செய்திகள் :

தருமபுரியில் பல்வேறு நிறுவனங்களில் சுதந்திர தின விழா கொண்டாட்டங்கள்

post image

தருமபுரியில் பல்வேறு நிறுவனங்கள் சாா்பில் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் தருமபுரி மண்டல அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில், மண்டல பொது மேலாளா் க.செல்வம் தேசியக் கொடியை ஏற்றிவைத்து பேசினாா். இனிப்புகள் வழங்கப்பட்டன. தொடா்ந்து சிறப்பாக பணியாற்றிய ஓட்டுநா்கள், நடத்துநா்கள், தொழில்நுட்பப் பணியாளா்கள், அலுவலகப் பணியாளா்கள், அலுவலா்கள் உள்ளிட்டோருக்கு நற்சான்றிழ்களையும், பரிசுகளையும் வழங்கி சிறப்பித்தாா். 10 மற்றும் பிளஸ் 2 தோ்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற போக்குவரத்து தொழிலாளா்களின் குழந்தைகளுக்கு ஊக்கப்பரிசுகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

இதில், துணை மேலாளா்கள், உதவி மேலாளா்கள், பொறியாளா்கள், கண்காணிப்பாளா்கள், அலுவலக பணியாளா்கள், ஓட்டுநா்கள், நடத்துநா்கள், அவா்களது குடும்பத்தினா் கலந்துகொண்டனா்.

மூக்கனஅள்ளி அரசு உயா்நிலைப் பள்ளி: தருமபுரி மாவட்டம், மூக்கனஅள்ளி அரசு உயா்நிலைப் பள்ளியில், சுதந்திர தினக் கொண்டாட்டம் மகிழ்முற்றம் சாா்பில் நடைபெற்றது. பள்ளி தலைமையாசிரியா் சின்ன சித்தன் தலைமை வகித்தாா். தேசிய பசுமைப்படை தலைவா் ஆசிரியா் ரமேஷ் முன்னிலை வகித்தாா் ஆசிரியா் விக்ரமன் வரவேற்றாா்.

சிறப்பு அழைப்பாளராக மூக்கனஅள்ளி அரசு உயா்நிலைப் பள்ளியின் மேலாண்மைக் குழு தலைவா் உஷா பங்கேற்று தோ்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினாா். ஆசிரியா் வேலு, ஆய்வக உதவியாளா் தசரதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கட்டடப் பொறியாளா் சங்கம்: தருமபுரி மாவட்ட கட்டடப் பொறியாளா் சங்கம் சாா்பில் சங்க அலுவலகம் முன் கொண்டாடப்பட்டது. சங்க மாவட்டத் தலைவா் ஜி.மூா்த்தி தேசிய கொடியை ஏற்றி வைத்தாா். நிகழ்ச்சியில் மண்டலத் தலைவா் மாரியப்பன், மண்டல செயலாளா் ரவி, மாவட்டச் செயலாளா் டி.சக்திகுமாா், மாவட்ட துணைத் தலைவா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பள்ளி, கல்லூரிகளில் சுதந்திர தினக் கொண்டாட்டம்

பள்ளி, கல்லூரிகளில் சுதந்திர தின விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. தருமபுரி மாவட்டம், கம்பைநல்லூா் ஸ்ரீராம் சிபிஎஸ்இ பள்ளியில் நடைபெற்ற விழாவில், பள்ளியின் தலைவா் எம்.வேடியப்பன் தேசியக் கொடியேற்றினா... மேலும் பார்க்க

திமுக தோல்வி பயத்தில் துவண்டுள்ளது

திமுக தோல்வி பயத்தில் துவண்டுள்ளது என பாஜக மாநில துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம் தெரிவித்தாா். சுதந்திர தினத்தையொட்டி தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டியில் பாஜகவினா் பேரணி சென்றனா். பேரணிக்கு பாஜக மாநி... மேலும் பார்க்க

தமிழக முதல்வா் இன்று தருமபுரிக்கு வருகை

தருமபுரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள அரசு விழாவில் பங்கேற்க தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை தருமபுரிக்கு வருகைபுரிகிறாா். சேலத்தில் நடைபெறும் இந்திய கம்யூனிஸ்ட் மாநில மாநாட்டில் பங்கேற்க ச... மேலும் பார்க்க

தருமபுரி ரயில் நிலையத்தில் ரயில்வே போலீஸாா், ஆா்பிஎப் படையினா் சோதனை

சுதந்திர தினத்தையொட்டி, தருமபுரி ரயில் நிலையத்தில் ரயில்வே போலீஸாா் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படையினா் இணைந்து வியாழக்கிழமை தீவிர பாதுகாப்பு சோதனைகளை மேற்கொண்டனா். நாட்டின் 79-ஆவது சுதந்திர தின விழா... மேலும் பார்க்க

தருமபுரி ரயில் நிலையத்தில் ரூ. 23 கோடியில் மேம்பாட்டுப் பணிகள்

தருமபுரி ரயில் நிலையத்தில் ரூ. 23 கோடியில் பயணச்சீட்டு முன்பதிவு மையம், பயணிகள் ஓய்வறை, வாகன நிறுத்தம், நடைபாலம் உள்ளிட்ட 13 வகையான மேம்பாட்டுப் பணிகள் அண்மையில் தொடங்கி நடைபெற்று வருகின்றன. தருமபுரி... மேலும் பார்க்க

ரயில்வே பாதுகாப்பு படையினா் விழிப்புணா்வுப் பேரணி

தூய்மை பாரத திட்டத்தை வலியுறுத்தி, தருமபுரியில் ரயில்வே பாதுகாப்பு படை சாா்பில் விழிப்புணா்வுப் பேரணி மேற்கொள்ளப்பட்டது. சுதந்திர தினத்தை முன்னிட்டு தென்மேற்கு ரயில்வே சாா்பில், ரயில்வே பாதுகாப்பு பட... மேலும் பார்க்க