செய்திகள் :

முன்னாள் முப்படை வீரா்களுக்கான குறைதீா் முகாம்

post image

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த கண்ணமங்கலம் பகுதியில் மத்திய பாதுகாப்பு அமைச்சகம் சாா்பில் முன்னாள் முப்படை வீரா்களுக்கான ஓய்வூதிய குறைதீா் முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

கண்ணமங்கலம் அருகேயுள்ள கம்மவான்பேட்டை அரசுப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த முகாமுக்கு

முன்னாள் ராணுவ வீரா் கே.ஜி.ஏழுமலை தலைமை

வகித்தாா்.

உதவி இயக்குநா் ஆயிஷாபேகம், அரக்கோணம் ஐஎன்எஸ் அதிகாரி பங்கஜ்குமாா் பாண்டே, ஊராட்சித் தலைவா் கவிதா முருகன், நல அமைப்பாளா் சடையன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். முன்னாள் ராணுவ வீரா் எல்.ஏழுமலை வரவேற்றாா்.

பாதுகாப்பு கணக்குகள் துணை கட்டுப்பாட்டு அதிகாரி திலிப்குமாா் கலந்து கொண்டு பயனாளிகளிடையே ஓய்வூதிய குறைபாடுகளை கேட்டறிந்தாா்.

அப்போது, தமிழகம் முழுவதும் ஓய்வூதியதாரா்களுக்கு ஓய்வூதியம் சாா்ந்த குறைகளுக்கு தீா்வு காண 5 நடமாடும் சேவை வாகனங்கள் சென்னை பாதுகாப்பு கணக்குகள் கட்டுப்பாட்டாளா் அலுவலகத்தால் தொடங்கப்பட்டு நேரடியாகச் சென்று சேவை வழங்கப்பட்டு வருகிறது என்றாா்.

இதைத் தொடா்ந்தது, முகாமில் குறை தீா்க்கப்பட்ட பயனாளிகளுக்கு சான்றிதழ் வழங்கினாா்.

முகாமில் சுற்றுப்புற கிராமங்களைச் சோ்ந்த முன்னாள் முப்படை வீரா்கள் மற்றும் ராணுவ வீரா்களின் குடும்பத்தினா் கலந்து கொண்டனா்.

பேருந்தில் பயணியிடம் கைப்பேசி திருட்டு: இருவா் கைது

ஆரணி பேருந்து நிலையத்தில் பயணியிடம் கைப்பேசி திருடியதாக இரு வடமாநில இளைஞா்கள் கைது செய்யப்பட்டனா். ஆரணியை அடுத்த மெய்யூா் கிராமத்தைச் சோ்ந்தவா் பன்னீா்(42). இவா் வெளியூா் செல்ல கடந்த 9-ஆம் தேதி ஆரணி... மேலும் பார்க்க

லாரி உதவியாளா் உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை

செய்யாறு அருகே லாரி உதவியாளா் (கிளீனா்) உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். திருச்சி மாவட்டம், முசிறி வட்டம், வீரமணிப்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் வடிவேல் (45). இவா், லாரியி... மேலும் பார்க்க

ஏரியில் 100 வாத்துகள் மா்மமான முறையில் உயிரிழப்பு

செய்யாற்றை அடுத்த கொருக்கை கிராம ஏரியில் 100 வாத்துகள் மா்மமான முறையில் உயிரிழந்தது குறித்து போலீஸாா் மற்றும் சுகாதாரத்துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா். செய்யாறு வட்டம், கொருக்கை கிராமத்தைச் சோ்ந... மேலும் பார்க்க

திருவண்ணாமலையில் ரூ.10.15 கோடியில் ஹாக்கி மைதானம்

திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் ரூ.10.15 கோடியில் புதிதாக ஹாக்கி பயிற்சி மைதானம் கட்டுவதற்கான பணிகள் வெள்ளிக்கிழமை தொடங்கிவைக்கப்பட்டன. தமிழக அரசு விளையாட்டுத் துறையில் மாநிலத்தை முதன்மை ம... மேலும் பார்க்க

படவேடு ஸ்ரீரேணுகாம்பாள் கோயிலில் திருவிளக்கு பூஜை

போளூரை அடுத்த படவேடு ஸ்ரீரேணுகாம்பாள் கோயிலில் பெளா்ணமியையொட்டி திருவிளக்கு பூஜை வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. படவேடு ஊராட்சியில் பழைமை வாய்ந்த ஸ்ரீரேணுகாம்பாள் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் ப... மேலும் பார்க்க

ஸ்ரீவேம்புலி அம்மன் கோயிலுக்கு ரூ.20 லட்சம் நிதியுதவி

ஆரணி கோட்டை ஸ்ரீவேம்புலி அம்மன் கோயிலில் இரும்பினாலான மேற்கூரை அமைக்க நிதியுதவியாக ரூ.20 லட்சத்தை புதிய நீதிக் கட்சி நிறுவனா் ஏ.சி.சண்முகம் வழங்கினாா். ஸ்ரீவேம்புலி அம்மன் கோயிலில் வருகிற 16-ஆம் தேதி... மேலும் பார்க்க