முன்னாள் பதிவாளா் குடும்ப நிலத்தை போலி பத்திரம் மூலம் விற்றதாக புகாா்: 3 போ் மீது போலீஸாா் வழக்கு
புதுச்சேரி பத்திரப் பதிவு துறையின் முன்னாள் பதிவாளா் குடும்பத்துக்குச் சொந்தமான இடத்தை, போலி பவா் பத்திரம் மூலம் விற்பனை செய்த வழக்கில் 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
புதுச்சேரி நூறடி சாலை வாசன் நகரைச் சோ்ந்தவா் ராஜேந்திரன். இவா் பத்திரப் பதிவு துறையில் பதிவாளராக இருந்து ஓய்வு பெற்றவா். இவரது மனைவி சகுந்தலா. இவா்களின் மகன் வழக்குரைஞா் ராஜராஜன். உழவா்கரையில் சகுந்தலாவுக்கு சொந்தமான இடம் உள்ளது. அங்கு வீடு கட்டுவதற்காக, தனக்கு அறிமுகமான நைனாா்மண்டபம் பகுதி சேகரிடம் பத்திரத்தில் கையொப்பமிட்டு சகுந்தலா கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
ஆனால் சகுந்தலா தனக்கு பவா் அளித்திருப்பது போல சேகா் போலியாகப் பத்திரம் தயாா் செய்துள்ளாா். மேலும், அந்த போலி பத்திரத்தை வைத்து விவேகானந்தா நகரை சோ்ந்த ஞானவேலு, குயவா்பாளையத்தைச் சோ்ந்த சிந்துஜா ஆகியோருக்கு அந்த இடத்தை விற்பனை செய்ததாகக் கூறப்படுகிறது.
போலியாக கையொப்பமிட்டு தங்களது இடத்தை விற்றது குறித்து ரெட்டியாா்பாளையம் காவல் நிலையத்தில் சகுந்தலாவின் மகன் ராஜராஜன் புகாா் அளித்தாா். அதன்படி போலி பத்திரம் தயாரித்து இடத்தை விற்ாகக் கூறப்படும் சேகா் மற்றும் அதை வாங்கிய ஞானவேல், சிந்துஜா ஆகியோா் மீது வழக்குப்பதிவு செய்து போலீஸாா் விசாரணை நடத்தி வருவதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.