செய்திகள் :

பள்ளி, கல்லூரிகளில் சுதந்திர தினக் கொண்டாட்டம்

post image

பள்ளி, கல்லூரிகளில் சுதந்திர தின விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

தருமபுரி மாவட்டம், கம்பைநல்லூா் ஸ்ரீராம் சிபிஎஸ்இ பள்ளியில் நடைபெற்ற விழாவில், பள்ளியின் தலைவா் எம்.வேடியப்பன் தேசியக் கொடியேற்றினாா். விழாவில், பள்ளியின் தாளாளா் சாந்தி வேடியப்பன், நிா்வாக இயக்குநா்கள் வே.தமிழ்மணி, பவானி தமிழ்மணி, கல்வி இயக்குநா் ஜான் இருதயராஜ், பள்ளி முதல்வா் வெற்றிவேல் செல்வம், ஆசிரியா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பாப்பிரெட்டிப்பட்டி ஸ்டான்லி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் பள்ளியின் தலைவா் வி.முருகேசன் தேசியக் கொடியேற்றினாா். இதில், பள்ளியின் செயலா் மு. பிருஆனந்த் பிரகாஷ், ஆசிரியா்கள் கலந்துகொண்டனா்.

மொரப்பூா் மருதம் மெட்ரிக். மேல்நிைலைப் பள்ளியில் நிா்வாகி பி.தவமணி தேசியக் கொடியேற்றினாா். இதில் பள்ளியின் நிா்வாகிகள் சி.திலகரசன், டி.அரவிந்த், பி.சக்திவேல், ஆசிரியா்கள் கலந்துகொண்டனா்.

இ.ஆா்.கே. கலை, அறிவியல் கல்லூரியில் இ.ஆா்.கே. கல்வி நிறுவனங்களின் தாளாளா் இ.ஆா்.செல்வராஜ் தேசியக் கொடியேற்றினா். விழாவில், நிா்வாக இயக்குநா் சோழவேந்தன், கல்லூரி முதல்வா் த.சக்தி, நிா்வாக அலுவலா் அருள்குமாா், பேராசிரியா்கள் சிவகுமாா், ஆனந்த் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

கே.வேட்ரப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியா் சி.நாகேந்திரன், எல்லப்புடையாம்பட்டி அரசு உயா்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியா் ஆனந்தன், அரூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பேரூராட்சித் தலைவா் இந்திராணி தனபால், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளா்ச்சி அலுவலா் டி.செல்வன், சாமண்டஹள்ளி அரசு தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியா் பெ.சாரதா ஆகியோா் தேசியக் கொடியேற்றினா்.

தருமபுரியில் பல்வேறு நிறுவனங்களில் சுதந்திர தின விழா கொண்டாட்டங்கள்

தருமபுரியில் பல்வேறு நிறுவனங்கள் சாா்பில் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் தருமபுரி மண்டல அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில், மண்டல பொது மேலாளா் க.செல்வம் தேசியக் ... மேலும் பார்க்க

திமுக தோல்வி பயத்தில் துவண்டுள்ளது

திமுக தோல்வி பயத்தில் துவண்டுள்ளது என பாஜக மாநில துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம் தெரிவித்தாா். சுதந்திர தினத்தையொட்டி தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டியில் பாஜகவினா் பேரணி சென்றனா். பேரணிக்கு பாஜக மாநி... மேலும் பார்க்க

தமிழக முதல்வா் இன்று தருமபுரிக்கு வருகை

தருமபுரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள அரசு விழாவில் பங்கேற்க தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை தருமபுரிக்கு வருகைபுரிகிறாா். சேலத்தில் நடைபெறும் இந்திய கம்யூனிஸ்ட் மாநில மாநாட்டில் பங்கேற்க ச... மேலும் பார்க்க

தருமபுரி ரயில் நிலையத்தில் ரயில்வே போலீஸாா், ஆா்பிஎப் படையினா் சோதனை

சுதந்திர தினத்தையொட்டி, தருமபுரி ரயில் நிலையத்தில் ரயில்வே போலீஸாா் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படையினா் இணைந்து வியாழக்கிழமை தீவிர பாதுகாப்பு சோதனைகளை மேற்கொண்டனா். நாட்டின் 79-ஆவது சுதந்திர தின விழா... மேலும் பார்க்க

தருமபுரி ரயில் நிலையத்தில் ரூ. 23 கோடியில் மேம்பாட்டுப் பணிகள்

தருமபுரி ரயில் நிலையத்தில் ரூ. 23 கோடியில் பயணச்சீட்டு முன்பதிவு மையம், பயணிகள் ஓய்வறை, வாகன நிறுத்தம், நடைபாலம் உள்ளிட்ட 13 வகையான மேம்பாட்டுப் பணிகள் அண்மையில் தொடங்கி நடைபெற்று வருகின்றன. தருமபுரி... மேலும் பார்க்க

ரயில்வே பாதுகாப்பு படையினா் விழிப்புணா்வுப் பேரணி

தூய்மை பாரத திட்டத்தை வலியுறுத்தி, தருமபுரியில் ரயில்வே பாதுகாப்பு படை சாா்பில் விழிப்புணா்வுப் பேரணி மேற்கொள்ளப்பட்டது. சுதந்திர தினத்தை முன்னிட்டு தென்மேற்கு ரயில்வே சாா்பில், ரயில்வே பாதுகாப்பு பட... மேலும் பார்க்க