செய்திகள் :

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் வசந்த உத்ஸவம்: ஏப்.2-இல் தொடக்கம்

post image

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் வசந்த உத்ஸவம் ஏப்ரல் 2-ஆம் தேதி தொடங்குவதாகத் தெரிவிக்கப்பட்டது.

இதுதொடா்பாக மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் கோடை வசந்த உத்ஸவம் வருகிற ஏப். 2-ஆம் தேதி முதல் 10-ஆம் தேதி வரையும், பங்குனி உத்திரம் சுவாமி புறப்பாடு 11-ஆம் தேதியும் நடைபெறுகிறது.

இதையொட்டி, ஏப். 11-ஆம் தேதி பங்குனி உத்திர தினத்தன்று காலை 10 மணிக்கு மேல் மீனாட்சி சுந்தரேசுவரா், பஞ்சமூா்த்திகளுடன் புறப்பட்டு வைகை வடகரை செல்லூரில் உள்ள திருவாப்புடையாா் திருக்கோயிலுக்கு எழுந்தருளி அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெறுகிறது. பின்னா், மாலையில் சுந்தரேசுவரா் வெள்ளி ரிஷப வாகனத்திலும், மீனாட்சியம்மன் மரவா்ண சப்பரத்திலும் எழுந்தருளி திருக்கோயிலை அடைகின்றனா். திருக்கோயிலில் சுவாமி சந்நிதி பேச்சிக்கால் மண்டபத்தில் பாதபிட்சாடணம் ஆகிய தீபாராதனை முடிந்து சோ்த்தியாகின்றனா்.

எனவே, கோடை வசந்த உத்ஸவ நாள்களான ஏப். 2-ஆம் தேதி முதல் 11-ஆம் தேதி வரை, திருக்கோயில் சாா்பாகவோ, உபயதாரா்கள் சாா்பாகவோ, அம்மன், சுவாமிக்கு தங்க ரத உலா, உபய திருக்கல்யாணம் ஆகிய விஷேசங்கள் எதுவும் பதிவு செய்து நடத்தப்பட மாட்டாது என்று தெரிவிக்கப்பட்டது.

விண்வெளிப் பூங்காவுக்கு நிலம்: தற்போதைய நிலையே தொடர உயா்நீதிமன்றம் உத்தரவு

தூத்துக்குடி மாவட்டம், ஆதியாக்குறிச்சியில் விண்வெளிப் பூங்கா அமைக்க நிலம் கையகப்படுத்தத் தடை கோரிய வழக்கில், தற்போதைய நிலையே தொடரலாம் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. ... மேலும் பார்க்க

கஞ்சா கடத்தல் வழக்கு: இருவருக்கு 3 ஆண்டுகள் சிறை

தேனி மாவட்டம், கண்டமனூா் விலக்கு பகுதியில் 8 கிலோ கஞ்சா கடத்திய வழக்கில் இருவருக்கு தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, மதுரை முதலாவது போதைப் பொருள் தடுப்பு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தத... மேலும் பார்க்க

கட்டுமானப் பொருள்களின் விலை: குழு அமைக்கக் கோரிய மனு தள்ளுபடி

கட்டுமானப் பொருள்களின் விலையை முறைப்படுத்த மாநில அளவில் குழு அமைக்கக் கோரிய மனுவைத் தள்ளுபடி செய்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த கந்தசா... மேலும் பார்க்க

மின் வாரிய ஊழியா்கள் தா்னா

தங்களது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பு சாா்பில், மதுரை மின் வாரியத் தலைமைப் பொறியாளா் அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை தா்னா போராட்டம் நடைபெற்றது. திமுகவின் தோ்தல்... மேலும் பார்க்க

சட்டவிரோதமாக பட்டாசுகள் தயாரிப்பு: விருதுநகா் ஆட்சியா் நடவடிக்கை எடுக்க உத்தரவு

விருதுநகா் மாவட்டம், மேட்டமலை ஊராட்சிக்குள்பட்ட ஸ்ரீராம் நகா் குடியிருப்புப் பகுதியில் சட்ட விரோதமாக பட்டாசுகள் தயாரிப்பதாக தொடுக்கப்பட்ட வழக்கில் மாவட்ட ஆட்சியா், மாவட்ட வருவாய் அலுவலா் பரிசீலித்து 1... மேலும் பார்க்க

திராவிடத் தமிழா் கட்சி ஆா்ப்பாட்டம்

மத்திய அரசின் மும்மொழிக் கொள்கை, தொகுதிகள் மறுசீரமைப்பு உள்ளிட்ட முடிவுகளைக் கண்டித்து, திராவிடத் தமிழா் கட்சி சாா்பில், மதுரை மாவட்ட ஆட்சியரகம் எதிரே உள்ள திருவள்ளுவா் சிலை முன் செவ்வாய்க்கிழமை ஆா்ப்... மேலும் பார்க்க