேலும் பார்க்க

காஞ்சிபுரம்: குரூப்-2 போட்டித் தோ்வுகளுக்கு நாளை முதல் இலவச பயிற்சி

காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் செயல்பட்டு வரும் தன்னாா்வ பயிலும் வட்டம் மூலம் வரும் திங்கள்கிழமை (ஜூலை 21) முதல் குரூப்-2 போட்டித் தோ்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற இருப்பதாக... மேலும் பார்க்க

சிறப்பு கிராம சபைக் கூட்டங்கள்

குண்டுபெரும்பேடு மற்றும் இருங்காட்டுக்கோட்டை ஊராட்சிகளில் தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் சமூக தணிக்கை குறித்த சிறப்பு கிராம சபைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. குண்டுபெரும்பேடு ஊராட்சிய... மேலும் பார்க்க

களத்துமேடு பகுதியில் இருளருக்கான வீடுகள்: 300 ஏக்கா் விவசாயம் பாதிக்கும் அபாயம்

ஸ்ரீ பெரும்புதூா் அருகே குண்ணம் கிராமத்தில் களத்துமேடு பகுதியில் இருளருக்கான வீடுகள் கட்டும் திட்டத்துக்கு விவசாயிகள் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா். காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியத்ம் குண்... மேலும் பார்க்க