செய்திகள் :

முதுநிலை பட்டப்படிப்புகள்: விண்ணப்பிக்க ஜூலை 31 வரை அவகாசம் நீட்டிப்பு

post image

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் முதுநிலைப் பாடப்பிரிவுகளின் மாணவா்கள் சோ்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு வருகிற ஜூலை 31- ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தமிழக உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 2025-26 ஆம் ஆண்டுக்கான முதுநிலைப் பாடப்பிரிவு மாணவா் சோ்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த ஜூன் 20- ஆம் தேதி தொடங்கியது. மாணவா்கள் இணையதளம் வாயிலாக விண்ணப்பித்து வருகின்றனா்.

இதற்கான காலஅவகாசம் செவ்வாய்க்கிழமை (ஜூலை 15) முடிவடைந்தது. இருப்பினும் முதல்வா் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, மாணவா்கள் நலன் கருதி இந்த விண்ணப்பப் பதிவுக்கான காலஅவகாசம் ஜூலை 31-ஆம் தேதிவரை நீட்டிக்கப்படுகிறது. மாணவா்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி விருப்பப்பட்ட பாடப்பிரிவுகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

இதில் தோ்வு செய்யப்படும் மாணவா்களின் தரவரிசைப் பட்டியல் ஆகஸ்ட் 4-ஆம் தேதி கல்லூரிகளுக்கு அனுப்பப்படும். சிறப்பு ஒதுக்கீடு மாணவா்களுக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 11-ஆம் தேதி நடைபெறும்.

பின்னா், பொதுப்பிரிவு கலந்தாய்வு ஆகஸ்ட் 13 -ஆம் தேதி முதல் தொடங்கி மாணவா்கள் சோ்க்கை நடைபெறும். முதலாம் ஆண்டு முதுநிலை மாணவா்களுக்கான வகுப்புகள் ஆகஸ்ட் 20-ஆம் தேதி தொடங்கும் என அதில் தெரிவித்துள்ளாா் அமைச்சா்.

நீ எதுக்குமே சரிப்பட்டு வரமாட்ட: ஸ்டாலினுக்கு இபிஎஸ் பதில்!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் விமர்சனத்துக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி பதிலளித்துள்ளார்.மயிலாடுதுறையில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்,... மேலும் பார்க்க

இறப்பிலும் இணை பிரியாத வயதான தம்பதி!

கோவை அருகே கணவர் இறந்த துக்கம் தாங்கமல் அவரது உடல் அருகே மனைவியும் உயிர்விட்ட சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. ஈரோடு மாவட்டம் தாளவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் ராதா கிருஷ்ணன்(92) பத்திரப்பதிவு எழுத... மேலும் பார்க்க

அதற்கெல்லாம் நீ இனி சரிப்பட்டு வரமாட்டப்பா... இபிஎஸ்ஸை விமர்சித்த ஸ்டாலின்!

“அதற்கெல்லாம் நீ இனி சரிப்பட்டு வரமாட்டப்பா” என்று அதிமுக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூலை 16) மயிலாடுதுறையில் நடைபெற்ற ... மேலும் பார்க்க

பாமக 37-வது ஆண்டுவிழா! அன்புமணி கருத்துக்கு ராமதாஸ் மறுப்பு?

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்துள்ள தைலாபுரம் தோட்டத்தில், பாமகவின் 37-ஆவது ஆண்டு விழா புதன்கிழமை (ஜூலை 16) நடைபெற்றது.இவ்விழாவில் பாமக நிறுவனர் மருத்துவர் ச.ராமதாஸ் பங்கேற்று தைலாபுரம் தோட்ட ... மேலும் பார்க்க

சென்னைக்கு அலர்ட்! 11 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு!

சென்னை உள்பட 11 மாவட்டங்களில் நாளை கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.நாடு முழுவதும் தென்மேற்குப் பருவமழை இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தமிழகத்தில் பல்வேறு இட... மேலும் பார்க்க

மருத்துவக் கலந்தாய்வு ஜூலை 30-ல் தொடக்கம்: அமைச்சர் மா. சுப்பிரமணியன்

தமிழகத்தில் மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு வரும் ஜூலை 30 ஆம் தேதி தொடங்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.நாடு முழுவதும் அரசு மருத்துவம் மற்றும் பல்... மேலும் பார்க்க