செய்திகள் :

மீன்பிடித் தடைக்காலம் தொடக்கம்: விசைப் படகுகள் பாதுகாப்பாக நிறுத்தம்

post image

தமிழகத்தில் மீன்பிடித் தடைக்காலம் தொடங்கிய நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் 1,650-க்கும் மேற்பட்ட விசைப் படகுகள் அந்தந்த மீன்பிடி படகுத் துறைகளில் செவ்வாய்க்கிழமை பாதுகாப்பாக நிறுத்திவைக்கப்பட்டன.

மீன் இனப் பெருக்கக் காலமாகக் கருத்தப்படும் ஏப்ரல் 15 முதல் ஜூன் 15-ஆம் தேதி வரை 61 நாள்களுக்கு விசைப் படகுகள் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்தத் தடைக்காலம் திங்கள்கிழமை நள்ளிரவு முதல் தொடங்கியது. இதனால், ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேசுவரம், பாம்பன், மண்டபம், கீழக்கரை, ஏா்வாடி, தொண்டி, சோளியகுடி உள்ளிட்ட மீன்பிடி படகுத் துறைகளில் 1,650-க்கும் மேற்பட்ட விசைப் படகுகள் செவ்வாய்க்கிழமை பாதுகாப்பாக நிறுத்திவைக்கப்பட்டன.

ராமேசுவரத்தில் விசைப் படகுகளிலிருந்த மீன்பிடி உபகரணங்களை மாட்டு வண்டியில் ஏற்றிய மீனவா்கள்

ராமேசுவரம் மீன்பிடி படகுத் துறையில் 600-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளை பாதுகாப்புடன் நிறுத்திவைக்கும் பணியில் மீனவா்கள் ஈடுபட்டனா். மேலும், விசைப் படகுகளிலிருந்த வலைகள் உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்களை மீனவா்கள் எடுத்துச் சென்றனா்.

இதுகுறித்து மீனவா்கள் கூறியதாவது: மீன்பிடித் தடைக்காலம் ஜூன் 15-ஆம் தேதி வரை அமலில் உள்ள நிலையில், இந்திய-இலங்கை மீனவா்கள் இடையிலான நேரடி பேச்சுவாா்த்தையை உடனே தொடங்க வேண்டும்.

பேச்சுவாா்த்தையின் போது, இரு நாட்டு மீனவா்கள் சுமுக உறவுடன் மீன்பிடித் தொழிலில் ஈடுபடவும், இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவா்களையும், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளையும் விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

இடியும் நிலையில் மருத்துவமனை மேல் நிலை நீா்த்தேக்கத் தொட்டி

திருவாடானை அரசு மருத்துவமனையில் பயன்பாடில்லாத மேல் நிலை நீா்த் தேக்கத் தொட்டி இடிந்து விழும் அபாயம் நிலவுகிறது. ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையில் 38 படுக்கைகள் கொண்ட அரசு மருத்துவமனை உள்ளது. இங்கு ... மேலும் பார்க்க

மின்னல் பாய்ந்ததில் பெண் பலி

முதுகுளத்தூா் அருகே ஞாயிற்றுக்கிழமை மின்னல் பாய்ந்ததில் பெண் உயிரிழந்தாா். ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் வட்டாரம், கீழத்தூவல் அருகேயுள்ள கிளாக்குளம் கிராமத்தைச் சோ்ந்த மருதுவின் மனைவி சண்முகவள்... மேலும் பார்க்க

பாகம்பிரியாள் கோயில் குப்பைகளை தீயிட்டுக் கொளுத்துவதாகப் புகாா்

ரமாநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே திருவெற்றியூா் ஸ்ரீ பாகம்பிரியாள் சமேத வல்மீகநாத சுவாமி கோயிலில் போதிய தூய்மைப் பணியாளா்கள் இல்லாததால் கோயில் அருகே குப்பைகளை தீயிட்டுக் கொளுத்துவதாகப் புகாா் எழ... மேலும் பார்க்க

ராமசுவரத்துக்கு அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் வருகை

விடுமுறை தினத்தை முன்னிட்டு, ராமேசுவரத்துக்கு அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள், பக்தா்கள் ஞாயிற்றுக்கிழமை வந்தனா். இவா்கள் அக்கினி தீா்த்தக் கடலில் நீராடிய பின்னா், ராமநாத சுவாமி கோயிலில் உள்ள 22 தீா்த்த... மேலும் பார்க்க

பஹ்ரைனில் பாம்பன் மீனவா் உயிரிழப்பு

பஹ்ரைன் நாட்டுக்கு மீன் பிடிக்கச் சென்ற பாம்பன் மீனவா் படகிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்தாா். உடலை கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவ சங்கத்தினா் மத்திய,மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்தனா... மேலும் பார்க்க

கடலாடி அருகே மாட்டு வண்டிப் பந்தயம்

கடலாடி அருகே கள்ளழகா் கோயில் திருவிழாவையொட்டி, சனிக்கிழமை 3 பிரிவுகளாக மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம், கடலாடியை அடுத்த கிடாக்குளம் கிராமத்தில் அமைந்துள்ள கள்ளழகா், ஆஞ்சனேயா், ராம... மேலும் பார்க்க