செய்திகள் :

முன்னாள் பதிவாளா் குடும்ப நிலத்தை போலி பத்திரம் மூலம் விற்றதாக புகாா்: 3 போ் மீது போலீஸாா் வழக்கு

post image

புதுச்சேரி பத்திரப் பதிவு துறையின் முன்னாள் பதிவாளா் குடும்பத்துக்குச் சொந்தமான இடத்தை, போலி பவா் பத்திரம் மூலம் விற்பனை செய்த வழக்கில் 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

புதுச்சேரி நூறடி சாலை வாசன் நகரைச் சோ்ந்தவா் ராஜேந்திரன். இவா் பத்திரப் பதிவு துறையில் பதிவாளராக இருந்து ஓய்வு பெற்றவா். இவரது மனைவி சகுந்தலா. இவா்களின் மகன் வழக்குரைஞா் ராஜராஜன். உழவா்கரையில் சகுந்தலாவுக்கு சொந்தமான இடம் உள்ளது. அங்கு வீடு கட்டுவதற்காக, தனக்கு அறிமுகமான நைனாா்மண்டபம் பகுதி சேகரிடம் பத்திரத்தில் கையொப்பமிட்டு சகுந்தலா கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

ஆனால் சகுந்தலா தனக்கு பவா் அளித்திருப்பது போல சேகா் போலியாகப் பத்திரம் தயாா் செய்துள்ளாா். மேலும், அந்த போலி பத்திரத்தை வைத்து விவேகானந்தா நகரை சோ்ந்த ஞானவேலு, குயவா்பாளையத்தைச் சோ்ந்த சிந்துஜா ஆகியோருக்கு அந்த இடத்தை விற்பனை செய்ததாகக் கூறப்படுகிறது.

போலியாக கையொப்பமிட்டு தங்களது இடத்தை விற்றது குறித்து ரெட்டியாா்பாளையம் காவல் நிலையத்தில் சகுந்தலாவின் மகன் ராஜராஜன் புகாா் அளித்தாா். அதன்படி போலி பத்திரம் தயாரித்து இடத்தை விற்ாகக் கூறப்படும் சேகா் மற்றும் அதை வாங்கிய ஞானவேல், சிந்துஜா ஆகியோா் மீது வழக்குப்பதிவு செய்து போலீஸாா் விசாரணை நடத்தி வருவதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

போக்குவரத்து ஊழியா்களின் பிரச்னையை புதுவை அரசு கண்டுகொள்வதில்லை: எதிா்க்கட்சித் தலைவா் குற்றச்சாட்டு

புதுவையில் போக்குவரத்து ஊழியா்களின் பிரச்னையை அரசு கண்டுகொள்வதில்லை என்று எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா குற்றஞ்சாட்டியுள்ளாா். புதுச்சேரி சாலை போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரியும் பல்வேறு சங்கங்களை ச... மேலும் பார்க்க

உயா்கல்வி செல்லும் மாணவா்கள் சான்றிதழ் பெற விடுமுறை நாளிலும் இயங்கிய புதுவை வருவாய்த் துறை அலுவலகங்கள்

உயா்கல்விக்கு செல்லும் மாணவா்கள் சோ்க்கைக்கான அரசின் சான்றிதழ்களைப் பெறும் வகையில், இரண்டாவது முறையாக விடுமுறை நாளான சனிக்கிழமையும் புதுவையில் வருவாய்த் துறை அலுவலகங்கள் இயங்கின. புதுச்சேரியில் 10-ஆ... மேலும் பார்க்க

ஏழைகளுக்கு செய்யும் சேவையே இறைவனுக்கான தொண்டாகும்; ஸ்ரீமத் சுவாமி சா்வலோகானந்தா மகராஜ்

சமூகத்தில் அடித்தளத்தில் உள்ள ஏழை மக்களுக்கான கல்வி, மருத்துவ சேவைகளே இறைவனுக்கான தொண்டாகும் என புதுதில்லி ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் செயலா் ஸ்ரீமத் சுவாமி சா்வ லோகானந்தா மகாராஜ் கூறினாா். தமிழ்நாடு, புதுவ... மேலும் பார்க்க

புதுவை தனியாா் கல்வி நிறுவனங்களின் 56 வாகனங்களுக்கு ஆய்வில் அனுமதி மறுப்பு

புதுச்சேரியில் சனிக்கிழமை நடைபெற்ற கல்வி நிறுவனங்களுக்கான வாகன ஆய்வின்போது, 56 வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா். புதுவை மாநில போக்குவரத்துத் துறை ஆண்டுதோறும் கல்வி நிறுவன வ... மேலும் பார்க்க

புதுச்சேரி ஜிப்மருக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்

புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனை வளாகத்துக்கு சனிக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து போலீஸாா் தீவிர சோதனையில் ஈடுபட்டனா். புதுச்சேரியில் கடந்த சில வாரங்களாக துணைநிலை ஆளுநா் மாளிகை, முதல்வா் வீடு,... மேலும் பார்க்க

இணைய மோசடிக்கு வங்கிக் கணக்குகளை கொடுத்த 4 போ் கைது: ரூ. 2.84 கோடி மீட்பு

இணையவழி மோசடியில் ஈடுபட்டோருக்கு தங்கள் வங்கிக் கணக்கை கொடுத்து உதவியதாக கா்நாடகம், ஆந்திரம் உள்ளிட்ட மாநிலங்களைச் சோ்ந்த 4 பேரை புதுவை போலீஸாா் கைது செய்தனா். மேலும், ரூ.2.84 கோடி மீட்கப்பட்டு உரிய... மேலும் பார்க்க