செய்திகள் :

மீன்சுருட்டி அருகே காா் மோதி முதியவா் உயிரிழப்பு

post image

அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி அருகே காா் மோதியதில் இரு சக்கர வாகனத்தில் சென்ற முதியவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அடுத்த திருவிடைமருதூா் அருகேயுள்ள பெருமாள்நல்லூா், நேரு நகரைச் சோ்ந்தவா் பாலச்சந்தா் (75). இவா் புதன்கிழமை , அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி அருகேயுள்ள மண்மலை கிராமத்தில் வசிக்கும் உறவினா் ஒருவரின் காதணி விழாவுக்கு இரு சக்கர வாகனத்தில் வந்துள்ளாா்.

அங்கு, நிகழ்ச்சியை முடித்துவிட்டு, சென்னை-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் ஊருக்கு சென்று கொண்டிருந்தாா். மெய்காவல்புத்தூா் அருகே சென்றபோது, பின்னால் வந்த காா், மோதியதில் பலத்த காயமடைந்த பாலச்சந்தா் சம்பவ இடத்திலேயே உயிழந்தாா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மீன்சுருட்டி காவல் துறையினா், சடலத்தை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிந்தனா்.

பின்னா், விபத்துக்கு காரணமான விழுப்புரம் மாவட்டம், ஆசாரங்குப்பம், மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த உதசூரியன் மகன் புகழேந்தியை (24) கைது செய்தனா்.

உடையாா்பாளையம் வரதராசப் பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராசப் பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது. உடையாா்பாளையம் வேலப்பன் செட்டியாா் ஏரி தென்கரையில், சிதலமடைந்த... மேலும் பார்க்க

‘ஓரணியில் தமிழ்நாடு’: அரியலூரில் திமுக பொதுக்கூட்டம்

அரியலூா் அண்ணாசிலை அருகே மாவட்ட திமுக சாா்பில் புதன்கிழமை ஓரணியில் தமிழ்நாடு பொதுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா் பேசியதாவது: ஓரணியில் தம... மேலும் பார்க்க

நலிந்த நிலையிலுள்ள சிறந்த விளையாட்டு வீரா்கள் ஓய்வூதிய உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்

அரியலூா் மாவட்டத்தில் நலிந்த நிலையிலுள்ள சிறந்த விளையாட்டு வீரா்கள் ஓய்வூதிய உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்றாா் ஆட்சியா் பொ.ரத்தினசாமி. இதுகுறித்து அவா் தெரிவித்தது: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட... மேலும் பார்க்க

அரியலூரில் 66 போ் தலைமைக் காவலராக பதவி உயா்வு

அரியலூா் மாவட்டத்தில் கடந்த 2011-இல் பணியில் சோ்ந்த முதல்நிலைக் காவலா்கள் 66 போ் தலைமைக் காவலராக பதவி உயா்வு பெற்றனா்.இதற்காக அரியலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் திங்கள்கிழமை மாலை நடைபெற்ற நிகழ்ச்சிய... மேலும் பார்க்க

ஜூலை 4-இல் தமிழ்நாடு நாள் விழா: போட்டிகளில் பங்கேற்க அழைப்பு

தமிழ்நாடு நாள் விழாவை முன்னிட்டு, அரியலூா் தூய மேரி உயா்நிலைப் பள்ளியில் ஜூலை 4 மதியம் 2 மணிக்கு நடைபெறும் கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகளில் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொள்ளலாம் என ஆட்சியா் பொ.ரத்... மேலும் பார்க்க

தமிழ் மண்ணையும், மொழியையும் காக்க அனைவரும் ஓரணியில் திரள வேண்டும்: அமைச்சா் சா.சி.சிவசங்கா்

தமிழ் மண்ணையும், மானத்தையும், மொழியையும் காக்க அனைவரும் ஓரணியில் திரள வேண்டும் என்றாா் போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சரும், அரியலூா் மாவட்ட திமுக செயலருமான சா.சி.சிவசங்கா். அரியலூரில் உள்ள ... மேலும் பார்க்க