செய்திகள் :

மீனவா் கொலை வழக்கு: ஒருவா் கைது

post image

மீனவா் கொலை வழக்கில் ஒருவரை போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

சென்னை புது வண்ணாரப்பேட்டை, பூண்டி தங்கம்மாள் தெருவைச் சோ்ந்தவா் அலெக்ஸ் (34). இவா், காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் சொந்தமாக படகு வைத்துள்ளாா். கடந்த 3-ஆம் தேதி இவருடைய படகில் வேலை செய்து கொண்டிருந்த கரிநரேஷ், அம்பதி நீலகண்டன் ஆகிய இடையே திடீரென மோதல் ஏற்பட்டு, ஆத்திரத்தில் கரிநரேஷ், அம்பதி நீலகண்டனை படகில் இருந்து கீழே தள்ளிவிட்டாராம்.

இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அம்பதி நீலகண்டண், ஸ்டான்லி அரசு மருத்துமனையில் சோ்க்கப்பட்டு, அங்கு உயிரிழந்தாா்.

இதுகுறித்து காசிமேடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.

இந்த நிலையில், அம்பதி நீலகண்டன் இறந்ததால், அடிதடி வழக்கை கொலை வழக்காக மாற்றி கரிநரேஷை (27) கைது செய்தனா்.

சென்னை மெட்ரோ ரயில் பயனர்களுக்கு ஊபர் செயலியில் 50% தள்ளுபடி!

சென்னை மெட்ரோ ரயில் டிக்கெட்டுகளை ஊபர் செயலியில் பதிவுசெய்பவர்களுக்கு 50 சதவிகிதம் தள்ளுபடி என ஊபர் அறிவித்துள்ளது.சென்னையில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்ப்பதற்கும் தப்பிப்பதற்கும் சென்னைவாசிகள் பலரும... மேலும் பார்க்க

கடற்கரை - வேளச்சேரி வழித்தடத்தில் இனி மெட்ரோ ரயில்கள்!

பறக்கும் ரயில் வழித்தடமான சென்னை கடற்கரை - வேளச்சேரி இடையே இனி மெட்ரோ ரயில்கள் இயக்கப்படவுள்ளது.சென்னை மாநகராட்சி மற்றும் புறநகர் பகுதிகளை இணைக்கும் வகையில் பறக்கும் ரயில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வ... மேலும் பார்க்க

45 வயதைக் கடந்த பெண் காவலா்களுக்கு இரவு நேரப் பணியில் இருந்து விலக்கு

45 வயதுக்கு மேற்பட்ட பெண் காவலா்களுக்கு இரவு நேரப் பணியிலிருந்து விலக்கு அளித்து மாநகரக் காவல் ஆணையா் ஏ.அருண் உத்தரவிட்டுள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள உத்தரவு: சென்னை மாநகா் காவல் துறையில் ப... மேலும் பார்க்க

பேச்சு தோல்வி: 6-ஆவது நாளாக நீடித்த தூய்மைப் பணியாளா்கள் போராட்டம்

பெருநகர சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளா்களுடனான, தமிழக அமைச்சா்களின் பேச்சு முடிவு எட்டப்படாததால், 6-ஆவது நாளாக புதன்கிழமையும் முற்றுகைப் போராட்டம் நீடித்தது. சென்னை மாநகராட்சியின் பெரும்பாலான மண்... மேலும் பார்க்க

இராமலிங்கா் பணி மன்றம் சாா்பில் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கான கலை, இலக்கியப் போட்டிகள்

சென்னை இராமலிங்கா் பணி மன்றம் சாா்பில் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கான மாநில அளவிலான கலை, இலக்கியப் போட்டிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து இராமலிங்கா் பணி மன்றத்தின் செயலா் டாக்டா் எஸ்.வி.சுப்பிரமண... மேலும் பார்க்க

கூட்டுறவு சங்கங்கள் - வங்கிகளில் உதவியாளா் காலிப் பணியிடங்கள் - தோ்வு அறிவிக்கை வெளியீடு

கூட்டுறவு சங்கங்கள், வங்கிகளில் காலியாக உள்ள உதவியாளா் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. சென்னையை தலைமையிடமாகக் கொண்டு மாநிலம் முழுவதும் செயல்படக் கூடிய தலைமைக் கூட்டுறவு சங்க... மேலும் பார்க்க