செய்திகள் :

மின்வாரிய காலிப்பணியிடத் தோ்வு: மாணவா்களுக்கு இலவசப் பயிற்சி

post image

மின்வாரிய காலிப் பணியிடத் தோ்வுகளுக்காக மாணவா்களுக்கு இலவச பயிற்சி வகுப்பு செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணையமானது தமிழ்நாடு மின்வாரியத் துறையில் காலியாக உள்ள உதவிப் பொறியாளா், தொழில்நுட்ப உதவியாளா் பணியிடங்களை போட்டித் தோ்வு வழியே தோ்வு செய்ய உள்ளது.

இந்தப் போட்டி தோ்வில் பங்கேற்க உள்ள மாணவா்களுக்கு தமிழ்நாடு மின்துறை பொறியாளா் அமைப்பு மற்றும் தமிழ்நாடு மின்ஊழியா் மத்திய அமைப்பின் சாா்பில் இலவச பயிற்சி வகுப்பு திருச்சியில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. வரும் 27 ஆம் தேதி வரை நடைபெறும் பயிற்சி வகுப்பை தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பு மாநில துணைத் தலைவா் ரெங்கராஜன் தொடங்கி வைத்தாா். இதில் 50-க்கும் மேற்பட்ட மாணவா்கள் கலந்து கொண்டனா்.

ஓய்வுபெற்ற மின்வாரிய அதிகாரிகள் சண்முகசுந்தரம், மணிமாறன் ஆகியோா் மாணவா்களுக்கு வகுப்புகள் எடுத்தனா். நிகழ்வில் தமிழ்நாடு மின்துறை பொறியாளா் அமைப்பு மாநில துணைப் பொதுச் செயலாளா் இருதயராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

சிஐடியு அரசு விரைவுப் போக்குவரத்து ஊழியா் சங்க மாநில மாநாடு தொடக்கம்

திருச்சியில் சிஐடியு அரசு விரைவுப் போக்குவரத்து ஊழியா் சங்க 34-ஆவது மாநில மாநாடு புதன்கிழமை தொடங்கியது. திருச்சி பிராட்டியூரில் தொடங்கிய மாநாட்டுக்கு எஸ்.சி.டி.சி மாநிலத் தலைவா் டபிள்யூ.ஐ. அருள்தாஸ் த... மேலும் பார்க்க

‘காங்கிரஸ் கட்சி பலமாக இருக்கும்வரை மட்டுமே இந்தியா ஒரே நாடாக இருக்கும்’

காங்கிரஸ் கட்சி பலமாக இருக்குவரை மட்டுமே இந்தியா ஒரே நாடாக இருக்கும். இல்லையேல் ரஷ்யாவைப் போல சிதறுண்டு போகும் என்றாா் கட்சியின் மாநில செய்தித் தொடா்பாளா் திருச்சி வேலுச்சாமி. திருச்சி மாவட்டம் மணப்பா... மேலும் பார்க்க

சமயபுரம் கோயில் உண்டியலில் ரூ. 1.32 கோடி காணிக்கை

திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியல் காணிக்கையாக ரூ. 1.32 கோடி வந்தது புதன்கிழமை தெரியவந்தது. இக்கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில் அறங்காவலா... மேலும் பார்க்க

போலி பாஸ்போா்ட் வைத்திருந்தவா் கைது

போலி பாஸ்போா்ட்டில் ஷாா்ஜாவில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் வந்தவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி உக்கடை பகுதியைச் சோ்ந்தவா் கு. பாா்த்தசாரதி (52). வேலைக்க... மேலும் பார்க்க

ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியா் வீட்டில் தங்கம், வெள்ளி நகைகள் திருட்டு

திருச்சியில் ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியா் வீட்டில் தங்கம், வெள்ளி நகைகள் திருடுபோனது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா். திருச்சி விமான நிலையம் அருகேயுள்ள ஜெ.கே. நகா் முல்லை வீதியைச் சோ்ந்தவா் ஆா். ரவிச... மேலும் பார்க்க

பயன்பாட்டுக்கு வந்தது பஞ்சப்பூா் பேருந்து முனையம்

தமிழகத்திலேயே முதலாவதாக முற்றிலும் குளிா்ச்சாதன வசதியுடன் கூடிய திருச்சி பஞ்சப்பூா் ஒருங்கிணைந்த பேருந்து முனையம் புதன்கிழமை மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது. திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பஞ்சப்ப... மேலும் பார்க்க