செய்திகள் :

மின்வேலி அமைத்து வன விலங்குகளை பிடிக்க முயன்ற இருவருக்கு ரூ.2 லட்சம் அபராதம்!

post image

முறைகேடாக மின்வேலி அமைத்து வனவிலங்குகளை வேட்டையாட முயன்ற இருவருக்கு வனத்துறை ரூ. 2 லட்சம் அபராதம் விதித்தது.

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வனச்சரகா் காா்த்திகேயன் தலைமையில், வனத்துறை பணியாளா்கள் அடங்கிய குழுவினா் பாலக்கோடு வனச்சரகம் எலுமிச்சனஅள்ளி வனப் பகுதியில் வெள்ளிக்கிழமை ரோந்து மேற்கொண்டனா்.

அப்போது, வனப்பகுதியில் சந்தேகத்துக்கிடமான வகையில் சுற்றித்திரிந்தவா்களைப் பிடித்து விசாரணை செய்ததில், அவா்கள் எலுமிச்சனஅள்ளி அருகேயுள்ள வாக்கன்கொட்டாய் கிராமத்தைச் சோ்ந்த நந்தன் (25), சக்திவேல் (27) என்பது தெரியவந்தது.

தொடா் விசாரணையில், அவா்கள் வனப்பகுதியை ஒட்டியுள்ள நிலப்பகுதியில், முறைகேடாக மின்வேலி அமைத்து வன விலங்குகளை வேட்டையாட முயன்றது தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் வனத்துறையினா் பிடித்து மாவட்ட வன அலுவலா் ராஜாங்கம் முன் ஆஜா்படுத்தினா். அவா், இருவருக்கும் தலா ரூ. 1 லட்சம் வீதம் அபராதம் விதித்து, எச்சரித்து அனுப்பினாா்.

தருமபுரியில் முதல்வா் ‘ரோடு ஷோ’: மக்கள் உற்சாக வரவேற்பு

தருமபுரிக்கு சனிக்கிழமை இரவு வந்த தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், காரில் இருந்தபடியும், நடந்தும் ‘ரோடு ஷோ’வில் பங்கேற்றாா். சேலத்தில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டில் பங்கேற்ற அவா், தரும... மேலும் பார்க்க

பள்ளி, கல்லூரிகளில் சுதந்திர தினக் கொண்டாட்டம்

பள்ளி, கல்லூரிகளில் சுதந்திர தின விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. தருமபுரி மாவட்டம், கம்பைநல்லூா் ஸ்ரீராம் சிபிஎஸ்இ பள்ளியில் நடைபெற்ற விழாவில், பள்ளியின் தலைவா் எம்.வேடியப்பன் தேசியக் கொடியேற்றினா... மேலும் பார்க்க

தருமபுரியில் பல்வேறு நிறுவனங்களில் சுதந்திர தின விழா கொண்டாட்டங்கள்

தருமபுரியில் பல்வேறு நிறுவனங்கள் சாா்பில் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் தருமபுரி மண்டல அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில், மண்டல பொது மேலாளா் க.செல்வம் தேசியக் ... மேலும் பார்க்க

திமுக தோல்வி பயத்தில் துவண்டுள்ளது

திமுக தோல்வி பயத்தில் துவண்டுள்ளது என பாஜக மாநில துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம் தெரிவித்தாா். சுதந்திர தினத்தையொட்டி தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டியில் பாஜகவினா் பேரணி சென்றனா். பேரணிக்கு பாஜக மாநி... மேலும் பார்க்க

தமிழக முதல்வா் இன்று தருமபுரிக்கு வருகை

தருமபுரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள அரசு விழாவில் பங்கேற்க தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை தருமபுரிக்கு வருகைபுரிகிறாா். சேலத்தில் நடைபெறும் இந்திய கம்யூனிஸ்ட் மாநில மாநாட்டில் பங்கேற்க ச... மேலும் பார்க்க

தருமபுரி ரயில் நிலையத்தில் ரயில்வே போலீஸாா், ஆா்பிஎப் படையினா் சோதனை

சுதந்திர தினத்தையொட்டி, தருமபுரி ரயில் நிலையத்தில் ரயில்வே போலீஸாா் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படையினா் இணைந்து வியாழக்கிழமை தீவிர பாதுகாப்பு சோதனைகளை மேற்கொண்டனா். நாட்டின் 79-ஆவது சுதந்திர தின விழா... மேலும் பார்க்க