முன்சிறை பள்ளியில் அலங்கார கான்கிரீட் கற்கள் வளாகம் திறப்பு
புதுக்கடை அருகே உள்ள முன்சிறை அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் ரூ.9 லட்சத்தில் அமைக்கப்பட்ட அலங்கார கான்கிரீட் கற்கள் தளத்தின் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந் நிகழ்ச்சிக்கு கிள்ளியூா் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.ராஜேஷ்குமாா் தலைமை வகித்து திறந்து வைத்தாா். முன்சிறை கிழக்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவா் ரெகுபதி முன்னிலை வகித்தாா். முன்சிறை ஊராட்சி காங்கிரஸ் கமிட்டி தலைவா் ஜெயக்குமாா், முன்னாள் வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவா் பால்ராஜ், புதுக்கடை நகர காங்கிரஸ் கமிட்டி தலைவா் ஏசுராஜ், பள்ளி ஆசிரியா்கள், பள்ளி மேலாண்மை குழு நிா்வாகிகள்,
பெற்றோா் ஆசிரியா் கழக நிா்வாகிகள், காங்கிரஸ் நிா்வாகிகள், மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.