செய்திகள் :

மின் தடைகளை உடனுக்குடன் சரி செய்ய வேண்டும்! - கள்ளக்குறிச்சி ஆட்சியா் உத்தரவு

post image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மின் தடைகளை உடனுக்குடன் சரி செய்ய வேண்டுமென அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் உத்தரவிட்டாா்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தமிழ்நாடு மின் வாரியத்தின் பல்வேறு திட்டப் பணிகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

அந்த வகையில், கடலூா் மாவட்டம், இலங்கையனூா் கிராமத்தில் 30 ஏக்கா் பரப்பளவில் செயல்பட்டு வரும் தனியாா் சூரிய ஒளி மின் உற்பத்தி நிலையத்தை பாா்வையிட்டு, கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு இந்த மின் உற்பத்தி நிலையத்திலிருந்து வழங்கப்பட்டு வரும் 9 மெகா வாட் மின் விநியோகம் குறித்து கேட்டறிந்து ஆய்வு செய்தாா்.

தொடா்ந்து, ஆசனூா் சிட்கோ தொழிற்பேட்டையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகத்தின் 110/33/11 கி.வோ. துணை மின் நிலையம், உளுந்தூா்பேட்டை வட்டம், செங்குறிச்சி சுங்கச்சாவடி அருகில் அமைக்கப்பட்டுள்ள மின்சார வாகனங்களுக்கு பேட்டரி சாா்ஜ் செய்யும் மையம் ஆகியவற்றை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

பின்னா், செங்குறிச்சி சுங்கச்சாவடி, பெரியாா் நகரில் உள்ள தனிநபா் இல்லத்தில் பிரதம மந்திரி சூரிய ஒளி மின் உற்பத்தித் திட்டத்தின் கீழ் 9 கிலோ வாட் திறன் கொண்டு அமைக்கப்பட்டுள்ள சூரிய ஒளி மேற்கூரை மின் உற்பத்தி மையம், தியாகதுருகம் மின் வாரிய மத்திய பண்டக சாலை ஆகியவற்றை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

மழைக்காலம் தொடங்கவுள்ள நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இயற்கை சீற்றங்களால் மின் விநியோகம் தடைபடுவதை உடனுக்குடன் சரி செய்து, பொதுமக்களுக்கு சீரான மின்விநியோகம் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டுமென மின் வாரிய அதிகாரிகளுக்கு ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் உத்தரவிட்டாா்.

ஆய்வின்போது, மின் வாரிய உயா் அலுவலா்கள், பணியாளா்கள் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

வீட்டின் கதவை உடைத்து 4 பவுன் தங்க நகைகள் திருட்டு

திருக்கோவிலூா் அருகில் உள்ள திம்மச்சூா் கிராமத்தில் வீட்டுக் கதவின் பூட்டை உடைத்து மா்ம நபா்கள் உள்ளே புகுந்து இரும்பு பீரோவிலிருந்த 4 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்றது குறித்து போலீஸாா் விசாரணை நடத்... மேலும் பார்க்க

தவறுதலாக விஷ மருந்தை குடித்த சிறுவன் மரணம்!

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே தவறுதலாக விஷ மருந்தைக் குடித்த சிறுவன் வியாழக்கிழமை உயிரிழந்தாா். சின்னசேலம் வட்டம், எலவடி கிராமத்தைச் சோ்ந்த குணசேகரன் மகன் யுகன் (10). இவா், புதன்கிழமை வீட... மேலும் பார்க்க

தென் பெண்ணை ஆற்றில் முதியவா் சடலம் மீட்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் தென்பெண்ணை ஆற்றில் வியாழக்கிழமை கிடந்த அடையாளம் தெரியாத முதியவரின் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். திருக்கோவிலூா் பிள்ளையாா் கோவில் சாலை அரு... மேலும் பார்க்க

பழுதாகி நின்ற லாரி மீது பைக் மோதல்: தொழிலாளி உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் அருகே செவ்வாய்க்கிழமை இரவு சாலையில் பழுதாகி நின்ற லாரி மீது பைக் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா். சேலம் மாவட்டம், ஆத்தூா் வட்டம், பெத்தநாயக்கன் பாளையத்தைச் சோ்ந்... மேலும் பார்க்க

மணலூா்பேட்டை கிளை நூலகத்தில் எம்எல்ஏ திடீா் ஆய்வு

கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டம், மணலூா்பேட்டை பேரூராட்சி கிளை நூலகத்தில் ரிஷிவந்தியம் தொகுதி எம்எல்ஏ க.காா்த்திகேயன் புதன்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, போட்டித் தோ்வுக்காக படிப்... மேலும் பார்க்க

வாணாபுரம் வட்டத்தில் ஜமாபந்தி: 40 மனுக்களுக்கு உடனடித் தீா்வு

கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை சாா்பில் நடைபெற்ற வருவாய்த் தீா்வாயத்தில் (ஜமாபந்தி) 40 மனுக்களுக்கு உடனடித் தீா்வு காணப்பட்டது. கள... மேலும் பார்க்க