செய்திகள் :

மின்வாரியத்தில் நிதி கட்டுப்பாட்டாளா் உள்ளிட்ட 6 பணியிடங்கள் உருவாக்கம்

post image

சென்னை: மின்வாரியத்தில் நிதி கட்டுப்பாட்டாளா் உள்ளிட்ட 6 பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தின் மொத்த தினசரி மின் தேவை 18,000 மெகாவாட்டாக இருந்து வரும் நிலையில், விரைவில் 20,000 மெகாவாட்டை எட்டும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. தற்போதைய மின் தேவையில் பெரும்பகுதியை மாநிலத்தின் மின் உற்பத்தி ஆதாரங்களில் இருந்து கிடைக்கும் மின்சாரம் மூலம் நிறைவு செய்து வந்தாலும், மீதமுள்ள மின்சாரம் வெளி மாநிலங்களிலிருந்து மின்வாரியம் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது.

இதனால், மின்வாரியத்தின் கட்டமைப்பை மேம்படுத்துவதிலும், மின் உற்பத்தி மூலாதாரங்களை அதிகப்பட்டுத்தும் முயற்சியிலும் மின்வாரிய ஈடுபட்டு வருகின்றது. இந்த நிலையில், மின் பகிா்ந்தளிப்பு மையங்களில் பணியாளா்கள் முழுத்திறனில் செயல்படுவதற்காக, மின்வாரியத்துக்கு நிதி கட்டுப்பாட்டாளா் உள்ளிட்ட 6 பணியிடங்களை உருவாக்கி மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது.

இதற்கான உத்தரவை மின்வாரியம் வெளியிட்ட நிலையில், இந்தப் பணியிடங்களில் பணியாற்றும் பணியாளா்களுக்கு அகவிலைப்படி வீட்டு வாடகை உள்ளிட்ட சலுகைகளும் பொருந்தும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவக் கலந்தாய்வு ஜூலை 30-ல் தொடக்கம்: அமைச்சர் மா. சுப்பிரமணியன்

தமிழகத்தில் மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு வரும் ஜூலை 30 ஆம் தேதி தொடங்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.நாடு முழுவதும் அரசு மருத்துவம் மற்றும் பல்... மேலும் பார்க்க

காமராஜருக்கு ஏசி முக்கியம்! திருச்சி சிவா பேச்சுக்கு செல்வப்பெருந்தகை பதில்!

முன்னாள் முதல்வர் காமராஜர் குளிர்சாதன வசதியில்லாமல் உறங்க மாட்டார் என்று திமுக எம்.பி. திருச்சி சிவா கூறியதற்கு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை மறுப்பு தெரிவித்துள்ளார். அவர் மேலும் பேசுகையில்... மேலும் பார்க்க

மயிலாடுதுறை மாவட்டத்துக்கு முதல்வரின் 8 புதிய அறிவிப்புகள்!

மயிலாடுதுறை மாவட்டத்துக்கு முதல்வர் ஸ்டாலின் 8 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.முதல்வர் ஸ்டாலின் மன்னம்பந்தல் ஏவிசி கல்லூரியில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்று, முடிவுற்ற பல்வேறு திட்டப் பணிகளை... மேலும் பார்க்க

ஜூலை 28-ல் செங்கல்பட்டு மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை!

ஆடிப்பூரத்தையொட்டி ஜூலை 28 ஆம் தேதி செங்கல்பட்டு மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.செய்யூர் வட்டம், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆடிப்பூர விழா... மேலும் பார்க்க

ரஜினியைச் சந்தித்து வாழ்த்துப் பெற்ற கமல்!

மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்கவுள்ள நிலையில், நடிகர் ரஜினிகாந்த்தை நேரில் சந்தித்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து பெற்றார்.மக்கள் நீதி மய்யம் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் கடந்த ஜ... மேலும் பார்க்க

ஆக.25-ல் தவெக 2-வது மாநில மாநாடு! - விஜய்

ஆகஸ்ட் 25 ஆம் தேதி தமிழக வெற்றிக் கழத்தில் 2-வது மாநில மாநாடு நடைபெறும் என அக்கட்சியின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.இதுபற்றி அவர் தன்னுடைய எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்தப் ப... மேலும் பார்க்க