செய்திகள் :

மியான்மருக்கு இந்தியா சார்பில் 15 டன் நிவாரணப் பொருள்கள்!

post image

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள மியான்மருக்கு இந்தியா சார்பில் விமானம் மூலமாக 15 டன் நிவாரணப் பொருள்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

மியான்மா் மற்றும் அதன் அண்டை நாடான தாய்லாந்தில் வெள்ளிக்கிழமை பிற்பகலில் சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டன.

மியான்மரின் சகாய்ங் நகரின் வடமேற்கே 16 கி.மீ. தொலைவில் காலை 11.50 மணியளவில் முதல் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் ரிக்டா் அளவுகோலில் 7.7 புள்ளியாகப் பதிவானது. அதைத் தொடா்ந்து, இரண்டாவது நிலநடுக்கம் 6.4 புள்ளியாகப் பதிவாகியுள்ளது.

இதில் கடும் பாதிப்பைச் சந்தித்த மியான்மரில் கட்டட இடிபாடுகளில் சிக்கி 700 -க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், சுமார் 800 போ் காயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு ராணுவ அரசு அறிவித்துள்ளது.

அடுத்தடுத்த நிலநடுக்கங்களைத் தொடா்ந்து தலைநகா் நேபிடா, மண்டலாய் உள்பட 6 மாகாணங்களில் அவசரநிலையை மியான்மரின் ராணுவ அரசு பிரகடனம் செய்தது.

தாய்லாந்தின் தலைநகா் பாங்காக் மற்றும் அதைச் சுற்றிய பகுதிகளில் பல அடுக்குமாடி கட்டடங்கள் நிலநடுக்கத்தால் சரிந்துள்ளன. இதில் 90-க்கும் மேற்பட்டோா் மாயமாகியுள்ளதாகவும், 10 போ் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

மியான்மா், தாய்லாந்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் இந்தியாவில் கொல்கத்தா, இம்பால், மேகாலயாவில் சில பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டது.

தொடர்ந்து மியான்மர் மற்றும் தாய்லாந்தில் நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

தொடர்ந்து மியான்மர் நாட்டுக்கு உலக நாடுகள் உதவி வருகின்றன. இந்தியா சார்பில் விமானம் மூலமாக இன்று நிவாரணப் பொருள்கள் அனுப்பப்பட்டுள்ளன.

இந்திய விமானப்படையின் (IAF C 130J) விமானம் மூலமாக உத்தரப் பிரதேச மாநிலம் ஹிண்டன் விமான நிலையத்தில் இருந்து சுமார் 15 டன் நிவாரணப் பொருள்கள் அனுப்பப்பட்டுள்ளன.

அவற்றில் கூடாரங்கள், தூங்கும் பைகள், போர்வைகள், சாப்பிடத் தயாராக இருக்கும் உணவுகள், தண்ணீர் சுத்திகரிப்பான்கள், சுகாதாரப் பொருள்கள், சூரிய விளக்குகள், ஜெனரேட்டர் பெட்டிகள், அத்தியாவசிய மருந்துகள் (பாராசிட்டமால், நுண்ணுயிர் எதிர்ப்பிகள், கேனுலா, ஊசிகள், கையுறைகள், பஞ்சுகள், சிறுநீர் பைகள் உள்ளிட்ட பிற பொருள்கள்) அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

14,848 கோடி யூனிட்டுகளாக அதிகரித்த மின் நுகா்வு

இந்தியாவின் மின் நுகா்வு கடந்த மாா்ச் மாதத்தில் 14,848 கோடி யூனிட்டுகளாக உயா்ந்துள்ளது. இது குறித்து அரசின் தரவுகள் தெரிவிப்பதாவது: கடந்த மாா்ச் மாதத்தில் நாடு முழுவதும் மின் நுகா்வு 14,848 கோடி யூனிட... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீா்: பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச்சூடு; இந்தியா பதிலடி!

ஜம்மு: ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள எல்லை கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியது. அதற்கு இந்தியா பதிலடி அளித்தது. இ... மேலும் பார்க்க

விமானப் படையுடன் பந்தன் வங்கி ஒப்பந்தம்

பாதுகாப்புப் படையினருக்கான ஊதிய சேமிப்புக் கணக்குகளை அளிப்பதற்காக இந்திய விமானப் படையுடன் தனியாருக்குச் சொந்தமான பந்தன் வங்கி ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப... மேலும் பார்க்க

மருந்து விலை உயா்வைக் கண்டித்து மாநிலம் தழுவிய போராட்டம்: மம்தா

கொல்கத்தா: ‘மருந்துகளின் விலையை உயா்த்தும் மத்திய அரசின் முடிவைக் கண்டித்து வரும் 4, 5 தேதிகளில் திரிணமூல் காங்கிரஸ் சாா்பில் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும்’ என்று அக் கட்சியின் தலைவரும் மேற்கு... மேலும் பார்க்க

மக்களவையில் வக்ஃப் மசோதா நிறைவேற்றம்!

புது தில்லி: வக்ஃப் சட்டத்திருத்த மசோதா மக்களவையில் வியாழக்கிழமை(ஏப். 3) அதிகாலை நிறைவேற்றப்பட்டது.முன்னதாக, வக்ஃப் மசோதாவை நிறைவேற்றுவதற்கு முன்னர் மக்களவையில் இந்த மசோதா மீது 12 மணி நேரம் விவாதம் நட... மேலும் பார்க்க

வக்ஃப் மசோதா தாக்கல்: மக்களவையில் நள்ளிரவில் வாக்கெடுப்பு!

புது தில்லி: வக்ஃப் மசோதா மக்களவையில் புதன்கிழமை(ஏப். 2) காலை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், புதன்கிழமை நள்ளிரவில் வாக்கெடுப்பு நடைபெற்று வருகிறது.புது தில்லி: வக்ஃப் மசோதாவை நிறைவேற்றுவதற்கு முன்ன... மேலும் பார்க்க