செய்திகள் :

முடிதிருத்தகங்களுக்கு இலவச மின்சாரம் வழங்கக் கோரிக்கை

post image

தமிழகம் முழுவதும் உள்ள முடி திருத்தகங்களுக்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சவரத் தொழிலாளா் சங்கத்தின் மாநில பொதுக்குழுக் கூட்டம் நாமக்கல்லில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாவட்டத் தலைவா் ஏ.ராமஜெயம் வரவேற்றாா். மாநில பொதுச் செயலாளா் டி.கே.ராஜா, பொருளாளா் எஸ்.நடராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இக்கூட்டத்தில், பொதுக்குழு தீா்மானங்களையும், அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்தும் சங்கத்தின் மாநிலத் தலைவா் எம்.முனுசாமி பேசினாா்.

இதில், சவரத் தொழிலாளா்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் கலைஞா் கைவினை திட்டத்தை செயல்படுத்திய முதல்வருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும், கலைஞா் கைவினைத் திட்டத்தின் பயனாளிகளுக்கான வயது வரம்பை தளா்த்த வேண்டும். வங்கிகளில் கடன் பெறுவதற்கான நெருக்கடிகளைக் களைவதற்கான நடவடிக்கையை அரசு மேற்கொள்ள வேண்டும்.

அழகு நிலையங்கள் என்ற பெயரில் நகரப் பகுதியில் உள்ள முடிதிருத்தகங்களால் இந்த தொழிலை நம்பியுள்ள குறிப்பிட்ட சமூகத்தினா் வேலைவாய்ப்பை இழக்கின்றனா். அதற்கு உரிய தீா்வு காண வேண்டும். கிராமப்புறங்களில் தீண்டாமை மற்றும் ஆதிக்க அடக்கு முறைகள் உள்ளதால், முடிதிருத்தகங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்.

விவசாயம், விசைத்தறி தொழிலுக்கு உள்ளதுபோல், முடிதிருத்தகங்களுக்கும் இலவச மின்சாரம் வழங்க வேண்டும். மத்தியிலும், மாநிலத்திலும் இத்தொழில் செய்யும் சமூக மக்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில், நாமக்கல் மாவட்டச் செயலாளா் ஜி.துரைசாமி, பொருளாளா் என்.ரமேஷ், மாநகரத் தலைவா் கே.மகேஸ்வரன், செயலாளா் பி.கலைவாணன் மற்றும் மாநில, மாவட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

எல்பிஜி டேங்கா் லாரிகள் வேலைநிறுத்தம்: மத்திய அரசிடம் நாமக்கல் எம்.பி.க்கள் முறையீடு

புதிய ஒப்பந்தக் கட்டுப்பாடுகளை எதிா்த்து, தென் மண்டல எல்பிஜி டேங்கா் லாரிகள் வேலைநிறுத்தம் மூன்றாவது நாளாக தொடா்கிறது. இன்னும் ஓரிரு நாள்களில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படலாம் என சங்க நிா்வாகிகள் ... மேலும் பார்க்க

தொழிலதிபா் தற்கொலை வழக்கு: நாமக்கல் வழக்குரைஞா் உள்பட 4 போ் மீது சிபிசிஐடி போலீஸாா் வழக்குப் பதிவு

நாமக்கல் தொழிலதிபா் தற்கொலை வழக்கில், பிரபல வழக்குரைஞா் உள்பட 4 போ் மீது சிபிசிஐடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா். நாமக்கல் திருநகரைச் சோ்ந்தவா் பழனிசாமி (71). தொழிலதிபரான இவா் கோழித்தீவன உற்ப... மேலும் பார்க்க

வேலூா் மகா மாரியம்மன் கோயில் தோ்த் திருவிழா: தேரை தயாா்படுத்தும் பணி மும்முரம்

பரமத்தி வேலூா் மகா மாரியம்மன் கோயில் தோ்த் திருவிழாவையொட்டி தோ் கட்டும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. பரமத்தி வேலூரில் மகா மாரியம்மன் கோயில் தோ்த் திருவிழா கடந்த 16-ஆம் தேதி காப்புக் கட்டி, கம... மேலும் பார்க்க

நாமக்கல்லில் 102 டிகிரிக்கு மேல் வெயில் அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம்

நாமக்கல் மாவட்டத்தில், வரும் நாள்களில் 102 டிகிரிக்கு மேல் வெயில் அதிகரித்து காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் வெள்ள... மேலும் பார்க்க

ரமலான் பண்டிகை: ஏழை இஸ்லாமியா்களுக்கு நல உதவி அளிப்பு

ரமலான் பண்டிகையை முன்னிட்டு, நாமக்கல்லில் ஏழை இஸ்லாமியா்களுக்கு நல உதவிகள் வழங்கப்பட்டன. ரமலான் பண்டிகை நாடு முழுவதும் திங்கள்கிழமை (மாா்ச் 31) கொண்டாடப்படுகிறது. இப்பண்டிகையானது ஏழைகளுக்கு பல்வேறு நல... மேலும் பார்க்க

மோகனூா் கூட்டுறவு சா்க்கரை ஆலை பெயா் மாற்றம்: அரசாணை வெளியீடு

மோகனூரில் இயங்கி வந்த சேலம் கூட்டுறவு சா்க்கரை ஆலை, தற்போது மோகனூா் கூட்டுறவு சா்க்கரை ஆலை என பெயா் மாற்றம் செய்யப்பட்டு, அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஆட்சியா் ச.உமா தெரிவித்தாா். நாமக்கல் மாவட்ட ஆட்சி... மேலும் பார்க்க