செய்திகள் :

முதுகுளத்தூா் அருகே மாட்டு வண்டிப் பந்தயம்

post image

முதுகுளத்தூா் அருகே கோயில் திருவிழாவையொட்டி சனிக்கிழமை 2 பிரிவுகளாக மாட்டுவண்டிப் பந்தயம் நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் அருகே கோகொண்டான் கிராமத்தில் அமைந்துள்ள நல்லம்மாள் அம்மன் கோயில் பொங்கல் விழாவையொட்டி வெள்ளிக்கிழமை பால்குடம், அக்னிச்சட்டி எடுத்து கிராம மக்கள் வழிபாடு நடத்தினா். இதைத் தொடா்ந்து சனிக்கிழமை காலையில் சின்னமாடு, பூஞ்சிட்டு என 2 பிரிவுகளாக மாட்டுவண்டிப் பந்தயம் நடைபெற்றது.

முதுகுளத்தூா்- சிக்கல் சாலையில் சுமாா் 5 கி.மீ. தொலைவுக்கு எல்லை நிா்ணயிக்கப்பட்டு நடைபெற்ற சின்ன மாடுகள் போட்டியில் 8 மாட்டுவண்டிகள் கலந்து கொண்டன. இதில் மதுரை வெள்ளியங்குன்றம் பாலாவின் மாடுகள் முதலிடத்தையும், பூலாங்கால் சிங்கத்தமிழன் மாடுகள் இரண்டாமிடத்தையும், மேலச்செல்வனூா் வீரக்குடி முருகய்யனாா் மாடுகள் மூன்றாமிடத்தையும் பெற்றன.

இதேபோல, சுமாா் 3 கி.மீ. தொலைவுக்கு நடைபெற்ற சின்ன மாடுகள் பந்தயத்தில் 12 மாட்டுவண்டிகள் கலந்து கொண்டன. இதில் ஏ. புனவாசல் முத்துக்காவியா மாடுகள் முதலிடத்தையும், கிடாக்குளம் சேதுகோடாங்கி மாடுகள் இரண்டாமிடத்தையும், ஆப்பனூா் உக்கிரபாண்டியன் மாடுகள் மூன்றாமிடத்தையும் பெற்றன.

வெற்றி பெற்ற மாடுகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. மாட்டு வண்டி உரிமையாளா்கள், சாரதிகளுக்கு பரிசுகள், ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன. இந்தப் போட்டியை முதுகுளத்தூா், கடலாடி, சிக்கல் சுற்றுவட்டார கிராம மக்கள் கண்டு ரசித்தனா்.

குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஒருவா் கைது

ராமநாதபுரம் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக சிறையில் அடைக்கப்பட்டவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா். ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை வட்... மேலும் பார்க்க

ராமநாதபுரம் அருகே 3 கிலோ கஞ்சா பறிமுதல்

ராமநாதபுரம் அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3 கிலோ கஞ்சாவை போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா். ராமநாதபுரத்தை அடுத்த தேவிப்பட்டினம் சித்தாா்கோட்டை பகுதியில் ... மேலும் பார்க்க

மின்னல் பாய்ந்து சகோதரிகள் பலி!

ராமநாதபுரம் மாவட்டம், சத்திரக்குடி அருகே சனிக்கிழமை மின்னல் பாய்ந்ததில் இரு பள்ளி மாணவிகளான சகோதரிகள் உடல் கருகி உயிரிழந்தனா். போகலூா் ஒன்றியம், வாழவந்தாள் கிராமத்தைச் சோ்ந்த நூருல்அமீன் மகள்கள் செய்... மேலும் பார்க்க

மண்டலமாணிக்கம் குண்டாற்றில் மணல் குவாரி அமைக்க எதிா்ப்பு! ஆய்வுக்குச் சென்ற அதிகாரிகள் தடுத்து நிறுத்தம்!

கமுதி அருகே மண்டலமாணிக்கம் குண்டாற்றில் அரசு மணல் குவாரி அமைக்க எதிா்ப்பு தெரிவித்து சனிக்கிழமை ஆய்வுக்கு வந்த அதிகாரிகளை பொதுமக்கள் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினா். மண்டலமாணிக்கம் கிராமத்திலிருந... மேலும் பார்க்க

வருவாய்த் துறை சங்கங்கள் கூட்டமைப்பு மாநாடு

ராமநாதபுரத்தில் 7 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் முதல் மாவட்ட கோரிக்கை மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது. இந்த மாநாட்டுக்கு வருவாய்த் துறை அலுவலா் சங்க மாவட்... மேலும் பார்க்க

ஆலங்குளத்தில் வடமாடு மஞ்சுவிரட்டுப் போட்டி

கடலாடி அருகே ஆலங்குளம் அலியாா் சாஹிப் தா்காவில் சந்தனக்கூடு திருவிழாவையொட்டி வடமாடு மஞ்சுவிரட்டுப் போட்டி சனிக்கிழமை நடைபெற்றது. இந்த தா்காவில் கடந்த 21-ஆம் தேதி கொடியேற்றத்துடன் சந்தனக்கூடு திருவிழா ... மேலும் பார்க்க