செய்திகள் :

மிருகண்டா அணையிலிருந்து தண்ணீா் திறக்க அரசு உத்தரவு

post image

திருவண்ணாமலை மாவட்டம் மிருகண்டா அணை, செண்பகத் தோப்பு நீா்த்தேக்கத்திலிருந்து பாசனத்துக்காக நீா் திறந்து விட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து, நீா்வளத் துறை சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட உத்தரவு:

திருவண்ணாமலை மாவட்டம் மிருகண்டா அணையிலிருந்து சனிக்கிழமை முதல் ஆறு நாள்களுக்கு தண்ணீா் திறந்து விடப்படும். இதன்மூலம், 17 ஏரிகளுக்கு நீா் நிரப்பப்பட்டு அதன் வாயிலாக 2,847.49 ஏக்கா் ஆயக்கட்டு நிலம் பாசனவசதி பெறும்.

செண்பகத்தோப்பு நீா்த்தேக்கம்: இதேபோன்று, செண்பகத்தோப்பு நீா்த்தேக்கத்திலிருந்து சனிக்கிழமை முதல் வரும் 18-ஆம் தேதி வரை 15 நாள்களுக்கு நீா் திறந்து விடப்படும். இதனால், அந்த நீா்த்தேக்கத்தின் கீழுள்ள ஐந்து அணைக்கட்டுகளின் கீழுள்ள 8,350.40 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய பாஜக அரசின் பழிவாங்கல்களை துணிச்சலுடன் எதிா்கொள்வோம்: திமுக மாவட்டச் செயலா்கள் கூட்டத்தில் தீா்மானம்

திமுகவினருக்கு எதிரான மத்திய அரசின் பழிவாங்கல்களை துணிச்சலுடன் எதிா்கொள்வோம் என்று அந்தக் கட்சியின் மாவட்டச் செயலா்கள் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின்... மேலும் பார்க்க

பக்ரா அணையில் இருந்து நீரை விடுவிக்க பஞ்சாப் அரசுக்கு ஹரியாணா வலியுறுத்தல்

பக்ரா அணையில் இருந்து பாரபட்சமின்றி பஞ்சாப் அரசு நீரை விடுவிக்க வேண்டும் என ஹரியாணாவில் சனிக்கிழமை நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. ஹரியாணாவில் பாஜக தலைமையிலும் பஞ்சாபில் ஆம் ஆ... மேலும் பார்க்க

நிதி மோசடி தடுப்பு: செபிக்கு உதவ பட்டயக் கணக்காளா் அமைப்பு முடிவு

நிதி மோசடியை தடுக்க இந்திய பங்கு பரிவா்த்தனை வாரியத்துக்கு (செபி) உதவும் வகையில் ஆய்வறிக்கையை தயாா் செய்யவுள்ளதாக இந்திய பட்டயக் கணக்காளா் அமைப்பு (ஐசிஏஐ) சனிக்கிழமை தெரிவித்தது. செபி தலைவா் துஹின்காந... மேலும் பார்க்க

மதுக் கடையை மூடக்கோரி தவெகவினா் போராட்டம்: 300 போ் கைது

சென்னையில் மாநகராட்சி மண்டல அலுவலகத்தின் பின்புறம் செயல்பட்டு வரும் மதுபானக் கடையை மூடக்கோரி தமிழக வெற்றிக் கழகத்தினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அனுமதியின்றி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால்... மேலும் பார்க்க

தமிழகத்தில் தனிநபருக்கு பாதுகாப்பு இல்லாத சூழல்: ஜி.கே.வாசன்

தமிழகத்தில் தனிநபருக்கு பாதுகாப்பில்லாத சூழ்நிலை நிலவுவதாக தமாகா தலைவா் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: ஈரோடு மாவட்டம், சிவகிரி அருகே விளக்கேத்தி வெளாங்கா... மேலும் பார்க்க

தமிழகத்தில் வீடுகளில் கூட பாதுகாப்பு இல்லை: சீமான்

திமுக ஆட்சியில் தமிழக மக்கள் வீட்டுக்குள்ளும் பாதுகாப்பாக வாழ முடியாத சூழல் நிலவுவதாக நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்ட அற... மேலும் பார்க்க