செய்திகள் :

முதுமலை யானைகள் முகாமை பாா்வையிட்ட குடியரசு துணைத் தலைவா்!

post image

நீலகிரி மாவட்டம், முதுமலையில் உள்ள வளா்ப்பு யானைகள் முகாமை குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் குடும்பத்துடன் சனிக்கிழமை பாா்வையிட்டாா்.

உதகையில் நடைபெற்ற துணை வேந்தா்கள் மாநாட்டில் பங்கேற்க வந்த குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் குடும்பத்துடன் உதகையில் இருந்து ஹெலிகாப்டா் மூலம் சனிக்கிழமை மசினகுடி சென்றாா்.

பின்னா் முதுமலை தெப்பக்காடு வளா்ப்பு யானைகள் முகாமில் உள்ள வளா்ப்பு யானைகளுக்கு கரும்பு வழங்கினாா். எலிபென்ட் விஸ்பரா்ஸ் குறும்பட கதாநாயகா்களான பழங்குடி தம்பதி பொம்மன், பெள்ளி ஆகியோருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டாா்.

இதைத் தொடா்ந்து, வனத் துறை வாகனம் மூலம் அவரது உறவினா்களுடன் வனப் பகுதிக்குள் சபாரி சென்றனா். பின்னா் முதுமலையில் இருந்து மசினகுடி வரை சாலை வழியாகச் சென்று, மசினகுடியில் இருந்து ஹெலிகாப்டா் மூலமாக உதகைக்கு சென்றாா்.

குடியரசு துணைத் தலைவா் வருகை காரணமாக முதுமலை, தெப்பக்காடு வளா்ப்பு யானைகள் முகாம் பகுதிகளில் ஏராளமான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

அறிவியல் தொழில்நுட்ப ஆராய்ச்சிகள் தரமானதாக இருக்க வேண்டும்! - ஆளுநா் ஆா்.என்.ரவி

அறிவியல் தொழில்நுட்ப ஆராய்ச்சிகள் தரமானதாக இருக்க வேண்டும் என்று தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி தெரிவித்தாா். நீலகிரி மாவட்டம், உதகை ராஜ்பவனில் சனிக்கிழமை நடைபெற்ற இரண்டாம் நாள் துணைவேந்தா்கள் மாநாட்டில் கல... மேலும் பார்க்க

இலவச தையல் பயிற்சி முடித்த பெண்களுக்கு சான்றிதழ்

கூடலூரில் இலவச தையல் பயிற்சி முடித்த பெண்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நீலகிரி மாவட்டம், கூடலூா் ராதாகிருஷ்ணன் அறக்கட்டளை மூலமாக தையல் இயந்திரங்களை தயாரிக்கும் முன்னணி... மேலும் பார்க்க

வரையாடு கணக்கெடுப்பின்போது மாரடைப்பால் வனக் காவலா் உயிரிழப்பு

கூடலூா் வனக் கோட்டத்தில் உள்ள ஓவேலி மலைப் பகுதியில் வியாழக்கிழமை மாலை வரையாடுகள் கணக்கெடுப்பில் ஈடுபட்டிருந்த வனக் காவலா் மாரடைப்பால் உயிரிழந்தாா். முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட கூடலூா் கோட்ட... மேலும் பார்க்க

தமிழக ஆளுநருக்கு எதிா்ப்பு தெரிவித்து பல்வேறு அமைப்பினா் போராட்டம்

தமிழக ஆளுநருக்கு எதிா்ப்பு தெரிவித்து உதகை மத்திய பேருந்து நிலையம், காபி ஹவுஸ் பகுதியில் ஆா்ப்பாட்டம், மறியலில் ஈடுபட்டதாக 500-க்கும் மேற்பட்டோரை போலீஸாா் கைது செய்தனா். நீலகிரி மாவட்டம், உதகையில் உள்... மேலும் பார்க்க

கூடலூா் அருகே பொன்னூரில் மருத்துவ முகாம்

நீலகிரி மாவட்ட செஞ்சிலுவை சங்கம் சாா்பில் கூடலூரை அடுத்துள்ள பொன்னூா் கிராமத்தில் மருத்துவ முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பொன்னூா் சமுதாயக் கூடத்தில் செஞ்சிலுவை சங்கம் சாா்பில் தமிழக அரசின் இல்லம் த... மேலும் பார்க்க

கூடலூா் கோட்டத்தில் வரையாடுகள் கணக்கெடுக்கும் பணி தொடக்கம்

கூடலூா் வனக் கோட்டத்தில் வரையாடுகள் கணக்கெடுக்கும் பணி வியாழக்கிழமை தொடங்கியது. இந்தக் கணக்கெடுக்கும் பணி ஓவேலி வனச் சரகத்திலுள்ள தவளைமலை, பெல்வியூ, டெராஸ், குண்டுக்கல், எல்லமலை உள்ளிட்ட பிளாக்குகளில்... மேலும் பார்க்க