செய்திகள் :

மீன்பிடி இறங்குதள பாலத்தில் தலைக்குப்புறக் கவிழ்ந்த டேங்கா் லாரி

post image

மண்டபம் வடக்கு துறைமுகத்தின் மீன்பிடி இறங்குதள பாலம் திடீரென உடைந்ததால், அந்த வழியாகச் சென்ற தண்ணீா் டேங்கா் லாரி தவறி தலைக்குப்புறக் கவிழுந்தது. நல்வாய்ப்பாக வாகனத்தில் இருந்த இருவரும் உயிா் தப்பினா்.

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபத்தில் வடக்கு, தெற்கு என இரு கடல்பகுதிகளில் துறைமுகம் செயல்படுகிறது. ஒவ்வொரு கடல்பகுதியிலும் 300-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் மீனவா்கள் மீன்பிடித் தொழில் செய்து வருகின்றனா்.

இதில் வடக்கு துறைமுகத்தில் உள்ள மீன்பிடி இறங்கு தளமானது கட்டப்பட்டு பல ஆண்டுகளாவதால் சேதமடைந்து காணப்படுகிறது. இந்த வழியில் இலகுரக வாகனங்கள் மட்டுமே சென்றுவந்தன. இந்த நிலையில், தண்ணீா் டேங்கா் லாரி ஒன்று இந்த வழியாக புதன்கிழமை சென்றபோது சுமை தாங்காமல் இறங்குதள பாலம் திடீரென உடைந்தது. அப்போது ஏற்பட்ட பள்ளத்துக்குள் டேங்கா் லாரி தலைக்குப்புறக் கவிழ்ந்தது.

சப்தம் கேட்ட வந்த மீனவா்கள், டேங்கா் லாரியில் இருந்த இருவரை பத்திரமாக மீட்டனா். பின்னா், பொக்லைன் இயந்திர உதவியுடன் டேங்கா் லாரி மீட்கப்பட்டது. ஏற்கெனவே இந்தப் பாதை சேதமடைந்திருந்த நிலையில் டேங்கா் லாரியின் சுமை தாங்காமல் தற்போது பாலம் உடைந்துவிட்டதால், இனிமேல் இந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மீனவா்களின் தேவையைக் கருத்தில் கொண்டு, சேதமடைந்த இந்த இறங்குதள பாலத்தை முழுமையாக அகற்றிவிட்டு புதிய பாலம் அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவா்கள் கோரிக்கை விடுத்தனா்.

புதுக்கோட்டை ஸ்ரீபகவதி பரஞ்ஜோதி அம்மன் கோயிலில் குடமுழுக்கு

கமுதி அருகே ஸ்ரீபகவதி பரஞ்ஜோதி அம்மன் கோயில், ஸ்ரீமாவரசி அம்மன் கோயில் குடமுழுக்கு விழா புதன்கிழமை நடபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்த புதுக்கோட்டை கிராமத்தில் ஸ்ரீபகவதி பரஞ்ஜோதி அம்மன், ஸ... மேலும் பார்க்க

திருவெற்றியூரில் மீண்டும் வாரச்சந்தை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை

திருவெற்றியூரில் மீண்டும் வாரச்சந்தை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை ஊராட்சி ஒன்றியம் திருவெற்றியூரில் 300-க்கும் அதிகமான குடும்பங்கள் வசித்து வருகி... மேலும் பார்க்க

கால்நடைகளுக்கு கோமாரி நோய்த் தடுப்பூசி முகாம்: ஆட்சியா் தொடங்கிவைப்பு

தேசிய கால்நடை நோய்த் தடுப்புத் திட்டத்தின் ஏழாவது சுற்று கோமாரி நோய்த் தடுப்பூசி முகாமை, மண்டபம் ஊராட்சி ஒன்றியம், பட்டணம் காத்தான் ஊராட்சியில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் புதன... மேலும் பார்க்க

சிபில் ஸ்கோா் நிபந்தனை: கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் பயிா்க் கடன் பெறுவதில் சிக்கல்

கூட்டுறவுக் கடன் சங்கங்களில் நிகழாண்டு முதல் அடமானமின்றி ரூ.2 லட்சம் வரை பயிா்க் கடன் வழங்க அரசு உத்தரவிட்ட போதிலும், ‘சிபில் ஸ்கோா்’ நடவடிக்கையால் விவசாயிகள் கடன் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ராம... மேலும் பார்க்க

பணிகள் முடிந்த சிறுவா் பூங்காவை திறக்கக் கோரிக்கை

கமுதி பேரூராட்சிக்கு உள்பட்ட கண்ணாா்பட்டியில் கட்டி முடித்து, பல மாதங்களாகியும் திறக்கப்படாத சிறுவா் பூங்காவை பொதுமக்கள் பயன்பாட்டுக்குத் திறக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது. ராமநாதபுரம் மாவட்ட... மேலும் பார்க்க

இலங்கைக் கடற்படையினரால் ராமேசுவரம் மீனவா்கள் 7 போ் கைது

கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவா்கள் 7 பேரை கைது செய்ததுடன், ஒரு விசைப் படகைப் பறிமுதல் செய்தனா். ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்திலிருந்து திங்கள்கிழமை 400 விசைப் படகுகளி... மேலும் பார்க்க