செய்திகள் :

``மீரட்டில் நடந்த கொலையைப் போல..'' - காதலனுடன் சேர்ந்து கணவனை மிரட்டிய மனைவி; உ.பி.,யில் அதிர்ச்சி

post image

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் முஸ்கான் என்ற பெண் காதலித்து திருமணம் செய்து கொண்டார். நாளடைவில் புதுக்காதலன் உடன் ஏற்பட்ட நெருக்கத்தால் காதல் கணவனை புதுக்காதலனோடு சேர்ந்து கொலை செய்து டிரம்மில் அடைத்து மூடினார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது போன்று மனைவி தனது காதலனோடு சேர்ந்து கணவனை கொலை செய்யும் சம்பங்கள் உத்தரப்பிரதேசத்தில் ஆங்காங்கே நடந்து வருகிறது. சில பெண்கள் `மீரட்டில் நடந்து போன்று நடக்கும்' என்று தங்களது கணவனை மிரட்டவும் செய்கின்றனர்.

மீரட் சம்பவத்தில் கொலையான காதல் கணவன், மனைவி - புதுக்காதலன்

இதனால் சமீபத்தில் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் தனது உயிரை காப்பாற்றிக்கொள்ள தனது மனைவியை அவர் காதலிக்கும் நபருக்கே திருமணம் செய்துவைத்துவிட்டார்.

உத்தரப்பிரதேச மாநிலம் கொண்டா என்ற இடத்தைச் சேர்ந்த பொறியாளர் தர்மேந்திரா என்பவரை அவரது மனைவி தனது காதலனோடு சேர்ந்து இது போன்று மிரட்டி இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.

தர்மேந்திரா 2016-ம் ஆண்டு பஸ்தி என்ற இடத்தை சேர்ந்த மாயா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார். தர்மேந்திரா தனது மனைவி மீது அதிக அன்பு வைத்திருந்தார். இதனால் மனைவி பெயரில் வாகனங்களையும், சொத்துகளையும் வாங்கினார்.

மாயா பெயரில் 2022-ம் ஆண்டு நிலம் ஒன்றை விலைக்கு வாங்கினார். அந்த நிலத்தில் வீடு கட்ட இருவரும் முடிவு செய்தனர். இதற்கான ஒப்பந்தத்தை மாயாவின் உறவினர் நீரஜ் என்பவரிடம் கொடுத்தனர். நீரஜ் மனைவி கொரோனா காலத்தில் இறந்துவிட்டார். அடிக்கடி மாயா கட்டுமானப்பணி நடைபெறும் இடத்திற்கு சென்று வருவது வழக்கம். அப்படி சென்று வந்தபோது நீரஜுடன் மாயாவிற்கு திருமணம் தாண்டிய உறவு உருவானது.

காயத்துடன் தர்மேந்திரா

இது குறித்து தர்மேந்திரா போலீஸில் கொடுத்துள்ள புகாரில் 2024ம் ஆண்டு ஜூலை மாதம் 7-ம் தேதி மாயாவும், நீரஜும் உறவில் இருந்ததை பார்த்துவிட்டேன். இதனால் மாயாவுடன் சண்டையிட்ட போது என்னை அடித்து உதைத்துவிட்டு அவரது தாயார் வீட்டிற்குச் சென்றுவிட்டார்.

ஆகஸ்ட் 25-ம் தேதி மீண்டும் எனது வீட்டிற்கு வந்து பூட்டை உடைத்து கதவை திறந்து உள்ளே இருந்த 15 கிராம் தங்க செயின் மற்றும் வீட்டில் இருந்த பணத்தை எடுத்துச்சென்றுவிட்டார். இது தொடர்பாக போலீஸில் புகார் செய்திருக்கிறேன்.

கடந்த 29-ம் தேதி மாயா எனது தாயாரை கொலை செய்துவிடுவதாக மிரட்டினார். அதற்கு நான் எதிர்ப்பு தெரிவித்தபோது மாயாவும், நீரஜும் சேர்ந்து என்னையும், எனது தாயாரையும் அடித்தனர்.

இச்சண்டையின் போது அதிகம் பேசினால் மீரட்டில் நடந்தது போன்று என்னை கொலை செய்து உடலை பல துண்டுகளாக வெட்டி டிரம்மில் அடைத்துவிடுவேன் என்று மிரட்டினார்'' என்று புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் இக்குற்றச்சாட்டுகளை மாயா மறுத்துள்ளார். இது தொடர்பாக மாயாவும் போலீஸில் புகார் கொடுத்துள்ளார். அவர் தனது புகாரில் தர்மேந்திரா தொடர்து என்னை சித்ரவதை செய்து வந்தார். 4 முறை அபார்சன் செய்யவைத்தார்.

தெருவில் கணவனை மிரட்டும் மனைவி

கடந்த ஆண்டு ஜூலை மாதம் என்னை அடித்து உதைத்தார். இது தொடர்பாக பெண்கள் போலீஸ் நிலையத்தில் புகார் செய்திருக்கிறேன். இதையடுத்து விவாகரத்து கேட்டு மனுத்தாக்கல் செய்துள்ளார். அதோடு என்னை வீட்டை விட்டும் வெளியில் விரட்டிவிட்டார்'' என்று புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

இரண்டு பேரும் கொடுத்துள்ள புகார் குறித்து விசாரித்து வருவதாக போலீஸ் அதிகாரி விவேக் திரிவேதி தெரிவித்துள்ளார். கடைசியாக நடந்த சம்பவம் தெருவில் வைத்து நடந்திருக்கிறது. எனவே கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து அதன் அடிப்படையில் விசாரித்து வருவதாகவும் விவேக் தெரிவித்துள்ளார்.

அவர்கள் தெருவில் சண்டை போட்டுக்கொண்ட காட்சி சமூக வலைத்தளத்தில் பரவி வைரலாகி இருக்கிறது.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

பணத்தகராறு… பெற்ற தந்தையை அரிவாளால் வெட்டிக் கொலை செய்த மகன் - நெல்லையில் பயங்கரம்!

நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை அருகில் உள்ள சிவந்திபட்டியைச் சேர்ந்தவர் பூலையா. இவருக்கும், இவருடைய மகன் கணேசனுக்கும் சொத்துத் தகராறு இருந்து வந்தது. இந்த நிலையில், பூலையா கடந்த 20 நாட்களுக்கு முன்பு ... மேலும் பார்க்க

லாரி ஓட்டுநர்களிடம் வழிப்பறி - புதுச்சேரி ரௌடி கடலூரில் என்கவுன்ட்டர் செய்யப்பட்ட பின்னணி

கடலூர் எம்.புதூர் கிராமத்தைச் சேர்ந்த காளிமுத்து என்பவர், நேற்று இரவு பக்கத்து ஊரில் கூத்து நிகழ்ச்சியை பார்த்துவிட்டு இன்று அதிகாலை வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அவரை திடீரென வழிமறித்... மேலும் பார்க்க

`யாரு முக்கியம்?' - பெண்ணை கல்லால் அடித்துக் கொலை செய்த ஆண் நண்பர்; 2 குழந்தைகள் தவிப்பு

சென்னை பல்லாவரம் அருகே வசித்து வந்தவர் ஜோதி ( 33) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். ஜோதிக்கும் அவரின் கணவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு விவாகரத்து வரை செ... மேலும் பார்க்க

ரயிலில் கஞ்சா கடத்தி வந்த ஒடிசா வாலிபர்கள்.. ராமநாதபுரம் போலீஸார் விசாரணை; சிக்கியது எப்படி?

ராமநாதபுரம், புதுக்கோட்டை மற்றும் தூத்துக்குடி கடலோர பகுதிகள் வழியாக இலங்கைக்கு போதை மருந்துகள், கஞ்சா உள்ளிட்டவை அதிகளவில் கடத்தப்பட்டு வருகிறது. படகுகள் மூலம் கடத்தி செல்லப்படும் கஞ்சாவை இலங்கை கடற்... மேலும் பார்க்க

ராமநாதபுரம்: சிறுமிக்குப் பாலியல் வன்கொடுமை; உடந்தையாக இருந்த தாய் உட்பட மூவர் கைது; என்ன நடந்தது?

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தனியார்ப் பள்ளி ஒன்றில் 16 வயது சிறுமி ஒருவர் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். பள்ளிக்கூடம் சென்ற அவருக்குத் திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.இதனால் அச்சிறுமி அழுதபடிவக... மேலும் பார்க்க

பல்லடம்: தங்கையை ஆணவக் கொலை செய்த அண்ணன்; காதலனின் புகாரால் அம்பலமான அதிர்ச்சி சம்பவம்

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே பருவாய் கிராமத்தைச் சேர்ந்த தண்டபாணி - தங்கமணி என்ற தம்பதியின் மகள் வித்யா. 22 வயதான வித்யா, கோவை அரசு கல்லூரியில் முதுகலைப் பட்டம் பயின்று வந்துள்ளார். திருப்பூர் வ... மேலும் பார்க்க